அல்லாஹ்வின் அருள்
ஓர் இறை நம்பிக்கையாளனை பொறுத்த வரையில்அவனுடைய
வாழ்வில் அல்லாஹ்வின் அருள் என்பது மிகவும்ஆளுமைக்குரிய ஒன்றாகும்.
ஈருலகிலும் அல்லாஹ்வின் அருள் அவனைச் சூழ்ந்திருக்கவேண்டுமென அவன் ஆசிப்பதும், நேசிப்பதும் ஈமானுக்கு அடுத்தபடி மிக
முக்கியமான ஒன்றாகும்.
மேன் மக்களான அறிஞர் பெருமக்கள் சொல்வார்கள்: “ஓர் இறைநம்பிக்கையாளன் நேர்வழியில் நடப்பதற்கும், வெற்றிக்கான
வாழ்க்கை வாழ்வதற்கும், சீதேவித்தனம் நிலைத்திருப்பதற்கும், நல்அமல்கள் செய்வதற்கும், இன்னும் அல்லாஹ்வின் ஏவல்களை ஏற்று நடப்பதற்கும், விலக்கல்களை தவிர்ப்பதற்கும்,பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கும், சுவனத்தில் நுழைவதற்கும்,நரகில் இருந்து ஈடேற்றம்
பெறுவதற்கும் அல்லாஹ்வின் அருள்மிகவும் இன்றியமையாதது”
சுருங்கச்சொன்னால் அல்லாஹ்வின் அருள்இல்லையென்றால் ஒட்டு
மொத்த வாழ்க்கையும் இல்லை.
அல்லாஹ்வின் அருள் இல்லை என்றால்….
وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا
“உங்கள் மீது அல்லாஹ்வின் அருளும், கருணையும் இல்லாமல் போயிருந்தால், உங்களில் சிலரைத்தவிர அனைவரும் ஷைத்தானையே பின் பற்றியிருப்பீர்கள்.”
فَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَكُنْتُمْ مِنَ الْخَاسِرِينَ
“உங்களின் மீது அல்லாஹ்வின் அருளும், கருணையும் இல்லாமல் போயிருந்தால், நீங்கள் நிச்சயம் எப்பொழுதோ பேரிழப்பிற்கு ஆளாகியிருப்பீர்கள்.”
وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ لَمَسَّكُمْ فِي مَا أَفَضْتُمْ فِيهِ عَذَابٌ عَظِيمٌ
”உங்களின் மீது அல்லாஹ்வின் அருளும், கருணையும் இல்லாமல் போயிருந்தால், நீங்கள் எந்த விஷயங்களில்
மூழ்கியிருக்கின்றீர்களோ அதன்பயனாக இம்மையிலும் மறுமையிலும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து பெரும்
வேதனை ஏற்பட்டுவிடும்.”
ரஹ்மான் – அருளாளன் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் 54 இடங்களில் கூறுகின்றான்.
ரஹீம் – நிகரற்ற அன்புடையோன் என்று அல்லாஹ்அல்குர்ஆனில் 95 இடங்களில் கூறுகின்றான்.
ரஹ்மான் ரஹீம் ஆகிய இந்த இரண்டின் மூலச்சொற்களும்ரஹ்மத் என்பதாகும்.
ரஹ்மத் என்ற வார்த்தைக்கு ரிக்கத் - மென்மை, ஷஃபகத் -இரக்கம், தஅத்துஃப் - கிருபை, என்று பொருள்.
கிட்ட தட்ட ரஹ்மான் ரஹீம் என்ற இந்த வார்த்தையை தொழுகையில் தினந்தோரும் ஃபர்ளான 17 ரக்அத்தில் 27 தடவை
ஓதுகின்றோம்.
இதுவே நாம் அல்லாஹ்வின் அருள் இன்றி இந்தஉலகத்தில் எதையும் சாதித்து விட முடியாது என்பதைஉணர்வதற்கு போதுமானதாகும்.
ஒவ்வொரு நாளும் ரப்புல் ஆலமீன் 120 ரஹ்மதுகளை கஃபாவின் மீது இறக்குகிறான். அதில் தவாஃப் செய்கிறவர்களுக்கு 60
அங்கு தொழுபவர்களுக்கு 40, கஃபாவை பார்பவர்களுக்கு
19, மீதமுள்ள ஒன்று உலகிலுள்ள எல்லோருக்கும் பிரித்து கொடுக்கப்படுகிறது என்று நாயகம் ஸல்லல்லாஹு
அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
இவ்வுலகிலும் சரி நாளை மறுமையிலும் சரி அல்லாஹ்வின் ரஹ்மத் இன்றி எந்த ஒரு முஃமினால் வாழ முடியாது.
روى الحاكم في المستدرك على الصحيحين ج4/ص278, قال رحمه الله:" أخبرني أحمد بن محمد بن سلمة العنزي ثنا عثمان بن سعيد الدارمي ثنا عبد الله بن صالح المقرئ ثنا سليمان بن هرم القرشي وحدثنا علي بن حمشاد العدل ثنا عبيد بن شريك ثنا يحيى بن بكير ثنا الليث بن سعد عن سليمان بن هرم عن محمد بن المنكدر عن جابر بن عبد الله رضي الله عنهما قال خرج علينا النبي صلى الله عليه وسلم فقال:" خرج من عندي خليلي جبريل آنفا فقال يا محمد والذي بعثك بالحق إن لله عبدا من عبيده عبد الله تعالى خمس مائة سنة على رأس جبل في البحر عرضه وطوله ثلاثون ذراعا في ثلاثين ذراعا والبحر محيط به أربعة آلاف فرسخ من كل ناحية وأخرج الله تعالى له عينا عذبة بعرض الأصبع تبض بماء عذب فتستنقع في أسفل الجبل وشجرة رمان تخرج له كل ليلة رمانة فتغذيه يومه فإذا أمسى نزل فأصاب من الوضوء وأخذ تلك الرمانة فأكلها ثم قام لصلاته فسأل ربه عز وجل عند وقت الأجل أن يقبضه ساجدا وأن لا يجعل للأرض ولا لشيء يفسده عليه سبيلا حتى بعثه وهو ساجد قال ففعل فنحن نمر عليه إذا هبطنا وإذا عرجنا فنجد له في العلم أنه يبعث يوم القيامة فيوقف بين يدي الله عز وجل فيقول له الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول يا رب بل بعملي فيقول الرب أدخلوا عبدي الجنة برحمتي فيقول رب بل بعملي فيقول الله عز وجل للملائكة قايسوا عبدي بنعمتي عليه وبعمله فتوجد نعمة البصر قد أحاطت بعبادة خمس مائة سنة وبقيت نعمة الجسد فضلا عليه
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “ஒரு நாள் நாங்கள் குழுமியிருந்த சபைக்கு வருகை தந்த அண்ணல் நபி {ஸல்} எங்களை நோக்கி“தோழர்களே! கொஞ்ச நேரத்திற்கு முன்பாகத்தான் என் நண்பர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் வருகை தந்து வியத்தகு வரலாறு ஒன்றைக் கூறி என்னை நெகிழ்ச்சியில் ஆழ்த்திப்போனார்” என்று கூறி விட்டு எங்களிடம் “என்னிடம் வருகை தந்த ஜிப்ரயீல்(அலை) அவர்கள் “முஹம்மத் {ஸல்} அவர்களே! சத்தியத்தைக் கொண்டு உங்களை நபியாக அனுப்பிய அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ்வின் அடியார்களில் ஒரு நல்லடியார் இருந்தார்.
அந்த அடியார் நாற்புறமும் கடலால் சூழப்பட்ட மலைப்பிரதேசத்தில் மலையின் உச்சியில் 500 ஆண்டு காலம் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதிலேயே கழித்து வந்தார்.
கடல் சூழ்ந்த – உப்பு நீர் நிறைந்த அந்தப் பகுதியிலும் கூட அல்லாஹ் அவருக்கு மதுரமான ஓர் நீரூற்றை ஓடச் செய்தான்.அருகில் ஓர் மாதுளை மரத்தையும் உருவாக்கிக் கொடுத்தான்.
தினமும் மாலை நேரத்தில் மலையின் உச்சியிலிருந்து கீழிறங்கி வரும் அவர் அந்த மாதுளை மரத்திலிருந்து ஒரு கனியை உண்டு விட்டு, அந்த நீரூற்றிலிருந்து சிறிது நீர் அருந்தி விட்டு உளூ செய்து விட்டு மீண்டும் மலை உச்சிக்கு சென்று வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டு விடுவார்.
ஒரு நாள் அந்த நல்லடியார் அல்லாஹ்விடம் பிரார்த்திக்கும் போது “யாஅல்லாஹ்! என் உயிர் பிரியும் தருவாயில் என் ரூஹ் உனக்கு நான் ஸஜ்தா செய்யும் நிலையிலேயே பிரிய வேண்டும் என ஆசிக்கின்றேன்! மேலும், என் உடலை மறுமை நாள் பரியந்தம் வரையில் அந்த நிலையிலேயே நீ பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும்! மேலும், அதே நிலையிலேயே நான் எழுப்பப்பட வேண்டும்! என்னுடைய இந்த ஆசையை நீ நிறைவேற்றித் தர வேண்டும்” என்று கோரினார்.
அல்லாஹ்வும் அவரின் கோரிக்கைக்கு செவி சாய்த்து அப்படியே செய்தான்.
வானவர்களாகிய நாங்கள் விண்ணுலகத்திலிருந்து பூமிக்கு வரும் போதும், பூமியிலிருந்து விண்ணுலகிற்கு செல்லும் போதும் அவரை அதே நிலையிலேயேக் கண்டோம்.
தொடர்ந்து ஜிப்ரயீல் (அலை) அவர்கள் கூறினார்கள்: “நாளை மறுமையில் மஹ்ஷர் பெருவெளியில் மக்களோடு மக்களாக அந்த நல்லடியார் அல்லாஹ்வின் சந்நிதானத்தில் நின்றிருப்பார்.
அப்போது, அல்லாஹ் வானவர்களிடம், அவரை நோக்கி“இதோ என்னுடைய இந்த அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுங்கள்” என்பான்.
அதற்கு, அவர் அல்லாஹ்விடம் “அல்லாஹ்வே! நான் செய்த என்னுடைய அமலின் துணை கொண்டு என்னை சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு வானவர்களுக்கு நீ ஆணையிடுவாய் என்றல்லவா நான் எதிர் பார்த்தேன். ஆனால்,நீயோ உன் அருளின் துணை கொண்டு சுவனத்திற்கு அழைத்துச் செல்லுமாறு ஆணையிடுகின்றாய்! அப்படியானால், என்னுடைய500 ஆண்டு கால இபாதத் என்னவாயிற்று?” என்று வினவுவார்.
அப்போது, அல்லாஹ் தன் வானவர்களுக்கு “இந்த அடியானுக்கு நான் வழங்கிய அருட்கொடைகளையும், இந்த அடியான் செய்த இபாதத்களையும் கணக்குப் பாருங்கள்” என்று கட்டளையிடுவான்.
அப்போது வானவர்கள் “இவரின் 500 ஆண்டு கால இபாதத் அனைத்தும் நீ அவருக்கு வழங்கிய அருட்கொடைகளில் ஒன்றான கண்பார்வைக்கு ஈடாகி விட்டது.
நீ வழங்கிய மற்றெந்த அருட்கொடைகளுக்கும் ஈடாக வேறெந்த அமலும் அவரின் பதிவேட்டில் இல்லை” என்று அல்லாஹ்விடம் கூறுவார்கள்.
فيقول أدخلوا عبدي النار قال فيجر إلى النار فينادي رب برحمتك أدخلني الجنة فيقول ردوه فيوقف بين يديه فيقول يا عبدي من خلقك ولم تك شيئا فيقول أنت يا رب فيقول كان ذلك من قبلك أو برحمتي فيقول بل برحمتك فيقول من قواك لعبادة خمس مائة عام فيقول أنت يا رب فيقول من أنزلك في جبل وسط اللجة وأخرج لك الماء العذب من الماء المالح وأخرج لك كل ليلة رمانة وإنما تخرج مرة في السنة وسألتني أن أقبضك ساجدا ففعلت ذلك بك فيقول أنت يا رب فقال الله عز وجل فذلك برحمتي وبرحمتي أدخلك الجنة أدخلوا عبدي الجنة فنعم العبد كنت يا عبدي فيدخله الله الجنة قال جبريل عليه السلام إنما الأشياء برحمة الله تعالى يا محمد". هذا حديث صحيح الإسناد
அது கேட்ட அல்லாஹ் வானவர்களிடம் “இதோ இந்த அடியானை நரகத்திற்கு இழுத்துச் செல்லுங்கள்” என்பான்.
அவர் நரகத்திற்கு இழுத்து செல்லப்படுவார். வழி நெடுக அவர் “இறைவா! உன் அருளின் துணை கொண்டே என்னை சுவனத்தில் நுழையச்செய்!” என அலறுவார்.
அந்த அலறலைக் கேட்டதும் அல்லாஹ் வானவர்களிடம்“அந்த அடியானை என் முன் கொண்டு வந்து நிறுத்துங்கள்!”என்பான். அவர் அல்லாஹ்வின் திருமுன் நிறுத்தப்படுவார்.
அப்போது, அல்லாஹ்வுக்கும் அந்த அடியானுக்கும் இடையே நடக்கின்ற அந்த உரையாடல் இதோ….
அல்லாஹ்: என் அடியானே! ஒன்றுமே இல்லாமல் இருந்த உன்னை படைத்தது யார்?
அடியான்: நீ தான் என் இறைவா!
அல்லாஹ்: என் அடியார்களிலேயே 500 ஆண்டு கால ஆயுளையும், வணக்க வழிபாடுகள் செய்கிற ஆற்றலையும் கொடுத்து உன்னை வாழ வைத்தது யார்?
அடியான்: நீ தான் என் இறைவா!
அல்லாஹ்: கடலும் –உப்பு நீரும் சூழ்ந்த இடத்தில் மதுரமான நீரூற்றையும், புற்பூண்டுகளே முளைத்திடாத பாறையிலிருந்து மாதுளை மரத்தையும் உனக்குக் கொடையாக வழங்கியது யார்?
அடியான்: நீதான் என் இறைவா!
அல்லாஹ்: உன் ரூஹ் ஸஜ்தா – சிரம் பணிந்த நிலையில் பிரிய வேண்டும் என்று நீ ஆசித்த போது உன் விருப்பத்தை நிறைவேற்றிக் கொடுத்தது யார்?
அடியான்: நீதான் என் இறைவா!
இந்த உரையாடலை முடித்து வைக்கும் முகமாக,இறுதியாக அல்லாஹ் அந்த அடியானிடம் “என் அடியானே! இவை அனைத்தும் என் அருளின் மூலமாகத்தான் நீ பெற்றாய்!இப்போதும், நீ என் அருளின் துணை கொண்டு தான் சுவனத்திற்கும் செல்ல இருக்கின்றாய்! அடியானே! என் அடியார்களில் நீ நல்லவனே” என்று கூறி விட்டு வானவர்களை நோக்கி “இதோ இந்த என் அடியானை என் அருளின் துணை கொண்டு சுவனத்தில் கொண்டு போய் விட்டு விடுங்கள்!” என்பான்.
இதைக் கூறி விட்டு ஜிப்ரயீல் (அலை) அவர்கள் என்னிடம்“முஹம்மத் {ஸல்} அவர்களே! ஓர் அடியானைச் சுற்றி ஈருலகிலும் நடைபெறும் அத்துனை காரியங்களும் அல்லாஹ்வின் அருளின் துணை கொண்டே தான் அமையப் பெறுகின்றது” என்று கூறி விடை பெற்றுச் சென்றார்” என்று நபி {ஸல்} அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.
( நூல்: முஸ்தத்ரக் அலஸ் ஸஹீஹைன் )
அல்லாஹ்வின் ஒரு சிறிய அருட்கொடைக்கு முன்னால் நம் அமல்கள்
ஹள்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
கியாமத் நாளன்று ஆதமுடைய மகனை விசாரிக்கும் போது முன்று வகையான பதிவேடுகள் கொண்டு வரப்படும்.
1) நற்செயல்கள் கொண்டதாக ஒரு பதிவேடு.
2) தீயச் செயல்கள் கொண்டதாக ஒரு பதிவேடு.
3) அல்லாஹ் அவனுக்கு வழங்கிய அருட்கொடைகளைத் தாங்கிய ஒரு பதிவேடு.
அருட்கொடைகள் எழுதப்பட்ட அப்பதிவேட்டிலிருந்து அனைத்திலும் மிகக் குறைந்த (சிறிய) ஓர் அருட்கொடையை அல்லாஹ் அழைப்பான். "இங்குள்ள நற்செயல்களிலிருந்து உனக்கு பகரமானதை எடுத்துக் கொள்!" என்று கூறுவான்.
அந்த ஒரு சின்னஞ்சிறிய அருட்கொடை முன்னால் வந்து, அனைத்து நற்செயல்களையும் அள்ளி எடுத்துக் கொள்ளும். பிறகு பின்னால் நகர்ந்து நின்றுக் கொண்டு, "யா அல்லாஹ்! உன் கண்ணியத்தின் மீது ஆணையாக! எனக்கு பகரமாக போதுமான நற்செயல்கள் கிடைக்கவில்லை" என்று கூறும்.
தீய செயல்களும் மற்ற அருட்கொடைகளும் தான் இப்போது எஞ்சியுள்ளன. நற்செயல்களிலோ ஒன்றும் மிஞ்சியிருக்காது.
அந்த அடியான் மீது கிருபை செலுத்தியவனாக அல்லாஹ், "என்னுடைய அடியானே! நான் உன்னுடைய நற்செயல்களை இரண்டிரண்டாக, நான்கு நான்காக, இரட்டிப்பாக்கி விடுகிறேன். நீ செய்த தீய செயல்களை கணக்கிலேயே கொள்ளவில்லை. என்னுடைய அருட்கொடைகளையெல்லாம் உனக்கு அன்பளிப்பாக நான் கொடுக்கிறேன்" எனக் கூறுவான்.
நூல்: அல் பஸ்ஸார்
நன்றி: நபிமொழிகளின் தோழமையில் பக்கம்-39,40
மயிரிழையில் சொர்க்கம் சென்றவர்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
ஓர் அடியானுக்கு எதிராக அவனது அங்கங்கள் (உடலுறுப்புகள்) வாக்குமுலம் கொடுக்கும்.
அச்சமயம் அவன் கண் இமையிலிருந்து ஒரு மயிர் பறந்து வந்து, அவனுக்கு சாதகமாக சாட்சி கூற அனுமதி கேட்கும்.
அப்போழுது அல்லாஹ், "என் அடியானின் கண் இமை ரோமமே! நீ பேசு! என் அடிமைக்காக வாதம் செய்" என்று கூறுவான்.
உடனே அம்மயிர், "என் இறைவா! இவ்வடி மை உன்னை அஞ்சி அழுதார்" என்று கூறும். உடனே அல்லாஹ் அவனுக்கு மன்னிப்பளிப்பான்.
அப்பொழுது ஒரு வானவர் " இவர் ஒரு முடியினால் அல்லாஹ்விடமிருந்து விடுதலை பெற்றவர்" என்று கூறுவார்.
நூல்: தஃவீலாத்துந் நஜ்மிய்யா.
நன்றி: கல்புல் குர்ஆன் பக்கம்-246,
சூரா யாஸீன் 65 வசன விரிவுரை.
அடியார்களின் மீது அல்லாஹ்வின் கருனை
ஹள்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:
ஒருமுறை அண்ணல் நபி அவர்களோடு நாங்கள் அமர்ந்திருந்தோம். திடீரென்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய முன் பற்கள் வெளியே தெரியுமளவிற்குச் சிரித்தார்கள். அதைக் கண்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் யா ரஸூலல்லாஹ்! என்னுடைய தாயும் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! தாங்கள் சிரிப்பதன் காரணம் என்ன? என்று கேட்டார்கள்.
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் "என்னுடைய உம்மத்தை சார்ந்த இரண்டு மனிதர்கள் கண்ணியத்திற்குரிய இறைவனுக்கு முன்னால் மண்டியிட்டு உட்கார்ந்து இருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர், என் இறைவா! என்னுடைய இந்த சகோதரனிடமிருந்து எனக்கான உரிமையினை பெற்றுக் கொடு! என்று முறையிட்டார்.
அதற்கு அவரைப் பார்த்து அல்லாஹ், உன் சகோதரனிடம் நீ என்ன எதிர்பார்க்கிறாய்? அவனிடம் ஒரு நன்மை கூட இல்லையே! என்று கூறினான்.
அதற்கு அந்த மனிதர், என்னுடைய இறைவா! "அவரிடம் நன்மை ஏதும் இல்லாவிட்டால் என்ன! என்னுடைய தீமைகளில் அவருக்கு கொஞ்சம் கொடுத்துவிடு"என்று கூறினார்.
"இதைக் கூறிக்கொண்டிருக்கும்போதே அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அழத் தொடங்கினார்கள்" அண்ணலார் உடைய கண்களில் இருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.
"அந்த நாள் மிகவும் கடினமான நாளாகும்"எப்படியாவது, எந்த வழியிலாவது நம்முடைய தீமைகள் குறைந்து விடக் கூடாதா? என்று மக்கள் எதிர்பார்த்து ஏங்கி ஓடிக் கொண்டிருப்பார்கள்" என்று கூறினார்கள்.
தொடர்ந்து அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அல்லாஹு த ஆலா இவ்வாறு கேட்கின்ற அந்த மனிதனைப் பார்த்து "உன்னுடைய பார்வையை உயர்த்தி கொஞ்சம் மேலே பார்" என்று கூறினான். அவரும் தன்னுடைய பார்வையை மேலே உயர்த்தி பார்த்தார். பொன்னாலான பட்டணம், தங்கத்தாலான மாளிகைகள் அவை முத்துக்களால் இழைக்கப்பட்டுள்ளன. "எந்த நபிக்காக இவை, எந்த (சித்தீக்) உண்மையாளருக்கானவை இவை? எந்த (ஷஹீத்) உயிர்ப் போராளிக்கானவை இவை? என்று அவர் விசாரித்தார்.
அதற்கு அல்லாஹ், "இவற்றிற்கான விலையை யார் கொடுக்கிறாரோ அவருக்குத்தான் இவை!'' என்று கூறினான்.
என்னுடைய ரப்பே! இதற்கான விலை யாரால் கொடுக்க முடியும்? என்று அந்த மனிதர் கூறினார்.
அதற்கு அல்லாஹ், உன்னால் கொடுக்க முடியும்! என்று கூறினான்.
''என்னாலா?" அது எப்படி?
"உன்னுடைய இந்த சகோதரனை நீ மன்னித்து விடு!
என் ரப்பே! நான் அவரை மன்னித்து விட்டேன்!
அல்லாஹ் அவரைப் பார்த்து, "உன்னுடைய சகோதரனின் கைகளைப் பிடித்துக் கொள், அவரை அழைத்துக் கொண்டு சொர்க்கத்தினுள் நுழைந்து விடு! என்று கூறுவான்.
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதை சொல்லி முடித்த பிறகு, அல்லாஹ்வுக்கு பயப்படுங்கள்! உங்களிடையே சாதானத்தையும் அன்பையும் வளர்த்துக் கொள்ளுங்கள்! முஸ்லிம்களிடையே சமாதானம் நிலவுவதை அல்லாஹ் விரும்புகிறான். முஸ்லிம்களிடையே அல்லாஹ் சமாதானத்தை நிலவ நிலவச் செய்கிறான்" என்று கூறினார்கள்.
நூல்: பைஹகீ
நன்றி- நபிமொழிகளின் தோழமையில். பக்கம்-14,15
No comments:
Post a Comment