Thursday, 29 September 2016

இன்று ஒரு செய்தி-38


இன்று ஒரு செய்தி-38
30/09/16/வெள்ளி
======================
நரகத்தை தடுக்கும் ண்ணீர்
======================

وعن أبي الجلد جيلان بن فروة قال قرأت في مسألة داود عليه السلام أنه قال :
إلهي ما جزاء من بكى من خشيتك حتى تسيل دموعه على وجنتيه ؟.
قال : جزاؤه أن أحرّم وجهه على لفح النار ، وأن أؤمنه يوم الفزع الأكبر.
     ஜீலான் இப்னு ஃபர்வா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

     “இறைத்தூதர் தாவூத் {அலை} அவர்கள் அல்லாஹ்விடம் “என் இறைவா! உன்னுடைய அச்சத்தால் தாரை, தாரையாய் கண்ணீர் வடிப்பவருக்கு நீ என்ன கூலி வழங்குவாய்” என்று கேட்டார்களாம்.

     அதற்கு, அல்லாஹ் “நரகத்தின் ஜுவாலை அவரின் முகத்தைக் கரிப்பதை நான் தடை செய்து விட்டேன். மேலும், திடுக்கங்கள் பல நிறைந்த மஹ்ஷர் பெருவெளியில் அவர்களுக்கு நான் நிம்மதியை நல்குவேன். இதுவே, அவர்களுக்கு நான் வழங்கும் மகத்தான கூலியாகும்.” என்று பதில் கூறினான்.

Wednesday, 28 September 2016

இன்று ஒரு செய்தி-37

இன்று ஒரு செய்தி-37
29/09/16/வியாழன்

இனிய குணத்தால் இனிதாய் வளரும் இஸ்லாம்.

روى ان ابا حنيفة كان له على بعض المجوس مال فذهب الى داره ليطالبه به فلما وصل الى باب داره وقع نعله على نجاسة فنفض نعله فانقلعت النجاسة عن نعله ووقعت على حائط دار المجوسى فتحير ابو حنيفة رحمه الله وقال ان تركتها كان ذلك شيأ يقبح جدار ذلك المجوسى وان حككتها احفر التراب من الحائط فدق الباب فخرجت الجارية فقال لها قولى لمولاك ان ابا حنيفة بالباب فخرج اليه وظن انه يطالبه بالمال واخذ يعتذر فقال ابو حنيفة رحمه الله ههنا ما هو اولى بالاعتذار وذكر قصة الجدار وانه كيف السبيل الى التطهير فقال المجوسى فانا ابدأ بتطهير نفسى فأسلم فى الحال
      இமாம்  அபூ ஹனிபா (ரஹ்)  அவர்கள் ஒரு நெருப்பை வணங்கும் மஜூஸிக்கு  கடன் கொடுத்திருந்தார்கள். அதை வாங்குவதற்காக அவன் வீட்டுக்கு சென்றார்கள்.

     அப்போது அவன் வீட்டுவாசலில்  நஜீஸ் கிடந்தது. அதில் எதிர்பாராவிதமாக அவர்களின் செருப்பு பட்டு  விட்டது. அதை உதறினார்கள். அந்த நஜீஸ் மஜூஸியின் வீட்டு சுவற்றில் தெரித்துவிட்டது. இதனால் அந்த அசிங்கத்தை எப்படி நீக்குவது என்று தெரியாமல் இமாம் அவர்கள் தடுமாறினார்கள்.

     அதை அப்படியே விட்டுவிட்டால் அது அவனுடைய சுவற்றை அசுத்தம் செய்ததாக அமைந்துவிடும். அதை நீக்குவதற்காக அந்த  மண் சுவற்றை சுரண்டினால் மண்  கொஞ்சம்  கீழே சிதறும். அதுவும்  அவனுக்கு செய்த அநீதியாகிவிடும். எனவே  அதற்காக  அவனிடம் மன்னிப்பு  கேட்பதை  தவிர  வேறு வழி இல்லை என்பதை உணர்ந்து  அவனுடைய வாசலை தட்டினார்கள்.

      அவனுடைய அடிமைப்பெண் வந்தாள். அவள்மூலம் அவனை அழைத்தார்கள். அந்த மஜூஸி வந்து  கடனை  அடைக்க பரிவுடன் அவகாசம் கேட்க முன்வந்த போது,

       இமாம் அபூ ஹனிஃபா (ரஹ்) அவர்கள்   "இப்போது அது முக்கியம் இல்லை" என்று கூறியதுடன், நஜீஸ் தொடர்பான அந்த  நிகழ்வை   அவனிடம் எடுத்து சொல்லி சுத்தம்  செய்ய வழி செய்,  அல்லது  என்னை மன்னித்துவிடு"   என்று  கூறினார்கள்.

      அவர்களின் இந்த உயர் குணத்தால் ஈர்க்கப்பட்ட  அந்த மஜூஸி  "நான் உள்ளத்தில் உள்ள  நஜீசை  சுத்தம்  செய்ய போகிறேன்" என்று கூறி  அந்த இடத்திலேயே முஸ்லிமாகி விட்டார்.

                            நூல் :  தப்சீர்  ரூஹுல் பயான்

இன்று ஒரு செய்தி-36


*இன்று ஒரு செய்தி - 36*
*28/09/16/புதன்*

சகல தீங்குகளிலிருந்தும் பாதுகாப்பு பெறசிறந்த சூரா.

وعن عبد الله بن خبيب قال : خرجنا في ليلة مطر وظلمة شديدة نطلب رسول الله صلى الله عليه وسلم فأدركناه فقال : " قل " . قلت ما أقول ؟ قال : " ( قل هو الله أحد )  والمعوذتين حين تصبح وحين تمسي ثلاث مرات تكفيك من كل شيء " . رواه الترمذي وأبو داود والنسائي
      அப்துல்லா இப்னு குபைப் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

    நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் இருந்தோம். அது இரவு நேரம், கடுமையான இருளும் சூழ்ந்து கொண்டது. மழையும் பொழிந்தது. எனவே யார் யார் எங்கே? நிற்கின்றார்கள் என்பதை சற்று நேரம் தெரிய முடியாத நிலை எற்பட்டது.

     எனவே நாங்கள்  நபி (ஸல்) அவர்களை சற்று நேர தேடுதலுக்கு பின் பெற்றுக் கொண்டோம். அப்பொழுது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம்  "எனக்கு எந்த தீங்கும் நேராது ஏன் தெரியுமா? 

     நான் ஒவ்வொரு நாளும் காலையும், மாலையும் சூரா இக்லாஸ், சூரா ஃபலக், சூரா நாஸ் இந்த மூன்று சூராவில் ஒவ்வொன்றையும் மூன்று தடவை ஓதி வருகின்றேன்.

     "நீங்களும்  இவ்வாறு ஓதி வாருங்கள். அல்லாஹ் நாள் முழுவதும் எல்லா தீங்குகளை விட்டும்  உங்களை பாதுகாப்பான்" என்று கூறினார்கள்.

நூல். திர்மிதி. மிஷ்காத்

Monday, 26 September 2016

இன்று ஒரு செய்தி - 35

இன்று ஒரு செய்தி - 35
27/09/16/செவ்வாய்

மேன்மக்களிடம் இருக்க வேண்டிய மகத்தான குணம்!

عن أبي علي الرازي ، قال : صحبت فضيل بن عياض ثلاثين سنة ما رأيته ضاحكا ولا مبتسما إلا يوم مات علي ابنه فقلت له في ذلك فقال : « إن
الله عز وجل أحب أمرا فأحببت ما أحب الله »
                                                                                                                                          அபூ அலி ராஸி [ரஹ்] அவர்கள் கூறுகிறார்கள் ;

     ஃபுளைல் பின் இயாழ் [ரஹ்] அவர்களை எனக்கு 30 வருடமாகத் தெரியும். அந்த 30 வருடத்தில் ஒரு நாள் கூட அவர்கள் சிரித்தோ, புன்னகைத்தோ நான் கண்டதில்லை.அத்தகையவர்கள், அவர்களின் மகன் இறந்த அன்று சிரித்தார்கள்.

     என்றைக்கும் சிரிக்காத நீங்கள் அழ வேண்டிய ஒரு தினத்தில் சிரிக்கிறீர்களே? என்று வியப்புடன் வினவினேன்.அப்போது அவர்கள்;  என் மகனின் மரணத்தை இறைவன் விரும்பியிருக்கிறான்.அவன் விரும்பியதை நானும் விரும்பும் பாக்கியம் இன்று தான் எனக்கு கிடைத்திருக்கிறது என்றார்கள்.

இன்று ஒரு செய்தி - 34


இன்று ஒரு செய்தி - 34
26/09/16/திங்கள்
==============================
அபூ ஹுரைராவும் , பரக்கத்தான பேரீத்தம் பழ பையும் !
==============================

عَنْ أَبِي هُرَيْرَةَ رضي الله عنه قَال
َ أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِتَمَرَاتٍ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ ادْعُ اللَّهَ فِيهِنَّ بِالْبَرَكَةِ فَضَمَّهُنَّ ثُمَّ دَعَا لِي فِيهِنَّ بِالْبَرَكَةِ فَقَالَ خُذْهُنَّ وَاجْعَلْهُنَّ فِي مِزْوَدِكَ هَذَا أَوْ فِي هَذَا الْمِزْوَدِ كُلَّمَا أَرَدْتَ أَنْ تَأْخُذَ مِنْهُ شَيْئًا فَأَدْخِلْ فِيهِ يَدَكَ فَخُذْهُ وَلَا تَنْثُرْهُ نَثْرًا فَقَدْ حَمَلْتُ مِنْ ذَلِكَ التَّمْرِ كَذَا وَكَذَا مِنْ وَسْقٍ فِي سَبِيلِ اللَّهِ فَكُنَّا نَأْكُلُ مِنْهُ وَنُطْعِمُ وَكَانَ لَا يُفَارِقُ حِقْوِي حَتَّى كَانَ يَوْمُ قَتْلِ عُثْمَانَ فَإِنَّهُ انْقَطَعَ  (ترمذي)  بَاب مَنَاقِبِ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ- كِتَاب الْمَنَاقِبِ

           அபூஹுரைரா {ரலி} அவர்கள்,
ஒரு சில பேரீத்தம்பழங்களை கையில் எடுத்துக் கொண்டு அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "யா ரஸூலல்லாஹ்!இந்த போரீத்தம்பழங்களில் பரக்கத் ஏற்பட துஆ செய்யுங்கள்," என்று கூறினார்கள்.

     அதை பெற்றுக் கொண்டு நபி {ஸல்} அவர்கள் துஆ செய்து விட்டு,இதை ஒரு பையில் போட்டு வைத்துக் கொள்.உனக்கு தேவைப்படுகிறபோது அதில் உன் கரத்தை நுழைத்து எடுத்துக்கொள். ஆனால் "அதை திறந்து பார்க்கக் கூடாது" என்று கூறினார்கள்.

     அதை பெற்றுக் கொண்ட அபூஹுரைரா (ரலி) அவர்களும் அதை பயன் படுத்தி வந்தார்கள்.தான் போகின்ற பயணங்களிலும்,போர்க்களங்களிலும் அதை எடுத்துச்செல்வார்கள்.தானும் சாப்பிடுவார்கள்,தன் தோழர்களுக்கும் கொடுப்பார்கள்.

     இப்படியே பல வருடங்கள் ஓடின.ஹஜ்ரத் உஸ்மான் {ரலி} அவர்கள் ஷஹீதாக்கப்பட்ட தினம் தான் அந்தப் பை அவர்களிடமிருந்து தொலைந்து போனது.

                                                {திர்மிதி}

Saturday, 24 September 2016

இன்று ஒரு செய்தி-33


இன்று ஒரு செய்தி - 33
25/09/06/ஞாயிறு

*::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
வேண்டாமே இவை இரண்டும்.
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::*

عَنْ عَائِشَةَ
أَنَّهَا قَالَتْ وَاعَدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فِي سَاعَةٍ يَأْتِيهِ فِيهَا فَجَاءَتْ تِلْكَ السَّاعَةُ وَلَمْ يَأْتِهِ وَفِي يَدِهِ عَصًا فَأَلْقَاهَا مِنْ يَدِهِ وَقَالَ مَا يُخْلِفُ اللَّهُ وَعْدَهُ وَلَا رُسُلُهُ ثُمَّ الْتَفَتَ فَإِذَا جِرْوُ كَلْبٍ تَحْتَ سَرِيرِهِ فَقَالَ يَا عَائِشَةُ مَتَى دَخَلَ هَذَا الْكَلْبُ هَاهُنَا فَقَالَتْ وَاللَّهِ مَا دَرَيْتُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ فَجَاءَ جِبْرِيلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاعَدْتَنِي فَجَلَسْتُ لَكَ فَلَمْ تَأْتِ فَقَالَ مَنَعَنِي الْكَلْبُ الَّذِي كَانَ فِي بَيْتِكَ إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது

     (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால், அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வரவில்லை.

     அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, "அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டான். அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்குமாறு செய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்கள்.

     பின்னர் திரும்பிப் பார்த்தபோது, தமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள்.

      உடனே "ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?'' என்று கேட்டார்கள்.  நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியவில்லை'' என்றேன்.

      உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள்.

     அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால், நீங்கள் வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்டார்கள்.

     அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்துவிட்டது.

     (வானவர்களாகிய) நாங்கள்,நாயும் உருவப் படமும் உள்ள வீட்டிற்குள் நுழையமாட்டோம்'' என்று சொன்னார்கள்.

                           நூல்: முஸ்லிம்

இன்று ஒரு செய்தி -32

இன்று ஒரு செய்தி - 32
24/09/06/சனி

அன்றாடம் கடைபிடிக்க வேண்டிய அழகான அறிவுரை

أنس بن مالك قال: أوصاني رسول الله صلى الله عليه وسلم بخمس خصال، قال لي
يا أنس أسبغ الوضوء يزد في عمرك، وسلم على من لقيت من أمتي تكثر حسناتك، وإذا دخلت فسلم على أهل بيتك يكثر خير أهل بيتك، وصل صلاة الضحى؛ فإنها صلاة الأوابين قبلك، يا أنس، ارحم الصغير ووقر الكبير تكن من رفقائي يوم القيامة

          அனஸ்(ரலி) அவர்கள் சொல்கின்றார்கள்.

       அன்பு நபி (ஸல்) அவர்கள் எனக்கு வஸிய்யத் செய்கின்ற போது ஐந்து விஷயங்களை சொன்னார்கள்.

        "ஒழுவை பரிபூரணமாக செய்யுங்கள். அது உங்களுக்கு ஆயுளை அதிகப்படுத்தும்."

         "என் உம்மத்தில் நீங்கள் சந்திக்கும் ஒவ்வொரு நபருக்கும் ஸலாம் சொல்லுங்கள். அது உமக்கு நன்மைகளை அதிகப்படுத்தும்."

         "வீட்டில் உள்ளே நுழைகின்ற பொழுது உமது வீட்டில் உள்ளோருக்கு ஸலாம் சொல்லுங்கள். அது உனது வீட்டில் நலவுகளை அதிகப்படுத்தும்."

          "லுஹா தொழுகையை தொழுது கொள்ளுங்கள். அது இறைவனின் பக்கம் மீள்பவர்களின் தொழுகையாகும்."

         "சிறுவர்களுக்குக்கு கருணை காட்டுவீராக. பெரியவர்களை கண்ணியப்படுத்துவீராக. நீர் மறுமையில் எனது நண்பர்களில் ஒருவராக ஆகி விடுவீர்" என்றார்கள்.

                              நூல். தப்ஸீர் இப்னு கஸீர்

Friday, 23 September 2016

இன்று ஒரு செய்தி - 31

இன்று ஒரு செய்தி - 31
23/09/06/வெள்ளி

ஈமானின் வலிமையும் கண்ணின் ஒளியும்.

زنيرة الرومية. كانت من السابقات إلى الإسلام، أسلمت في أول الإسلام، وعذبها المشركون. قيل: كانت مولاة بني مخزوم، فكان أبو جهل يعذبها. وقيل: كانت مولاة بني عَبْد الدار، فلما أسلمت عَمِيت، فقال المشركون: أعمتها اللات والعزى لكفرها بهما! فقالت: وما يدري اللات والعزى من يعَبْدهما، إنما هذا من السماء، وربي قادر على رد بصري، فأصبحت من الغد ورد الله بصرها، فقالت قريش: هذا من سحر مُحَمَّد. ولما رأى أبو بكر رضي الله عنه ما ينالها من العذاب، اشتراها فأعتقها، وهي أحد السبعة الذين أعتقهم أبو بكر

     ஸிந்நீரா (ரலி) அவர்கள் ஆரம்பகாலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர்களில் ஒருவர். அவர்களை காபிர்கள் வேதனை செய்தார்கள். இன்னொரு கூற்றின் படி அபூ ஜஹ்ல் வேதனை செய்தான் என்றும் சொல்லப்பட்டுள்ளது. அந்த வேதனையால் அவர்களின் கண் குருடாகிவிட்டது.

        அப்போது காபிர்கள்  " நம்முடைய தெய்வமான லாத், உஸ்ஸாவை மறுத்ததால் அவ்விரண்டும் இவரின் கண்களை குருடாக்கிவிட்டது" என்று  சொன்னார்கள்.

      அப்போது ஸின்னீரா (ரலி) அவர்கள் "லாத், உஸ்ஸாவுக்கு தன்னை வணங்குபவர்களையே அறிந்து கொள்ள முடியாது. இது வானில் உள்ளவனின் வேலையாகும். எனது ரப்பு எனது பார்வையை மீட்டித் தர சக்தி பெற்றவன்" என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது போன்று மறுநாள் காலையில் அவர்கள் கண்பார்வையை பெற்றார்கள். இதை கண்ட காபிர்கள் இது முஹம்மதின் சூனிய வேலை என்றார்கள்.

    ஜின்னீரா (ரலி ) அவர்கள் படும் இந்த வேதனையை கண்ட அபூபக்கர்(ரலி) அவர்கள் விலைக்கு வாங்கி விடுதலை செய்தார்கள்.

                           நூல். உஸ்துல் காபா

Thursday, 22 September 2016

இன்று ஒரு செய்தி -30

இன்று ஒரு செய்தி -30
22/09/16/வியாழன்

மஹ்ஷர் பெருவெளியில் இறை நினைவை விட்டும் விலகியவர்களின் நிலை..

و في الحديث

أن أربعة يستشهد عليهم بأربعة : ينادى بالأغنياء و أهل الغبطة فيقال لهم : ما شغلكم عن عبادة الله ؟ فيقولون : أعطانا الله ملكاً و غبطة شغلنا عن القيام بحقه في دار الدنيا فيقال لهم : من أعظم ملكاً : أنتم أم سليمان ؟ فيقولون : بل سليمان . فيقال : ما شغله ذلك عن القيام بحق الله و الدأب في ذكره . ثم يقال : أين أهل البلاء ؟ فيؤتى بهم أنواعاً فيقال لهم : أي شيء شغلكم عن عبادة الله تعالى ؟ فيقولون : ابتلانا الله في دار الدنيا بأنواع من الآفات و العاهات شغلتنا عن ذكره و القيام بحقه فيقال لهم : من أشد بلاء : أنتم أم أيوب ؟ فيقولون بل أيوب .فيقال لهم : ما شغله ذلك عن حقنا و الدأب لذكرنا ثم ينادي : ابن الشباب العطرة و المماليك فتقول الشباب : أعطانا الله جمالاً و حسناً فتناً به فكنا مشغولين عن القيام بحقه و كذلك المماليك فيقولون : شغلنا رق العبودية في الدنيا فيقال لهم : أنتم أكثر جمالاً أم يوسف عليه السلام . فلقد كان في رق العبودية ما شغله ذلك عن القيام بحقنا و لا الدأب لذكرنا ثم ينادي : أين الفقراء ؟ فيؤتى بهم أنواعاً فيقال لهم : ما شغلكم عن عبادة الله تعالى ؟ فيقولون : ابتلانا الله في دار الدنيا بفقر شغلنا فيقال لهم : من أشد فقراً . . أنتم أم عيسى عليه السلام ؟ ! فيقولون : بل عيسى فيقول لهم : ما شغله ذلك عن القيام بحقنا و الدأب لذكرنا . . . فمن بلى بشيء من هذه الأربع فليذكر صاحبه . .

      இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாளை மறுமை நாளில் மஹ்ஷர் பெருவெளியில் அல்லாஹ்வின் விசாரணை மன்றத்தில் நான்கு வகை மனிதர்கள் விசாரணைக்கு கொண்டு வரப்படுவார்கள்.

     முதல் வகையினர் செல்வந்தர்கள், இரண்டாம் வகையினர், கஷ்டங்களுக்கும் சோதனைக்கும் உள்ளானவர்கள், மூன்றாம் வகையினர் அடிமைகள் பணியாளர்கள். நான்காம் வகையினர் ஏழைகள். இந்த நான்கு வகையினருமே உலகில் இறை வழிபாட்டிலிருந்து விலகி வாழ்ந்தவர்கள்.

      முதலில் அல்லாஹ் செல்வந்தர்களை அழைப்பான். “நீங்கள் ஏன் உலகில் வாழும் காலத்தில் என்னுடைய வழிபாடுகளில் இருந்து விலகி வாழ்ந்தீர்கள்? ஏன் இபாதத் செய்யவில்லை?” என்று கேட்பான்.

      அதற்கவர்கள், “யாஅல்லாஹ்! நாங்கள் உலகில் வாழும் காலத்தில் நீ எங்களுக்கு அதிகமான செல்வத்தையும், பொருளாதாரத்தையும் தந்திருந்தாய், அதனைப் பன்மடங்காகப் பெருக்குவதிலும், அதைப் பாதுகாப்பதிலுமே எங்களின் கால நேரங்கள் ஓடி விட்டது. இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு அந்த கால நேரமே போதவில்லை. ஆகவே தான் உன்னை வணங்குவதில் இருந்தும், வழிபடுவதிலிருந்தும், உன் கடமைகளில் இருந்தும் விலகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று பதில் கூறுவார்கள்.

        அப்போது, அல்லாஹ் அவர்களிடத்தில் நபி ஸுலைமான் (அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரம், செல்வம், பொருளாதாரம் ஆகியவற்றையும் நினைவு படுத்தி விட்டு, இப்போது சொல்லுங்கள்! “நீங்கள் பெரும் செல்வந்தர்களா? ஸுலைமான் (அலை) அவர்கள் பெரும் செல்வந்தரா?” என்று கேட்பான்.

     அதற்கவர்கள், ”உண்மையில் எங்களை விட நபி ஸுலைமான் (அலை) அவர்களே பெரும் செல்வமும் அதிகாரமும் கொண்டவராவார்” என்று பதில் கூறுவார்கள்.

     அப்போது, அல்லாஹ் “அப்படியானால் அவர்களுக்கு அவ்வளவு செல்வமும், ஆட்சி, அதிகாரம் இருந்தும் அவர்கள் என்னை மறக்கவில்லையே! என்னை வழிபடுவதிலிருந்து விலகி வாழ வில்லையே!” என்று கூறுவான்.

      பின்னர், சோதனைகளிலும், கஷ்டங்களிலும் உழன்றவர்களை அல்லாஹ் அழைப்பான். அவர்களிடம் “நீங்கள் ஏன் உலகில் வாழும் காலத்தில் என்னுடைய வழிபாடுகளில் இருந்து விலகி வாழ்ந்தீர்கள்? ஏன் இபாதத் செய்யவில்லை?” என்று கேட்பான்.

      அதற்கவர்கள், “யாஅல்லாஹ்! நாங்கள் உலகில் வாழும் காலத்தில் நீ எங்களுக்கு அதிகமான கஷ்டங்களையும், சோதனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாய் கொடுத்தாய். அவைகளில் இருந்து வெளியேருவதற்காக காலம் பூராவும் நாங்கள் சதா போராடிக் கொண்டே இருந்தோம்.

     இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு அந்த கால நேரமே போதவில்லை. ஆகவே தான் உன்னை வணங்குவதில் இருந்தும், வழிபடுவதிலிருந்தும், உன் கடமைகளில் இருந்தும் விலகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று பதில் கூறுவார்கள்.

      அப்போது, அல்லாஹ் அவர்களிடத்தில் ”நபி அய்யூப் (அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட கொடிய நோய் மற்றும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், அவர்கள் சமூக மக்களிடையே பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் நினைவு படுத்தி விட்டு, இப்போது சொல்லுங்கள்! “நீங்கள் அடைந்தது பெரும் சோதனையா? அல்லது அய்யூப் (அலை) அவர்கள் அடைந்தது பெரும் சோதனையா?” என்று கேட்பான்.

     அதற்கவர்கள், ”ரஹ்மானே! உண்மையில் எங்களை விட நபி அய்யூப் (அலை) அவர்களே பெரும் சோதனைக்கும் துன்பத்திற்கும் உள்ளானவராவார்கள்” என்று பதில் கூறுவார்கள்.

     அப்போது, அல்லாஹ் “அப்படியானால் அவர்கள் அவ்வளவு சோதனையிலும், துன்பத்திலும் என்னை மறக்கவில்லையே! என்னை வழிபடுவதிலிருந்து விலகி வாழ வில்லையே!” எப்போதும் என்னை நினைவு கூறிக் கொண்டே இருந்தார்களே!?” என்று கூறுவான்.

     பின்னர், அல்லாஹ் அடிமைகள் மற்றும் பணியாளர்களை அழைப்பான். அவர்களிடம் “நீங்கள் ஏன் உலகில் வாழும் காலத்தில் என்னுடைய வழிபாடுகளில் இருந்து விலகி வாழ்ந்தீர்கள்? ஏன் இபாதத் செய்யவில்லை?” என்று கேட்பான்.

அதற்கவர்கள், “யாஅல்லாஹ்! நாங்கள் உலகில் வாழும் காலத்தில் நீ எங்களுக்கு அழகிய தோற்றத்தைத் தந்திருந்தாய்! அதைக் கொண்டு நாங்கள் பலவாறாக சோதிக்கப்பட்டோம்! மேலும், அடிமைப் பணியாளர்களாக நாங்கள் இருந்தோம்! எங்கள் அழகின் சோதனையில் இருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அதிகமான வேலைகள் செய்வதற்கும் காலம் பூராவும் நாங்கள் சதா போராடிக் கொண்டே இருந்தோம்.

இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு அந்த கால நேரமே போதவில்லை. ஆகவே தான் உன்னை வணங்குவதில் இருந்தும், வழிபடுவதிலிருந்தும், உன் கடமைகளில் இருந்தும் விலகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று பதில் கூறுவார்கள்.

     அப்போது, அல்லாஹ் அவர்களிடத்தில் ”நபி யூஸுஃப் (அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட அழகையும், அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும், அவர்கள் அடிமையாக இருந்து அரச குடும்பத்தார்களிடையே பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் நினைவு படுத்தி விட்டு, இப்போது சொல்லுங்கள்! “நீங்கள் அழகால் பெரும் சோதனையை அடைந்தீர்களா? அல்லது யூஸுஃப் (அலை) அவர்கள் அழகால் அடைந்தது பெரும் சோதனையா?” நீங்கள் அடிமையாக இருந்து பட்ட கஷ்டம் பெரிதா?” அல்லது யூஸுஃப் (அலை) அவர்கள் அடிமையாக இருந்து அடைந்த கஷ்டம் பெரிதா?” என்று கேட்பான்.

    அதற்கவர்கள், ”ரஹ்மானே! உண்மையில் எங்களை விட  எல்லா விதத்திலும் நபி யூஸுஃப் (அலை) அவர்களே அழகால் பெரும் சோதனைக்கும் துன்பத்திற்கும் உள்ளானவராவார்கள், அடிமைத்தனத்தால் பெரும் கஷ்டத்திற்கும் உள்ளானவர்கள்” என்று பதில் கூறுவார்கள்.

     அப்போது, அல்லாஹ் “அப்படியானால் அவர்கள் அவ்வளவு சோதனையிலும், கஷ்டத்திலும் என்னை மறக்கவில்லையே! என்னை வழிபடுவதிலிருந்து விலகி வாழ வில்லையே!” எப்போதும் என்னை நினைவு கூறிக் கொண்டே இருந்தார்களே!?” என்று கூறுவான்.

     பின்னர், அல்லாஹ் ஏழைகளை அழைப்பான். அவர்களிடம் “நீங்கள் ஏன் உலகில் வாழும் காலத்தில் என்னுடைய வழிபாடுகளில் இருந்து விலகி வாழ்ந்தீர்கள்? ஏன் இபாதத் செய்யவில்லை?” என்று கேட்பான்.

     அதற்கவர்கள், “யாஅல்லாஹ்! நாங்கள் உலகில் வாழும் காலத்தில் நீ எங்களுக்கு பசி, பட்டினி, வறுமை போன்றவற்றைத் தந்திருந்தாய்! வறுமை அகல, பசி நீங்க, பட்டினி விரண்டோட இரவு, பகலாக உழைத்துக் கொண்டிருந்தோம்.

     இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு அந்த கால நேரமே போதவில்லை. ஆகவே தான் உன்னை வணங்குவதில் இருந்தும், வழிபடுவதிலிருந்தும், உன் கடமைகளில் இருந்தும் விலகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று பதில் கூறுவார்கள்.

     அப்போது, அல்லாஹ் அவர்களிடத்தில் ”நபி ஈஸா (அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஏழ்மை மற்றும் வறுமையை நினைவு படுத்தி விட்டு, இப்போது சொல்லுங்கள்! “நீங்கள் ஏழ்மையால் பெரும் சிரமத்தை அடைந்தீர்களா? அல்லது ஈஸா (அலை) அவர்கள் ஏழ்மையால் பெரும் சிரமம் அடைந்தார்களா?” என்று கேட்பான்.

     அதற்கவர்கள், ”ரஹ்மானே! உண்மையில் எங்களை விட  எல்லா விதத்திலும் நபி ஈஸா (அலை) அவர்களே ஏழ்மையால் பெரும் சோதனைக்கும் துன்பத்திற்கும் ஆளானார்கள்” என்று பதில் கூறுவார்கள்.

     இறுதியில், அல்லாஹ் அவர்களின் செயல்களுக்குத் தக்கவாறு தண்டனை வழங்குவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

         ( நூல்: அத் தத்கிரத்து ஃபீ அஹ்வாலில் மௌத்தா வஉமூருல் ஆஃகிரா லி இமாமி குர்துபீ )