அர்ஷின் கீழ் இருக்கும் மூன்று பொருட்கள்
عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ ، عَنْ أَبِيهِ ،عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : ثَلاثَةٌ تَحْتَ الْعَرْشِ يَوْمَ الْقِيَامَةِ : القُرْآنُ يُحَاجُّ الْعِبَادَ لَهُ ظَهْرٌ وَبَطْنٌ ، وَالأَمَانَةُ ، وَالرَّحِمُ تُنَادِي : أَلا مَنْ وَصَلَنِي وَصَلَهُ اللَّهُ ، وَمَنْ قَطَعَنِي قَطَعَهُ اللَّهُ " رواه في سرح السنة
ஹள்ரத் அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
மூன்று பொருட்கள் கியாமத் நாளில் அர்ஷின் கீழ் இருக்கும்.
1) அல்குர்ஆன் ; அடியார்களுக்காக அது (அல்லாஹ்விடம்) தர்க்கம் செய்யும். அதற்கு வெளிப் பொருளும் உட்பொருளும் இருக்கின்றன.
2) அமானிதம்;
3) உறவு முறை; (அந்நாளில் அது) "எவர் என்னை (உலகில்) சேர்ந்து வாழ்ந்தாரோ அவரை, அல்லாஹ் தன் அருளோடு சேர்த்துக் கொள்வானாக! எவர் என்னைத் துண்டித்து வாழ்ந்தாரோ அவரை, அல்லாஹ் (தன் அருளை விட்டும்) துண்டித்து விடுவானாக! என்று சப்தமிட்டுக் கூறும்".
நூல் : ஷரஹுஸ் ஸுன்னா
No comments:
Post a Comment