12-மஸ்ஜிதில் இருப்பதினால் கிடைக்கும் மூன்று பலன்கள்!
عَنْ أَبِي هُرَيْرَةَ ؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: إِنَّ لِلْمَسَاجِدِ أَوْتَادًا، اَلْمَلاَئِكَةُ جُلَسَاؤُهُمْ، إِنْ غَابُوا يَفْتَقِدُونَهُمْ، وَإِنْ مَرِضُوا عَادُوهُمْ، وَإِنْ كَانُوا فِي حَاجَةٍ أَعَانُوهُمْ، وَقَالَ! : جَلِيسُ الْمَسْجِدِ عَلَي ثَلاَثِ خِصَالٍ: أَخٌ مُسْتَفَادٌ، أَوْ كَلِمَةٌ مُحْكَمَةٌ، أَوْ رَحْمَةٌ مُنْتَظَرَةٌ. رواه احمد:٢ /٤١٨
ஹள்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:
நபி ஸல்லலாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
மஸ்ஜிதுகளுக்கென முளைக்கம்புகள் உள்ளன. (எம்மக்கள் பள்ளியில் ஒன்று கூடுவதை வழமையாக்கிக் கொள்கிறார்களோ அவர்கள் பள்ளியின் முளைக்கம்புகள்).
மலக்குகள் அவர்களுடன் அமர்கிறார்கள், பள்ளியில் அவர்கள் இல்லையென்றால் அவர்களைத் தேடுகின்றனர், அவர்கள் நோயுற்றால் அவர்களை சுகம் விசாரிக்கின்றனர். ஏதேனும் தேவை கருதி அவர்கள் வெளியில் சென்றால் அவர்களுக்கு உதவுகின்றனர்.
பள்ளியில் இருப்பவர்கள் மூன்று பலன்களில் ஏதேனும் ஒன்றை அடைந்து கொள்கின்றனர்.
(முஸ்லிம்) சகோதரரைச் சந்தித்து மார்க்கப் பலன் அடைந்து கொள்கின்றனர், அல்லது மார்க்க ஞானம் கேட்டுப் பெறுகின்றனர், அல்லது ஒவ்வொரு முஸ்லிமும் எதிர்பார்க்கும் அல்லாஹ்வின் ரஹ்மத் கிடைக்கிறது''.
நூல் : முஸ்னத் அஹ்மத்