இன்று ஒரு செய்தி -30
22/09/16/வியாழன்
மஹ்ஷர் பெருவெளியில் இறை நினைவை விட்டும் விலகியவர்களின் நிலை..
و في الحديث
أن أربعة يستشهد عليهم بأربعة : ينادى بالأغنياء و أهل الغبطة فيقال لهم : ما شغلكم عن عبادة الله ؟ فيقولون : أعطانا الله ملكاً و غبطة شغلنا عن القيام بحقه في دار الدنيا فيقال لهم : من أعظم ملكاً : أنتم أم سليمان ؟ فيقولون : بل سليمان . فيقال : ما شغله ذلك عن القيام بحق الله و الدأب في ذكره . ثم يقال : أين أهل البلاء ؟ فيؤتى بهم أنواعاً فيقال لهم : أي شيء شغلكم عن عبادة الله تعالى ؟ فيقولون : ابتلانا الله في دار الدنيا بأنواع من الآفات و العاهات شغلتنا عن ذكره و القيام بحقه فيقال لهم : من أشد بلاء : أنتم أم أيوب ؟ فيقولون بل أيوب .فيقال لهم : ما شغله ذلك عن حقنا و الدأب لذكرنا ثم ينادي : ابن الشباب العطرة و المماليك فتقول الشباب : أعطانا الله جمالاً و حسناً فتناً به فكنا مشغولين عن القيام بحقه و كذلك المماليك فيقولون : شغلنا رق العبودية في الدنيا فيقال لهم : أنتم أكثر جمالاً أم يوسف عليه السلام . فلقد كان في رق العبودية ما شغله ذلك عن القيام بحقنا و لا الدأب لذكرنا ثم ينادي : أين الفقراء ؟ فيؤتى بهم أنواعاً فيقال لهم : ما شغلكم عن عبادة الله تعالى ؟ فيقولون : ابتلانا الله في دار الدنيا بفقر شغلنا فيقال لهم : من أشد فقراً . . أنتم أم عيسى عليه السلام ؟ ! فيقولون : بل عيسى فيقول لهم : ما شغله ذلك عن القيام بحقنا و الدأب لذكرنا . . . فمن بلى بشيء من هذه الأربع فليذكر صاحبه . .
இமாம் முஜாஹித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “நாளை மறுமை நாளில் மஹ்ஷர் பெருவெளியில் அல்லாஹ்வின் விசாரணை மன்றத்தில் நான்கு வகை மனிதர்கள் விசாரணைக்கு கொண்டு வரப்படுவார்கள்.
முதல் வகையினர் செல்வந்தர்கள், இரண்டாம் வகையினர், கஷ்டங்களுக்கும் சோதனைக்கும் உள்ளானவர்கள், மூன்றாம் வகையினர் அடிமைகள் பணியாளர்கள். நான்காம் வகையினர் ஏழைகள். இந்த நான்கு வகையினருமே உலகில் இறை வழிபாட்டிலிருந்து விலகி வாழ்ந்தவர்கள்.
முதலில் அல்லாஹ் செல்வந்தர்களை அழைப்பான். “நீங்கள் ஏன் உலகில் வாழும் காலத்தில் என்னுடைய வழிபாடுகளில் இருந்து விலகி வாழ்ந்தீர்கள்? ஏன் இபாதத் செய்யவில்லை?” என்று கேட்பான்.
அதற்கவர்கள், “யாஅல்லாஹ்! நாங்கள் உலகில் வாழும் காலத்தில் நீ எங்களுக்கு அதிகமான செல்வத்தையும், பொருளாதாரத்தையும் தந்திருந்தாய், அதனைப் பன்மடங்காகப் பெருக்குவதிலும், அதைப் பாதுகாப்பதிலுமே எங்களின் கால நேரங்கள் ஓடி விட்டது. இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு அந்த கால நேரமே போதவில்லை. ஆகவே தான் உன்னை வணங்குவதில் இருந்தும், வழிபடுவதிலிருந்தும், உன் கடமைகளில் இருந்தும் விலகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று பதில் கூறுவார்கள்.
அப்போது, அல்லாஹ் அவர்களிடத்தில் நபி ஸுலைமான் (அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஆட்சி அதிகாரம், செல்வம், பொருளாதாரம் ஆகியவற்றையும் நினைவு படுத்தி விட்டு, இப்போது சொல்லுங்கள்! “நீங்கள் பெரும் செல்வந்தர்களா? ஸுலைமான் (அலை) அவர்கள் பெரும் செல்வந்தரா?” என்று கேட்பான்.
அதற்கவர்கள், ”உண்மையில் எங்களை விட நபி ஸுலைமான் (அலை) அவர்களே பெரும் செல்வமும் அதிகாரமும் கொண்டவராவார்” என்று பதில் கூறுவார்கள்.
அப்போது, அல்லாஹ் “அப்படியானால் அவர்களுக்கு அவ்வளவு செல்வமும், ஆட்சி, அதிகாரம் இருந்தும் அவர்கள் என்னை மறக்கவில்லையே! என்னை வழிபடுவதிலிருந்து விலகி வாழ வில்லையே!” என்று கூறுவான்.
பின்னர், சோதனைகளிலும், கஷ்டங்களிலும் உழன்றவர்களை அல்லாஹ் அழைப்பான். அவர்களிடம் “நீங்கள் ஏன் உலகில் வாழும் காலத்தில் என்னுடைய வழிபாடுகளில் இருந்து விலகி வாழ்ந்தீர்கள்? ஏன் இபாதத் செய்யவில்லை?” என்று கேட்பான்.
அதற்கவர்கள், “யாஅல்லாஹ்! நாங்கள் உலகில் வாழும் காலத்தில் நீ எங்களுக்கு அதிகமான கஷ்டங்களையும், சோதனைகளையும் ஒன்றன் பின் ஒன்றாய் கொடுத்தாய். அவைகளில் இருந்து வெளியேருவதற்காக காலம் பூராவும் நாங்கள் சதா போராடிக் கொண்டே இருந்தோம்.
இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு அந்த கால நேரமே போதவில்லை. ஆகவே தான் உன்னை வணங்குவதில் இருந்தும், வழிபடுவதிலிருந்தும், உன் கடமைகளில் இருந்தும் விலகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று பதில் கூறுவார்கள்.
அப்போது, அல்லாஹ் அவர்களிடத்தில் ”நபி அய்யூப் (அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட கொடிய நோய் மற்றும் அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகள், அவர்கள் சமூக மக்களிடையே பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் நினைவு படுத்தி விட்டு, இப்போது சொல்லுங்கள்! “நீங்கள் அடைந்தது பெரும் சோதனையா? அல்லது அய்யூப் (அலை) அவர்கள் அடைந்தது பெரும் சோதனையா?” என்று கேட்பான்.
அதற்கவர்கள், ”ரஹ்மானே! உண்மையில் எங்களை விட நபி அய்யூப் (அலை) அவர்களே பெரும் சோதனைக்கும் துன்பத்திற்கும் உள்ளானவராவார்கள்” என்று பதில் கூறுவார்கள்.
அப்போது, அல்லாஹ் “அப்படியானால் அவர்கள் அவ்வளவு சோதனையிலும், துன்பத்திலும் என்னை மறக்கவில்லையே! என்னை வழிபடுவதிலிருந்து விலகி வாழ வில்லையே!” எப்போதும் என்னை நினைவு கூறிக் கொண்டே இருந்தார்களே!?” என்று கூறுவான்.
பின்னர், அல்லாஹ் அடிமைகள் மற்றும் பணியாளர்களை அழைப்பான். அவர்களிடம் “நீங்கள் ஏன் உலகில் வாழும் காலத்தில் என்னுடைய வழிபாடுகளில் இருந்து விலகி வாழ்ந்தீர்கள்? ஏன் இபாதத் செய்யவில்லை?” என்று கேட்பான்.
அதற்கவர்கள், “யாஅல்லாஹ்! நாங்கள் உலகில் வாழும் காலத்தில் நீ எங்களுக்கு அழகிய தோற்றத்தைத் தந்திருந்தாய்! அதைக் கொண்டு நாங்கள் பலவாறாக சோதிக்கப்பட்டோம்! மேலும், அடிமைப் பணியாளர்களாக நாங்கள் இருந்தோம்! எங்கள் அழகின் சோதனையில் இருந்து எங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கும், அதிகமான வேலைகள் செய்வதற்கும் காலம் பூராவும் நாங்கள் சதா போராடிக் கொண்டே இருந்தோம்.
இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு அந்த கால நேரமே போதவில்லை. ஆகவே தான் உன்னை வணங்குவதில் இருந்தும், வழிபடுவதிலிருந்தும், உன் கடமைகளில் இருந்தும் விலகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று பதில் கூறுவார்கள்.
அப்போது, அல்லாஹ் அவர்களிடத்தில் ”நபி யூஸுஃப் (அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட அழகையும், அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட சோதனைகளையும், அவர்கள் அடிமையாக இருந்து அரச குடும்பத்தார்களிடையே பட்ட கஷ்டங்கள் அனைத்தையும் நினைவு படுத்தி விட்டு, இப்போது சொல்லுங்கள்! “நீங்கள் அழகால் பெரும் சோதனையை அடைந்தீர்களா? அல்லது யூஸுஃப் (அலை) அவர்கள் அழகால் அடைந்தது பெரும் சோதனையா?” நீங்கள் அடிமையாக இருந்து பட்ட கஷ்டம் பெரிதா?” அல்லது யூஸுஃப் (அலை) அவர்கள் அடிமையாக இருந்து அடைந்த கஷ்டம் பெரிதா?” என்று கேட்பான்.
அதற்கவர்கள், ”ரஹ்மானே! உண்மையில் எங்களை விட எல்லா விதத்திலும் நபி யூஸுஃப் (அலை) அவர்களே அழகால் பெரும் சோதனைக்கும் துன்பத்திற்கும் உள்ளானவராவார்கள், அடிமைத்தனத்தால் பெரும் கஷ்டத்திற்கும் உள்ளானவர்கள்” என்று பதில் கூறுவார்கள்.
அப்போது, அல்லாஹ் “அப்படியானால் அவர்கள் அவ்வளவு சோதனையிலும், கஷ்டத்திலும் என்னை மறக்கவில்லையே! என்னை வழிபடுவதிலிருந்து விலகி வாழ வில்லையே!” எப்போதும் என்னை நினைவு கூறிக் கொண்டே இருந்தார்களே!?” என்று கூறுவான்.
பின்னர், அல்லாஹ் ஏழைகளை அழைப்பான். அவர்களிடம் “நீங்கள் ஏன் உலகில் வாழும் காலத்தில் என்னுடைய வழிபாடுகளில் இருந்து விலகி வாழ்ந்தீர்கள்? ஏன் இபாதத் செய்யவில்லை?” என்று கேட்பான்.
அதற்கவர்கள், “யாஅல்லாஹ்! நாங்கள் உலகில் வாழும் காலத்தில் நீ எங்களுக்கு பசி, பட்டினி, வறுமை போன்றவற்றைத் தந்திருந்தாய்! வறுமை அகல, பசி நீங்க, பட்டினி விரண்டோட இரவு, பகலாக உழைத்துக் கொண்டிருந்தோம்.
இன்னும் சொல்லப்போனால், எங்களுக்கு அந்த கால நேரமே போதவில்லை. ஆகவே தான் உன்னை வணங்குவதில் இருந்தும், வழிபடுவதிலிருந்தும், உன் கடமைகளில் இருந்தும் விலகி வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது” என்று பதில் கூறுவார்கள்.
அப்போது, அல்லாஹ் அவர்களிடத்தில் ”நபி ஈஸா (அலை) அவர்களையும், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஏழ்மை மற்றும் வறுமையை நினைவு படுத்தி விட்டு, இப்போது சொல்லுங்கள்! “நீங்கள் ஏழ்மையால் பெரும் சிரமத்தை அடைந்தீர்களா? அல்லது ஈஸா (அலை) அவர்கள் ஏழ்மையால் பெரும் சிரமம் அடைந்தார்களா?” என்று கேட்பான்.
அதற்கவர்கள், ”ரஹ்மானே! உண்மையில் எங்களை விட எல்லா விதத்திலும் நபி ஈஸா (அலை) அவர்களே ஏழ்மையால் பெரும் சோதனைக்கும் துன்பத்திற்கும் ஆளானார்கள்” என்று பதில் கூறுவார்கள்.
இறுதியில், அல்லாஹ் அவர்களின் செயல்களுக்குத் தக்கவாறு தண்டனை வழங்குவான்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.
( நூல்: அத் தத்கிரத்து ஃபீ அஹ்வாலில் மௌத்தா வஉமூருல் ஆஃகிரா லி இமாமி குர்துபீ )