ஒவ்வொருமனிதனுக்கும் எண்ணற்ற ஆசைகளும் உண்டு. எல்லையற்ற ஆசைகளும் உண்டு. மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை பொருளாசை பதவியாசை புகழாசை என்று அவனின் ஆசைப்பட்டியல் நீளமானதாகும். ஆனாலும் அவன் அதிகம் ஆசைப்படுவது தன் உயிரைத்தான்.
எனவேதான் அவனுடைய உயிருக்கோ உடலுக்கோ ஏதேனும் ஆபத்தென்றால் அதைவிட்டும் தன்னை தற்காத்துக்கொள்ள என்ன செய்யவும் தயாராகிவிடுகிறான். எவ்வளவு செலவு செய்யவும் தயாராகின்றான்.ஆக உடலையும் உயிரையும் பாதுகாத்து நீண்ட நாள் வாழ வேண்டும் என்பதே அனைவரின் ஆசையாகும்.
அதனால் தான் ஒரு குழந்தை பிறந்தவுடன் அதிக ஆயுளுடன் வாழ்ந்திட துஆ செய்வதும், திருமணத் தம்பதிகளை வாழ்த்தி துஆ செய்யும் போதும்"சகல சுகங்களும் பெற்று பல்லாண்டுகள் வாழுங்கள்" என்று வாழ்த்துவதும் வழக்கத்தில் உள்ளது.
அதே போல் திடீர் மரணம் ஏற்பட்டால் வருந்துகின்ற அதே நேரம் முதுமை கண்ட ஒருவர் இறந்து விட்டால் நிறை வாழ்வு கண்டு விட்டு, மனிதர் நிம்மதியாகச் சென்று விட்டார் என்றே சமூகம் பேசுகிறது.
நீடித்த ஆயுள் .
நீடித்த ஆயுளை விரும்புவது குற்றமல்ல. மாறாக அது வரவேற்கப்படவேண்டிய ஒன்று. எனவே தான் எல்லா ஸாலிஹீன்களும் இதை விரும்பி இருக்கின்றார்கள். நபிமார்களும் கூட இந்தபேற்றினை ஆசைப்பட்டிருக்கின்றார்கள்.
ஆதம் (அலை) அவர்கள்.
عن أبي هريرة قال : قال رسول الله صلى الله عليه وسلم : " لما خلق الله آدم ونفخ فيه الروح عطس فقال : الحمد لله فحمد الله بإذنه فقال له ربه : يرحمك الله يا آدم اذهب إلى أولئك الملائكة إلى ملأ منهم جلوس فقل : السلام عليكم . فقال : السلام عليكم . قالوا : عليك السلام ورحمة الله . ثم رجع إلى ربه فقال : إن هذه تحيتك وتحية بنيك بينهم . فقال له الله ويداه مقبوضتان : اختر أيتهما شئت ؟ فقال : اخترت يمين ربي وكلتا يدي ربي يمين مباركة ثم بسطها فإذا فيها آدم وذريته فقال : أي رب ما هؤلاء ؟ قال : هؤلاء ذريتك فإذا كل إنسان مكتوب عمره بين عينيه فإذا فيهم رجل أضوؤهم - أو من أضوئهم - قال : يا رب من هذا ؟ قال : هذا ابنك داود وقد كتبت له عمره أربعين سنة . قال : يا رب زد في عمره . قال : ذلك الذي كتبت له . قال : أي رب فإني قد جعلت له من عمري ستين سنة . قال : أنت وذاك . قال : ثم سكن الجنة ما شاء الله ثم أهبط منها وكان آدم يعد لنفسه فأتاه ملك الموت فقال له آدم : قد عجلت قد كتب لي ألف سنة . قال : بلى ولكنك جعلت لابنك داود ستين سنة فجحد فجحدت ذريته ونسي فنسيت ذريته " قال : " فمن يؤمئذ أمر بالكتاب والشهود " رواه الترمذي
அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களைப் படைத்து அதனுள் தன்னுடை ரூஹை ஊதினான். அப்போது அவர்கள் தும்பினார்கள். பின்னர் "அல்ஹம்துலில்லாஹ்" என்று அல்லாஹ்வின் அனுமதியோடு அல்லாஹ்வை புகழ்ந்தார்கள். அதற்கு அல்லாஹ்" யர்ஹமுகல்லாஹ் யா ஆதம்" என்று கூறினான்.
பிறகு "ஆதமே! அங்கு அமர்ந்திருக்கின்ற மலக்குமார்களிடம் சென்று அவர்களுக்கு "அஸ்ஸலாமு அலைக்கும் " என்று சொல்வீராக! என்று அல்லாஹ் கூறினான். ஆதம் (அலை) அவர்கள் சென்று மலக்குமார்களுக்கு "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறினார்கள். அதற்கு மலக்குமார்கள் "வஅலைக்குமுஸ்ஸலாம்" என்று பதில் கூறினார்கள். பிறகு, ஆதம் (அலை) தம்முடைய ரப்பிடம் திரும்பி வந்தார்கள். அப்போது அல்லாஹ், ஆதமே! இது தான் உம்முடைய மற்றும் உம் சந்ததிகளுடைய "முகமன் " ஆகும் என்று கூறினான்.
பிறகு அல்லாஹ் தன் இரு கைகளையும் மூடி வைத்துக் கொண்டு ''ஆதமே! எனது இரு கைகளில் எதை விரும்புகிறீரோ அதை தேர்வு செய்யுங்கள்" என்றான்.அப்பொழுது ஆதம் நபி (அலை) அவர்கள் இறைவனின் வலது கையை தேர்வு செய்து விட்டு என் ரப்பின் இரு கைகளுமே பரக்கத்தான வலக்கைகள்தான் என்றார்கள். அப்பொழுது அல்லாஹ் இருகைகளையும் விரித்தான். அதிலே ஆதம் (அலை) அவர்களின் தோற்றமும் அவர்களின் சந்ததிகளின் தோற்றங்களும் இருந்தன.
என் ரப்பே! இவர்கள் யார்? என்று கேட்டார்கள். இவர்கள் அனைவரும் உமது சந்ததிகள் என்றான் . அதிலே ஒவ்வொரு மனிதனின் வயதும் இரு கண்களுக்கு இடையில் பதிவு செய்யப்பட்டிருந்தது. அவற்றில் ஒரு மனிதருடைய தோற்றம் மிக பிரகாசமாக இருந்தது. அதை கண்ட ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் இந்த மனிதர் யார்? என்று கேட்ட பொழுது, "இவர் உன்னுடைய சந்ததியில் பிறக்கவிருக்கும் தாவூது என்பவராவார். நான் அவருக்கு 40 வயதை எழுதி இருக்கின்றேன் " என்று அல்லாஹ் கூறினான்.
அப்பொழுது ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் அவரின் ஆயுளை அதிகப்படுத்து என்றார்கள். அதற்கு அல்லாஹ் "நான் அவரின் ஆயுளை தீர்மானித்து விட்டேன். எனவே நான் அதை அதிகப்படுத்த மாட்டேன்" என்று கூறினான். .உடனே ஆதம் (அலை) அவர்கள்அல்லாஹ்விடம் "ரப்பே! என் வயதில் 60 வயதை அவருக்கு நான் கொடுக்க தயாராக இருக்கின்றேன்" என்று கூறிய பொழுது, அல்லாஹ் அதை ஏற்றுக் கொண்டான். ஆதமின் 60 வயதை தாவூதுக்கு கொடுப்பதாக சொல்லி விட்டான்.
இதற்குப் பின் ஆதம்நபி (அலை) அவர்கள் சொர்க்கத்தில் தங்கினார்கள். பின்பு அதை விட்டும் இறங்கி உலகத்திற்கு வந்து விட்டார்கள். உலகத்திற்கு வந்த பின் தனது வயதை கணக்கிட்டுக் கொண்டே இருந்தார்கள். அவர்களின் வயது 940 அடைந்த பொழுது மலக்குல் மவ்த் அவர் உயிரை கைப்பற்ற வந்தார்கள். அவரிடம் ஆதம் (அலை) அவர்கள் "எனக்கு ஆயிரம் வயது எழுதப்பட்டிருக்கின்றது. ஆனால் நீர் அவசரப்பட்டு முன்னாடியே வந்துவிட்டீர் " என்று கூறினார்கள். மலக்கு சொன்னார், அது உண்மைதான் ஆனாலும் நீங்கள் உங்கள் மகன் தாவுதுக்கு 60 வயதை கொடுத்துவிட்டீர்கள் என்று கூறினார்.அதை ஆதம் நபி மறுத்தார் மறந்துவிட்டார். எனவே அவரின் சந்ததிகளித்திடலும் மறுக்கவும் மறதி நிலையும் உண்டானது"என நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
இதற்கு பின் தான் மக்கள் ஒப்பந்தம் உடன்படிக்கை போன்றவற்றை எழுதவும் சாட்சிகளை நியமிக்கவும் ஏவப்பட்டார்கள்.
(நூல். திர்மிதி. மிஷ்காத்.)
ஆதம் (அலை) அவர்களுக்கு 1000 வயதை பூர்த்தியாக்கியதாகவும், தாவூத் நபிக்கு 100 வயதை பூர்த்திசெய்ததாகவும் மஜ்மவுஸ் ஸவாயித் எனும் நூலில் ஒரு ஹதீஸ் வந்துள்ளது..
மூஸா (அலை)அவர்கள்.
عن أَبِي هُرَيْرَةَ قَالَ أُرْسِلَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلَام فَلَمَّا جَاءَهُ صَكَّهُ فَفَقَأَ عَيْنَهُ فَرَجَعَ إِلَى رَبِّهِ فَقَالَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَا يُرِيدُ الْمَوْتَ فَرَدَّ اللَّهُ عَزَّ وَجَلَّ إِلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ إِلَيْهِ فَقُلْ لَهُ يَضَعُ يَدَهُ عَلَى مَتْنِ ثَوْرٍ فَلَهُ بِكُلِّ مَا غَطَّتْ يَدُهُ بِكُلِّ شَعْرَةٍ سَنَةٌ قَالَ أَيْ رَبِّ ثُمَّ مَهْ قَالَ الْمَوْتُ قَالَ فَالْآنَ فَسَأَلَ اللَّهَ عَزَّ وَجَلَّ أَنْ يُدْنِيَهُ مِنْ الْأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَوْ كُنْتُ ثَمَّ لَأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ تَحْتَ الْكَثِيبِ الْأَحْمَرِ - النسائي
அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள். 'மலக்குல் மவ்த்' (உயிரை எடுத்துச் செல்லவரும் வானவர்) மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் அனுப்பப்பட்டார். தம்மிடம் அவர் வந்தபோது மூஸா(அலை) அவர்கள் அவரை (முகத்தில்) அறைந்துவிட்டார்கள். உடனே அவர் தம் இறைவனிடம் திரும்பிச் சென்று, 'மரணத்தை விரும்பாத ஓர் அடியாரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்" என்று கூறினார். இறைவன், 'நீ அவரிடம் திரும்பிச் சென்று அவரின் கையை ஒரு காளை மாட்டின் முதுகின் மீது வைக்கச் சொல். (அதன் முதுகிலுள்ள முடிகளில் எந்த அளவிற்கு) அவரின் கரம் மூடுகிறதோ (அதில்) ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில் வாழ) அவருக்கு அனுமதி உண்டு (என்று சொல்.)' எனக் கூறினான். (அவ்வாறே அந்த வானவர் திரும்பிச் சென்று மூஸா(அலை) அவர்களிடம் கூறிய போது) அவர், 'இறைவா! (அத்தனை காலம் வாழ்ந்து முடிந்த) பிறகு என்ன நடக்கும்?' என்று கேட்டார்கள். இறைவன், 'மரணம் தான்" என்று பதிலளித்தான். மூஸா(அலை) அவர்கள், 'அப்படியென்றால் இப்போதே என் உயிரை எடுத்துக் கொள்" என்று கூறிவிட்டு, (பைத்துல் முகத்தஸ் என்னும்) புனித பூமிக்கு நெருக்கமாக , அதிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தம் அடக்கத் தலம் அமைந்திடச் செய்யுமாறு அல்லாஹ்விடம் வேண்டினார்கள். (இதை எடுத்துரைத்த போது) இறைத்தூதர் ﷺ அவர்கள், 'நான் அங்கு (பைத்துல் முகத்தஸில்) இருந்திருந்தால் சாலையோரமாக செம்மணல் குன்றின் கீழே அவரின் மண்ணறை இருப்பதை உங்களுக்கு காட்டியிருப்பேன்" என்று கூறினார்கள்.
(நூல். நஸயி. 2063)
இப்றாஹீம் (அலை) அவர்கள்.
أن ملك الموت عليه السلام جاء الى ابراهيم عليه السلام خليل الرحمن عز وجل ليقبض روحه 0 فقال ابراهيم *ياملك الموت هل رأيت خليلا يقبض روح خليله ؟ فعرج ملك الموت عليه السلام الى ربه فقال *قل له *هل رأيت خليل يكره لقاء خليله ؟ فرجع فقال*اقبض روحى الساعه
التذكرة للامام القرطبى
நபி இப்ராஹீம் அலை அவர்களின் உயிரை கைப்பற்ற வந்த மலகுல்மவ்த்திடம்-ஒரு நண்பன் தன் நண்பனின் உயிரை எடுப்பானா?என்று கேட்கிறார். மலகுல் மவ்த் அவர்கள் இந்த கேள்வியை தன் ரப்பிடம் கூறியபோது-ஒரு நண்பன் தன் நண்பனை சந்திக்க வெறுப்பானா?என்று அல்லாஹ் திருப்பிக்கேட்டானாம்.
அர்த்தமுள்ள வாழ்க்கை.
உலகில் நாம் அதிக நாட்கள் வாழ்வது மட்டும் வெற்றியல்ல. மாறாக அவ்வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும். அதுதான் உண்மையில் மகத்தான - முழுமையான வெற்றியாகும்.
வியாபாரிகளுக்கு பண்டிகை, திருவிழாக்கள் சீசன் காலமாக அமைகின்றன. விவசாயிகளுக்கு மழைக் காலங்கள் சீசன் காலமாகத் திகழ்கின்றது. இவர்கள் இவைகளைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் முஸ்லிம்களுக்கு உலகில் வாழ்கின்ற ஒவ்வொரு விநாடியும் சீசன் காலங்கள் தான். எனவே அல்லாஹ் நமக்கு வழங்கி இருக்கின்ற ஒவ்வொரு விநாடியையும் பயனுள்ளதாக ஆக்கிக் கொள்ள வேண்டும்.
நபி ﷺ அவர்கள்
حَيَاتَكَ قَبْلَ مَوْتِكَ
"மரணம் வரும் முன் உங்கள் வாழ்க்கையை பொக்கிஷமாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்" என்று கூறினார்கள்.
மனிதர்களில் சிறந்தவரும் பாக்கியசாலியும் யார்?
حَدَّثَنَا أَبُو صَالِحٍ ، نا سُلَيْمَانُ ، ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ ، عَنْ أَبِي بَكْرَةَ ، أَنَّ رَجُلا قَالَ : يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ خَيْرٌ ؟ قَالَ : " مَنْ طَالَ عُمْرُهُ وَحَسُنَ عَمَلُهُ " . قَالَ : يَا رَسُولَ اللَّهِ فَأَيُّ النَّاسِ شَرٌّ ؟ قَالَ : " مَنْ طَالَ عُمْرُهُ وَسَاءَ عَمَلُهُ " .
நபி ﷺ அவர்களிடம் யாரஸூலல்லாஹ்! சிறந்த மனிதர் யார்? என்று வினவப்பட்டது. அதற்கு நபி ﷺ அவர்கள்" நீண்ட காலம் வாழ்ந்து நற்செயல்கள் புரிந்தவரே"என்று பதிலளித்தார்கள். கேள்வி தொடர்ந்தது. யாரஸூலல்லாஹ்! தீய மனிதர் யார்? அதற்கு நீண்ட காலம் வாழ்ந்து தீய செயல்கள் புரிபவரே! என்று நபி ﷺஅவர்கள் பதிலளித்தார்கள்.
ஒரு வார இடைவெளியில் ஒருவர் பின் ஒருவராக இறந்த இரண்டு நண்பர்களுக்கிடையில் அந்தஸ்து வேறுபாடு
عَنْ عُبَيْدِ بْنِ خَالِدٍ السُّلَمِيِّ أَنَّ رَسُولَ اللَّه
ِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آخَى بَيْنَ رَجُلَيْنِ فَقُتِلَ أَحَدُهُمَا وَمَاتَ الْآخَرُ بَعْدَهُ فَصَلَّيْنَا عَلَيْهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا قُلْتُمْ قَالُوا دَعَوْنَا لَهُ اللَّهُمَّ اغْفِرْ لَهُ اللَّهُمَّ ارْحَمْهُ اللَّهُمَّ أَلْحِقْهُ بِصَاحِبِهِ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَيْنَ صَلَاتُهُ بَعْدَ صَلَاتِهِ وَأَيْنَ عَمَلُهُ بَعْدَ عَمَلِهِ فَلَمَا بَيْنَهُمَا كَمَا بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ (نسائ) باب الدعاء-كِتَاب الْجَنَائِزِ عَنْ شُعْبَةَ : مَاتَ الآخَرُ بَعْدَهُ بِجُمُعَةٍ أَوْ نَحْوِهَا(شرح السنة
ஒரு வருட இடைவெளியில் மரணித்தவர்கள்.
وروى أحمد (8195) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : كَانَ رَجُلَانِ أَسْلَمَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتُشْهِدَ أَحَدُهُمَا وَأُخِّرَ الْآخَرُ سَنَةً . قَالَ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ : فَأُرِيتُ الْجَنَّةَ ، فَرَأَيْتُ فِيهَا الْمُؤَخَّرَ مِنْهُمَا أُدْخِلَ قَبْلَ الشَّهِيدِ ، فَعَجِبْتُ لِذَلِكَ ، فَأَصْبَحْتُ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( أَلَيْسَ قَدْ صَامَ بَعْدَهُ رَمَضَانَ ! وَصَلَّى سِتَّةَ آلافِ رَكْعَةٍ أَوْ كَذَا وَكَذَا رَكْعَةً ! صَلاةَ السَّنَةِ ) . صححه الألباني في السلسلة الصحيحة (2591) . وقال العجلوني في "كشف الخفاء" : إسناده حسن .
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்." இருவர் ஒரே நேரத்தில் முஸ்லிமானார்கள். ஒருவர் மார்க்கப் போரில் ஷஹீதாகி விட்டார். அடுத்தவர் ஒரு வருடத்திற்குப் பின் மரணமடைந்தார். தல்ஹதுப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். "ஷஹீதுக்குப் பிறகு ஒரு வருடம் கழித்து மரணமடைந்தவர் முதலில் சுவனத்தில் நுழைவதாக நான் கனவு கண்டேன். எனக்கு இந்த விஷயத்தில் ஆச்சரியம் ஏற்பட்டது. காலையில் இது பற்றி நபி (ِ ﷺ) அவர்களிடம் சொல்லப்பட்டது. அதற்கு நபி (ِ ﷺ ) அவர்கள் "அந்த ஷஹீதுக்குப் பிறகு ஒரு வருட ரமளான் நோன்பை அவர் நோற்கவில்லையா? ஒரு வருடத்தில் ஆறாயிரம் ரகஅத்துக(ள் கடமையான தொழுகை)களை அவர் தொழவில்லையா? இன்னும் இது போன்ற எத்தனையெத்தனையோ ரக்அத்துகள் இந்த ஒரு வருடத்தில் இவர் தொழவில்லையா? என்று கேட்டார்கள்.
(நூல் : அஹ்மத்)
தன்னை மறந்த மனிதன்.
வயது கூடக் கூட தன்னை சார்ந்துள்ளவர்களைப் பற்றிய கவலை தான் மனிதனுக்கு அதிகமாகி விடுகிறது. பிள்ளைகளுக்கு இன்னும் நிறைய சொத்து சேர்க்க வேண்டியுள்ளதே! பெண் பிள்ளை களுக்கு இன்னும் திருமணம் முடிக்கவில்லையே... வயது போய்க் கொண்டே இருக்கிறதே... என்று பரிதவிப்பார்கள். இவ்வாறு மற்றவர்களைப் பற்றிக் கவலைப்பட்டு தங்களை மறந்து விடுகிறார்கள்.
மண்ணுலகைக் கடந்தால் மண்ணறை மண்ணறையைக் கடந்தால் மஹ்ஷர் மஹ்ஷரைக் கடந்தால் சுவனம் அல்லது ....... ?
இந்த பெரும் பயணத்திற்கான ஆயத்த களம் தான் உலகம். இத்தனை வருடங்கள் உலகில் வாழ்ந்தும் ஏன் நல்லுணர்வு பெறவில்லை என்ற வினாவை மறுமையில் சந்திக்க நேரிடும்.
أَوَلَمْ نُعَمِّرْكُم مَّا يَتَذَكَّرُ فِيهِ مَن تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ ۖ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِن نَّصِيرٍ (37)
"நல்லுணர்வு பெறக்கூடியவன் நல்லுணர்வு பெறுவதற்கான போதுமான வாழ்நாளை உங்களுக்கு நாம் வழங்கவில்லையா?(அல்குர்ஆன்35:37) என்று நரகவாசிகளை நோக்கி விசாரிக்கப்படும் என்பது குர்ஆனின் கூற்றாகும்.
வயது அதிகமாகும் போது உழைப்பு, சம்பாத்தியத்திறன், சமுதாயத்தை புரிந்து கொள்ளுதல், பொருளாதார ஞானம் போன்ற பலவற்றில் நிபுணத்துவம் கூடுகிறது. ஆனால் தீன், இல்மு, அமல், மறுமை, கேள்வி கணக்கு இவற்றில் மட்டும் அப்பாவியாக இருந்தால் அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா?
عَنِ ابْنِ عَبَّاسٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : " إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ قِيلَ : أَيْنَ أَبْنَاءُ السِّتِّينَ ؟
"கியாமத் நாளில் அறுபது வயதுக்காரர்கள் எங்கே? என்று அறிவிப்பு கேட்கும்" என்று திருநபி ﷺஅவர்கள் கூறினார்கள்.
காரணம் 60-வயது வரை வாழ்ந்தும் மறுமைக்காகசுதாரித்துக் கொண்டார்களா? அல்லது கோட்டை விட்டு விட்டார்களா? என்பதை வெளிப்படுத்தத் தான்.
அறுபது வயதாகியும் தன்னை வணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்திக் கொள்ளாதவர் நாளை மறுமையில் எனக்கு இன்னும் வயது இருந்திருந்தால் அமல் செய்திருப்பேன் என்பது போன்ற சாக்குப்போக்குகளை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
عَنْ أَبِى هُرَيْرَةَ رضي الله عنه عَنِ النَّبِىِّ صلى الله عليه وسلم فَقَالَ أَعْذَرَ اللَّهُ إِلَى امْرِئٍ أَخَّرَ أَجَلَهُ حَتَّى بَلَّغَهُ سِتِّينَ سَنَةً (بخاري) باب مَنْ بَلَغَ سِتِّينَ سَنَةً فَقَدْ أَعْذَرَ اللَّهُ إِلَيْهِ فِى الْعُمُرِ- كتاب الرقاق (قَالَ العلماء:معناه لَمْ يَتْرُكْ لَهُ عُذراً إِذْ أمْهَلَهُ هذِهِ المُدَّةَ (شرح رياض الصالحين)
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்."எவருடைய தவணையை (ஆயுளை) அறுபது வயது வரை அல்லாஹ் பிற்படுத்தினானோ அவர் (அவ்வயதில் கூட நல் அமல்கள் செய்யாமல் இருந்தற்காக) கூறும் எந்த ஒரு காரணத்தையும் அல்லாஹ் ஏற்றுக்கொள்ள மாட்டான்" என நபி ﷺ அவர்கள் கூறினார்கள்.
(நூல் : புகாரி)
நல் அமல்கள் செய்வதை அறுபது வயது வரை பிற்படுத்திவிட்ட மனிதன் கூறும் எக்காரணத்திற்கும் அல்லாஹ் இடம் தரமாட்டான் என்பது இந்த ஹதீஸின் கருத்தாகும் என உலமாக்கள் கூறுகிறார்கள்.
(நூல் : ரியாலுஸ் ஸாலிஹீன் - 112).
உலக ஓட்டத்தில் தன் சுயத்தை இழந்து, உலகமே கதியென மாறி, தவனை முடிகிறபோதுதடுமாறி நிற்கும் அவலம் வந்து விடக் கூடாது.
நாலுகால் கட்டிலிலே நித்தம் நித்தம் தூக்கம் -
நாலு பேர் தூக்கையிலே நிரந்தரத் தூக்கம்.
என்பது போல, இருந்த காலத்தையெல்லாம் வீணாகக்கழித்து விட்டு, உயிர் அடங்கும் போது முட்டி மோதுவதில் எந்த பயனும் இல்லை.
மறுமையின் சொத்து:
மாவீரன் அலெக்சாண்டரைப் பற்றி ஒரு செய்தி சொல்லப்படுவதுண்டு. "எனது வெற்றிக்கு முன் இந்த உலகம் மிகச் சிறியது" என்று மார்தட்டிய அலெக்ஸாண்டர் தனது மரணத் தருவாயில் சொன்னார்." நான் இறந்து, என்னை சவப்பெட்டியில் வைத்து சுமந்து செல்லும் போது எனது இரு கரங்களையும் வெளியில் தொங்க விட்டவாறு தூக்கிச் செல்லுங்கள். உடனிருந்தவர்கள் காரணம் கேட்க, "தான் படை திரட்டி வெல்ல இந்த பூமிப் பந்து போதாது என்று கூறிய மன்னன் அலெக்ஸாண்டர் கூட இறந்த பிறகு வெறுங்கையோடு தான் இந்த உலகை விட்டுச் செல்கிறான் என்று மற்ற மனிதர்கள் விளங்கிக் கொள்ளட்டும்" என்றார்.
١٣٣- عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ أَنَّ رَسُولُ اللهِ ﷺ مَرَّ بِقَبْرٍ فَقَالَ: مَنْ صَاحِبُ هذَا الْقَبْرِ؟ فَقَالُوا: فُلاَنٌ فَقَالَ: رَكْعَتَانِ أَحَبُّ إِلَي هذَا مِنْ بَقِيَّةِ دُنْيَاكُمْ. رواه الطبراني في الاوسط ورجاله ثقات مجمع الزوائد:٢ /٥١٦
ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், ரஸூலுல்லாஹி (ِ ﷺ ) அவர்கள் ஒரு கப்ரைக் கடந்து செல்லும்போது, இது யாருடைய கப்ர்?'' என்று கேட்டார்கள், இன்ன மனிதருடைய கப்ர்'' என்று ஸஹாபாக்கள் பதில் கூறினார்கள். இம்மண்ணறையில் அடக்கம் செய்யப்பட்டிருக்கும் மனிதருக்கு இரண்டு ரக்அத் தொழுவது மீதமுள்ள உங்களுடைய அணைத்து உலகப் பொருட்களை விடவும் மிக்க பிரியமானது'' என்று நபி (ِ ﷺ ) அவர்கள் கூறினார்கள்.
( நூல் :தப்ரானி, மஜ்மஉஸ்ஸவாயித்)
ரஸூலுல்லாஹி (ِ ﷺ ) அவர்களின் இந்த ஹதீஸின் கருத்து, இரண்டு ரக்அத் தொழுகையின் மதிப்பு முழு உலகப் பொருட்களை விட உயர்ந்ததாகும் என்பதைப் பற்றிய சரியான ஞானம் கப்ருக்கு சென்ற பிறகு தான் வாங்கும் என்பதாகும்.
மரணித்த பிறகு அமல்கள் தான் பேசும். தங்கம் வெள்ளி நாணயங்களுக்கு மதிப்பில்லை. நாம் பெரிதாய்க் கருதி சேமித்து வைத்துள்ள செல்வத்தை விட இரண்டு ரகஅத் தொழுகையே மரணித்த பின்பு பெரிய செல்வமாகும்.
அல்லாஹ் நமக்கு வழங்கியுள்ள ஆயுளை அவனுக்கு உவப்பான வழியில் பயன்படுத்துவதே அறிவுடைமை.
٢- عَنْ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ ؒ مُرْسَلاً قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَا أُوحِيَ إِلَيَّ أَنْ أَجْمَعَ الْمَالَ وَأَكُونَ مِنَ التَّاجِرِينَ، وَلكِنْ أُوحِيَ إِلَيَّ أَنْ سَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِّنَ السّجِدِينَ وَاعْبُدْ رَبَّكَ حَتَّي يَأْتِيَكَ الْيَقِينُ. رواه البغوي في شرح السنة مشكوة المصابيح رقم: ٥٢٠٦
செல்வத்தைத் திரட்ட வேண்டும்; வியாபாரியாக ஆகவேண்டுமென்று எனக்குக் கட்டளையிடப்படவில்லை. மாறாக, நீர் உமது இரட்சகனைத் துதித்துக் கொண்டு தொழக் கூடியவர்களுடன் சேர்ந்து இருங்கள். மேலும், தங்களுக்கு மரணம் வரும்வரை உம் இரட்சகனின் வணக்கத்தில், ஈடுபட்டிருப்பீராக' என்றே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது'' என்று நபி (ِ ﷺ ) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் ஜூபைரிப்னு நுஃபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
(நூல்:ஷரஹுஸ்ஸுன்னா, மிஷ்காதுல் மஸாபீஹ்)
..وَ رَوَاهُ القَضَاعِيُّ فِي "مُسْنَدِ الشِّهَابِ" (2/1390) ، عَنْ عَمْرِو بْنِ الحَمِقِ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَ سَلَّمَ :
« إِذَا أَرَادَ اللهُ بِعَبْدٍ خَيْرًا اِسْتَعْمَلَهُ .، قِيلَ : يَا رَسُولَ اللهِ ، كَيْفَ يَسْتَعْمِلَهُ ؟ ، قَالَ : يَهْدِيهِ لِعَمَلٍ صَالِحٍ قَبْلَ مَوْتِهِ » .
"எவருக்கேனும் அல்லாஹ் நன்மையை நாடினால் அவரைப் பயன்படுத்திக் கொள்வான்" என்று நபி (ﷺ) அவர்கள் கூறிய போது யாரஸூலல்லாஹ்! பயன்படுத்துதல் என்றால் என்ன..? என்று ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ﷺ) அவர்கள் "அந்த மனிதர் மரணிக்கும் முன்பாகவே நல் அமல்கள் செய்வதற்கு அல்லாஹ் உதவி செய்வான்" என்று பதிலளித்தார்கள்.
உலக வாழ்வு என்பது சொர்க்கத்து வெற்றியின் பந்தயக் களம் ஆகும்.
வயது என்ற மணித்துளிகளை மண்ணாக்கிடாமல், மறுமையின் மகரந்தமாக்குவதே மனித அறிவின் அடையாளமாகும்.