வெள்ளி வசந்தம்
Monday, 14 December 2020
மஸ்ஜிதுக்கு உதவுவதின் சிறப்பு!
Friday, 6 November 2020
12- மாநபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த முத்தான மூன்று போதனைகள்!
12-மஸ்ஜிதில் இருப்பதினால் கிடைக்கும் மூன்று பலன்கள்!
عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ لِلْمَسَاجِدِ أَوْتَادًا، اَلْمَلاَئِكَةُ جُلَسَاؤُهُمْ، إِنْ غَابُوا يَفْتَقِدُونَهُمْ، وَإِنْ مَرِضُوا عَادُوهُمْ، وَإِنْ كَانُوا فِي حَاجَةٍ أَعَانُوهُمْ، وَقَالَ! : جَلِيسُ الْمَسْجِدِ عَلَي ثَلاَثِ خِصَالٍ: أَخٌ مُسْتَفَادٌ، أَوْ كَلِمَةٌ مُحْكَمَةٌ، أَوْ رَحْمَةٌ مُنْتَظَرَةٌ. رواه احمد:٢ /٤١٨
ஹள்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:
நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
மஸ்ஜிதுகளுக்கென முளைக்கம்புகள் உள்ளன. (எம்மக்கள் பள்ளியில் ஒன்று கூடுவதை வழமையாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள் பள்ளியின் முளைக்கம்புகள்).
மலக்குகள் அவர்களுடன் அமர்கிறார்கள், பள்ளியில் அவர்கள் இல்லையென்றால் அவர்களைத் தேடுகின்றனர், அவர்கள் நோயுற்றால் அவர்களை சுகம் விசாரிக்கின்றனர். ஏதேனும் தேவை கருதி அவர்கள் வெளியில் சென்றால் அவர்களுக்கு உதவுகின்றனர்.
பள்ளியில் இருப்பவர்கள் மூன்று பலன்களில் ஏதேனும் ஒன்றை அடைந்து கொள்கின்றனர்.
(முஸ்லிம்) சகோதரரைச் சந்தித்து மார்க்கப் பலன் அடைந்து கொள்கின்றனர், அல்லது மார்க்க ஞானம் கேட்டுப் பெறுகின்றனர், அல்லது ஒவ்வொரு முஸ்லிமும் எதிர்பார்க்கும் அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கிறது''.
நூல் : முஸ்னத் அஹ்மத்
11- மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்
11- அல்லாஹ் நேசித்து ஆனந்தமடையும் மூன்று நபர்கள்!
عَنْ أَبِي الدَّرْدَاءِ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: ثَلاَثَةٌ يُحِبُّهُمُ اللهُ وَيَضْحَكُ إِلَيْهِمْ وَيَسْتَبْشِرُ بِهمْ: الَّذِي إِذَا انْكَشَفَتْ فِئَةٌ قَاتَلَ وَرَاءَهَا بِنَفْسِهِ لِلّهِ فَإِمَّا أَنْ يُقْتَلَ وَإِمَّا أَنْ يَنْصُرَهُ اللهٌ وَيَكْفِيَهُ فَيَقُولُ: انْظُرُوا إِلَي عَبْدِي هذَا كَيْفَ صَبَرَ لِي بِنَفْسِهِ؟ وَالَّذِي لَهُ امْرَأَةٌ حَسَنَةٌ وَفِرَاشٌ لَيِّنٌ حَسَنٌ فَيَقُومُ مِنَ اللَّيْلِ فَيَقُولُ: يَذَرُ شَهْوَتَهُ وَيَذْكُرُنِي وَلَوْشَاءَ رَقَدَ، وَالَّذِي إِذَا كَانَ فِي سَفَرٍ وَكَانَ مَعَهُ رَكْبٌ فَسَهِرُوا ثُمَّ هَجَعُوا فَقَامَ مِنَ السَّحَرِ فِي ضَرَّاءَ وَسَرَّاءَ. رواه الطبراني في الكبير باسناد حسن الترغيب:١/٤٣٤
ஹள்ரத் அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
மூன்று நபர்களை அல்லாஹ் நேசிக்கிறான், அவர்களைக் கண்டு அளவில்லா ஆனந்தம் அடைகிறான்.
முதலாமவர், தமது தோழர்கள் யாவரும் போர்க்களத்தை விட்டு ஓடிய பின்னும் தனித்து நின்று அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடிப் போரிடுபவர். பிறகு அவர் ஷஹீத் ஆகிவிடலாம் அல்லது அல்லாஹ் அவருக்கு உதவி செய்தால் வெற்றி கிடைத்துவிடலாம். அல்லாஹ், (மலக்குகளிடம்) எனது இந்த அடியானைப் பாருங்கள்! எனது பொருத்தத்தை நாடி எவ்வாறு போர்க்களத்தில் உறுதியாகத் தனித்து நின்று போரிடுகிறார்!'' என்று கூறுகிறான்.
இரண்டாமவர், தனக்கு அருகில் அழகிய மனைவி இருக்க மிருதுவான படுக்கையும் இருக்க (இவையனைத்தையும் விட்டுவிட்டு) தஹஜ்ஜத் தொழுகையில் ஈடுபடும் நபர், பாருங்கள்! தனது ஆசைகளை விட்டுவிட்டு என்னை நினைப்பதில் ஈடுபட்டுள்ளார், அவர் விரும்பினால் தூங்கியிருக்க முடியும்!'' என்று அல்லாஹ் கூறுகிறான்.
மூன்றாமவர், ஒரு கூட்டத்தாருடன் பயணம் செய்கிறார், அக்கூட்டத்தினர் இரவில் நெடுநேரம் விழித்திருந்த பின் தூங்கிவிட, அவர் மட்டும் இரவின் கடைசிப் பகுதியில் அவர் மனம் விரும்பியோ, விரும்பாமலோ தஹஜ்ஜத் தொழுகைக்கு நின்றுவிடும் நபர்''.
நூல் :தபரானி, தர்ஙீப்
10- மாநபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த முத்தான மூன்று போதனைகள்!
10- ஷைத்தான் போடும் மூன்று முடிச்சுகள்!
عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ قَالَ: يَعْقِدُ الشَّيْطَانُ عَلَي قَافِيَةِ رَأْسِ أَحَدِكُمْ إِذَا هُوَ نَامَ ثَلاَثَ عُقَدٍ يَضْرِبُ مَكَانَ كُلِّ عُقْدَةٍ: عَلَيْكَ لَيْلٌ طَوِيلٌ فَارْقُدْ، فَإِنِ اسْتَيْقَظَ فَذَكَرَ اللهَ انْحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ تَوَضَّأَ انْحَلَّتْ عُقْدَةٌ، فَإِنْ صَلَّي انْحَلَّتْ عُقَدُهُ، فَأَصْبَحَ نَشِيطاً طَيِّبَ النَّفْسِ، وَإِلاَّ أَصْبَحَ خَبِيثَ النَّفْسِ كَسْلاَنَ. رواه ابوداؤد باب قيام الليل، رقم:١٣٠٦. وفي رواية ابن ماجه: فَيُصْبِحُ نَشِيطاً طَيِّبَ النَّفْسِ قَدْ أَصَابَ خَيْرًا، وَإِنْ لَمْ يَفْعَلْ أَصْبَحَ كَسِلاً خَبِيثَ النَّفْسِ لَمْ يُصِبْ خَيْرًا. باب ماجاء في قيام الليل
ஹள்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
உங்களில் யாரேனும் தூங்க ஆரம்பித்தால் ஷைத்தான் அவரது பிடரியில் மூன்று முடிச்சுகள் போடுகிறான். ஒவ்வொரு முடிச்சியிலும், நீண்ட இரவு மீதம் இருக்கிறது, இன்னும் தூங்கு'' என்று ஊதுகிறான்.
அம்மனிதர் எழுந்து அல்லாஹ்வை திக்ரு செய்தால் ஒரு முடிச்சு அவிழ்ந்துவிடுகிறது, உளூச் செய்ததும் இரண்டாவது முடிச்சும் அவிழ்ந்துவிடுகிறது, பிறகு தஹஜ்ஜத் தொழுதுவிட்டால், அணைத்து முடிச்சுகளும் அவிழ்ந்துவிடுகின்றன.
அவர் காலையில் எழும்போது, சுறுசுறுப்பாகவும், உற்சாகத்துடனும் எழுகிறார், அவருக்கு மாபெரும் நன்மை கிடைத்துவிடுகிறது, தஹஜ்ஜத் தொழவில்லையென்றால் உடலும் உள்ளமும் சோர்வுற்று இருப்பார், மாபெரும் நன்மையை இழந்துவிடுவார்".
நூல் : அபூதாவூத், இப்னுமாஜா
09- மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த முத்தான மூன்று போதனைகள்!
09- கியாமத் நாளில் கஸ்தூரி மேடை மீது அமர்ந்திருக்கும் மூன்று வகையினர்!
عَنْ عَبْدِاللهِ بْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: ثَلاَثَةٌ عَلَي كُثْبَانِ الْمِسْكِ - أُرَاهُ قَالَ - يَوْمَ الْقِيَامَةِ يَغْبِطُهُمُ اْلاَوَّلُونَ وَاْلآخِرُونَ: رَجُلٌ يُنَادِي بِالصَّلَوَاتِ الْخَمْسِ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ، وَرَجُلٌ يَؤُمُّ قَوْماً وَهُمْ بِهِ رَاضُونَ، وَعَبْدٌ أَدَّي حَقَّ اللهِ وَحَقَّ مَوَالِيهِ. رواه الترمذي وقال: هذا حديث حسن غريب باب احاديث في صفة الثلاثة الذين يحبهم اللّه رقم:٢٥٦٦
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிப்பதாவது:
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
மூன்று வகை மனிதர்கள் கியாமத் நாளில் கஸ்தூரி மேடைகளில் அமர்ந்திருப்பர், அவர்களைக் கண்டு முன்னோர், பின்னோர் யாவரும் பொறாமை கொள்வர்.
முதல் வகை மனிதர், இரவு பகலில் ஐந்து நேரத் தொழுகைகளுக்கு பாங்கு சொல்லி வந்தவர்.
இரண்டாம் வகை மனிதர், மக்கள் திருப்தியுற்ற நிலையில் மக்களுக்குத் தொழ வைத்த இமாம்.
மூன்றாம் வகை மனிதர், அல்லாஹ் வின் கடமைகளையும் நிறைவேற்றி தனது எஜமானனுடைய கடமைகளையும் நிறைவேற்றி வந்த அடிமை''.
நூல் :திர்மிதீ
08-மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய முத்தான மூன்று போதனைகள்!
08-தொழுகைக்கு மூன்று பகுதிகள் உள்ளன!
عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: الصَّلاَةُ ثَلاَثَةُ أَثْلاَثٍ: الطُّهُورُ ثُلُثٌ، وَالرُّكُوعُ ثُلُثٌ، وَالسُّجُودُ ثُلُثٌ، فَمَنْ أَدَّاهَا بِحَقِّهَا قُبِلَتْ مِنْهُ وَقُبِلَ مِنْهُ سَائِرُ عَمَلِهِ، وَمَنْ رُدَّتْ عَلَيْهِ صَلاَتُهُ رُدَّ عَلَيْهِ سَائِرُ عَمَلِهِ. رواه البزار وقال:لانعلمه مرفوعا الا عن المغيرة ابن مسلم قلت: والمغيرة ثقة واسناده حسن مجمع الزوائد:٢ /٣٤٥
ஹள்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
தொழுகைக்கு மூன்று பகுதிகள் உள்ளன, (அம்மூன்று பகுதிகளைச் சரியாக நிறைவேற்றினால் தொழுகையின் நன்மைகள் பூரணமாகக் கிடைக்கும்).
சுத்தமாக இருப்பது மூன்றில் ஒரு பகுதி, ருகூ செய்வது மூன்றில் ஒரு பகுதி, ஸஜ்தாச் செய்வது மூன்றில் ஒரு பகுதி.
எவர் ஒழுக்கங்களைப் பேணித் தொழுகிறாரோ, அவருடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுகிறது, அவரது மற்ற அமல்களும் ஏற்றுக் கொள்ளப் படுகின்றன. எவரது தொழுகை (சரியில்லாததால்) ஏற்றுக் கொள்ளப்பட வில்லையோ, அவரது மற்ற அமல்களும் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை''.
நூல்:பஸ்ஸார், மஜ்மஉஸ்ஸவாயித்
07-மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த முத்தான மூன்று போதனைகள்!
07-கியாமத்தில் பயமோ திடுக்கமோ இல்லாத மூன்று நபர்கள்!
عَنِ ابْنِ عُمَرَ ؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: ثَلاَثَةٌ لاَ يَهُولُهُمُ الْفَزَعُ اْلاَكْبَرُ، وَلاَ يَنَالُهُمُ الْحِسَابُ، هُمْ عَلَي كَثِيبٍ مِنْ مِسْكٍ حَتَّي يُفْرَغَ مِنْ حِسَابِ الْخَلاَئِقِ: رَجُلٌ قَرَأَ الْقُرَانَ ابْتِغَاءَ وَجْهِ اللهِ وَأَمَّ بِهِ قَوْماً وَهُمْ رَاضُونَ بِهِ، وَدَاعٍ يَدْعُو إِلَي الصَّلَوَاتِ ابْتِغَاءَ وَجْهِ اللهِ، وَعَبْدٌ أَحْسَنَ فِيمَا بَيْنَهُ وَبَيْنَ رَبِّهِ وَفِيمَا بَيْنَهُ وَبَيْنَ مَوَالِيهِ. رواه الترمذي باختصار وقد رواه الطبراني في الاوسط والصغير وفيه عبد الصمد بن عبد العزيز المقري ذكره ابن حبان في الثقات مجمع الزوائد:٢/٨٥
ஹள்ரத் அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிப்பதாவது:
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
மூன்று மனிதர்களுக்கு கியாமத் நாளின் கடும் திடுக்கத்தின் பயமோ, கேள்வி கணக்கோ கிடையாது.
படைப்பினங்கள் யாவும் தமது கேள்வி கணக்குகளை முடித்துக் கொள்ளும் வரை அவர்கள் கஸ்தூரி மேடைகளின் மேல் உல்லாசமாகச் சுற்றித் திரிவார்கள்.
முதலாமவர், அல்லாஹ் வின் பொருத்தத்திற்காக குர்ஆன் ஓதி, அவருக்குப் பின் நின்று தொழுதவர்கள் அவர் மீது திருப்தியுற்ற நிலையில் தொழவைத்த இமாம்.
இரண்டாமவர், அல்லாஹ் வின் பொருத்தத்திற்காக மக்களைத் தொழுகைக்கு அழைத்தவர்.
மூன்றாமவர், தன் இரட்சகனின் கடமைகளையும் நல்ல முறையில் ஆற்றி-தன் எஜமானின் கடமைகளையும் நன்முறையில் நிறைவேற்றிய அடிமை''.
நூல் : திர்மிதீ, தப்ரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்