Thursday, 6 September 2018

பறிக்கப்பட்டு வரும் இந்திய முஸ்லிம் சமூக வாக்குரிமைகள்

பறிக்கப்பட்டு வரும் இந்திய முஸ்லிம் சமூக வாக்குரிமைகள்

       உலகளாவிய அளவிற்கு நம் இந்திய தேசம் தான் பன்முகத் தன்மையுடன்  கம்பீரமாக காட்சியளிக்கும் மிக முக்கிய நாடாகும். இதன் ஒவ்வொரு வளர்ச்சியிலும் இந்த நாட்டின் ஒவ்வொரு சமூகத்தாரின் தியாகங்கள் அலாதியானது.

     அந்த வரிசையில் முஸ்லிம்களின் தியாகங்களோ அளப்பரியது. சுதந்திர போராட்டம் துவங்கி இன்றைய பொது பிரச்சனை வரை மண்ணின் மைந்தர்களாகிய முஸ்லிம்களின் பங்குகள் ஏராளம். அந்தோ பரிதாபம் ஒரு சில வருடங்களாக இந்த மண்ணில் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தின் மீது நச்சுக் கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த பாரதத்தின் பன்முகத் தன்மையினை காக்க வேண்டி பல்வேறு தியாகங்கள் புரியும் முஸ்லிம் சமூகத்தினை நாடற்ற நாடோடிகளாக ஆக்கும் அழிச்சாட்டியங்கள் அரங்கேறி வருகின்றன.

     டைகர் சிங், பிரவின் தொகாடியா போன்ற சங்பரிவாரத்தின் முக்கிய பேச்சாளர்கள்  தங்களின் பேச்சில் எங்கள் கையில் எப்பொழுது முழு அதிகாரங்களும் வருமோ அப்பொழுது முஸ்லிம்களின் வாக்குரிமையினை பறித்து அவர்களை பாக்கிஸ்தானிற்கு அனுப்புவோம் அல்லது சில மணிதுளிகளில் அனைவரையும் வாட்களால் வெட்டி வீசிவிடுவோம் என தொடர்ந்து கூறிவருகின்றனர்.இவற்றை நாம் இணையதளத்தில் பார்வையிடலாம்.

     இந்த நச்சுப் பிரசாரங்களுக்கு தலைமையேற்று மேடையில் இருப்பதோ பிஜேபியின் பல மாநில முதல்வர்கள் ஆவார்கள்.

    இது போன்ற நூற்றுக்கணக்கான சூழ்ச்சிகள் அனுதினமும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பின்னப்படுகின்றன. இவைகளுக்கு தகுந்த பதிலடிகளை எடுக்காவிட்டால் இன்னும் சில வருடங்களில் இந்திய முஸ்லிம் சமூகம் தன் சொந்த மண்ணை விட்டும் துரத்தப்பட்ட ஸ்பெயின் முஸ்லிம்களை போலவும், நிம்மதியிழந்து வாடும் பலஸ்தீன் முஸ்லிம்களை போலவும், கொத்து கொத்தாக கொல்லப்பட்ட மியான்மர் முஸ்லிம்களை போலவும் ஆகிவிடுவர்

இந்திய முஸ்லிம்களின் மக்கட் தொகை கணக்கு

     Muslims constitute around 16% of the Indian population as of June 2018. There are 226 million Muslims in a national population of 1,405 million. Over 85% of Indian Muslims are Sunni, 14% are Twelver Shi’a and 1% are other sects (Ismaili, Nizari, Ahmedi etc).

     Jammu&Kashmir is the sole Muslim-majority Indian state with 70% Muslim population (98% in Kashmir). Assam (36%), Bengal (29%), Kerala (28%), Uttar Pradesh (21%), Bihar (18%), Jharkhand (16%) and Uttarakhand (15%) have large concentrations of Muslim population. Uttar Pradesh has the largest number of Muslims at close to 50 million, followed by Bengal with 31 million and Bihar with 22 million

     2018 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் எடுக்கப்பட்ட இந்திய முஸ்லிம்களின் மக்கட் தொகை 16% இந்திய மக்களில் உள்ளனர். அதாவது இந்தியாவின் 1,600 மில்லியன் மக்களில் 226 மில்லியன் முஸ்லீம்கள் உள்ளனர்.

     இந்த கணக்கீடில் பெயர்தாங்கி முஸ்லிம்களையும் இணைக்கப்பட்டுள்ளது அதாவது இந்திய முஸ்லிம்களில் 85% க்கும் மேற்பட்டவர்கள் சுன்னி முஸ்லிம்களாகவும், 14%  ஷியா மற்றும் 1% மற்ற பிரிவுகளான (இஸ்மாயீலி, நிஜாரி, அஹ்மதி) போன்றவர்களும் ஆவார்கள்.

      ஜம்மு & காஷ்மீரில் 70% முஸ்லீம்கள் (காஷ்மீரில் 98%) காஷ்மீர் தான் இந்தியாவிலேயே ஒரே முஸ்லிம் பெரும்பான்மை  மாநிலமாகும்.
அசாம் (36%), வங்காளம் (29%), கேரளா (28%), உத்திரப்பிரதேசம் (21%), பீகார் (18%), ஜார்கண்ட் (16%), உத்தரகண்ட் (15%) ஆகியவை முஸ்லிம்களின் பெரும்பான்மையினர். உத்தரபிரதேசத்தில் அதிகபட்சமாக முஸ்லிம்கள் 50 மில்லியனாக உள்ளனர். வங்காளத்தில் 31 மில்லியனும், பீகாரில் 22 மில்லியனும் உள்ளனர். மற்ற மாநிலங்களில் இதை விட குறைவாக உள்ளனர். மேலும் இந்த கணக்கீட்டில் எத்தனை முஸ்லிம்களின் பெயர்கள் விடுபட்டுள்ளன என்பதை நாம் அறிய மாட்டோம்.

      இந்திய தேசத்தில் இந்நாள் வரை ரேஷன் கார்டு கூட எடுக்காது வாழும் முஸ்லிம்கள், மலைவாழ் முஸ்லிம்கள், கைவிடப்பட்டு சாலையில் சுற்றி திரியும் வயோதிகரான முஸ்லிம்கள், மனநலம் பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள், ஆதரவற்றோர் இல்லங்களில் இருக்கும் முஸ்லிம்கள், வெளிநாட்டிலேயே நீண்ட காலமாக தங்கி விட்ட முஸ்லிம்கள் என்று துள்ளியமாக கணக்கிட்டால் முஸ்லிம்களின் மக்கட் தொகை எண்ணிக்கை மேலும் சற்று விரிவடைந்து கிட்டத்தட்ட முப்பது கோடியை தொடும்.

      ஆக இந்த தேசத்தில்  முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏறக்குறைய மூன்றில் ஒன்று என தொடும் தூரத்தில் உள்ளது.

    இந்த பெரும் கூட்டத்தை சன்னம் சன்னமாக நாட்டை விட்டும் அப்புறப்படுத்துவதற்கான வேளைகளை இந்த தேசத்தின் சுதந்திரப் போராட்டத்தில் சற்றும் பங்கில்லாத இந்திய ஒற்றுமையினையும்,அமைதியினையும் கெடுக்கும் RSS இயக்கம் தன் கிளைகளை வைத்து நீண்ட கால முயற்சியினால் செய்து வருகின்றது.

இலக்கை நோக்கிய பயணம்:-

       இஸ்லாமியர்களை முற்றிலும் இந்திய தேசத்தை விட்டும் அகற்றி இந்து இராஷ்டிராவாக இந்தியாவை ஆக்குவது தான் இவர்களின் கொள்கை தாரக மந்திரமாகும்.  இவர்களின் கரங்களில் இந்திய தேசத்தின் அதிகாரங்களும் முழுவதும் செல்லும் தருவாயிலேயே உள்ளன.
   
     இவர்கள் ஆட்சி பீடத்தில் அமர்ந்த பின் தங்களின் ஆதரவாளர்களை அரசின் அத்தனை துறைகளிலும் புகுத்தும் பணியை செய்து அதில் வெற்றியும் கண்டு விட்டனர். எனவே நாட்டின் மிக முக்கிய துறைகளான பாதுகாப்பு துறையிலும் இராணுவத்திலும், உளவுதுறையிலும்,  ஊடகத் துறையிலும், நீதிமன்ற துறையிலும் ஏன்? தேர்வானைய துறையிலும் இந்த சித்தாந்த சிந்தனைவாதிகளை நிரப்பி விட்டனர்.

     இப்பொழுது நாடு முழுவதும் காவிமயம் எனும் ஆக்டோபஸ்ஸினால் அகப்பட்டு மீள முடியாது உள்ளது.

     தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்களை ISIS உடன் தொடர்பாக உள்ளனர் என்று நாடு முழுவதும் காட்சிகளை அமைக்கின்றனர்.

      NIA எனும் உளவுத் துறையினை ஏவி அப்பாவி முஸ்லிம்களை கூட பல்வேறு இந்து தலைவர்களின் கொலைகளுக்கு பொறுப்பு ஏற்கும்படி மிரட்டுகின்றனர். முஸ்லிம்களின் பகுதிகளில் தொடர் சோதனை, இஸ்லாமிய இயக்கங்களுக்கு தீவிரவாத பயங்கரவாத சாயம் பூசி தடை, பசுக்களை கொல்வதாக விஷம பிரச்சாரம்,  முஸ்லிம்களுக்கு வாதாடும் சமூக முக்கியஸ்தர்கள், வழக்கறிஞர்கள், நடுநிலைவாத இந்துக்கள், எழுத்தாளர்கள் இவர்களின் மர்ம கொலை என இந்த பாசிச வேட்டை அணை திறந்த நீர் பாய்வதை போல் மிக வேகமாக தேசத்தில் பரவி வருகின்றன.

      முஸ்லிம்கள் வலிமையாக உள்ள இடங்களில் கலவரங்களின் மூலம் அவர்களின் பொருளாதாரத்தையும், வருவாய் துறை சோதனை மூலம் அவர்களின் வர்த்தகத்தையும், தொகுதிகளை பிரிப்பதன் மூலம் அவர்களின் அரசியல் பலத்தையும் உடைக்கின்றனர்.

     சமூக ஊடகத்தின் வாயிலாக இவர்களின் இளம் வயது கயவர்கள் முஸ்லிம்களை பாரத நாட்டிற்கு அச்சுறுத்தலாகவே காட்சியமைக்கின்றனர். இதனால் நடுநிலைவாத இந்துக்களின் மனதில் முஸ்லிம்களை பற்றிய நச்சுத் தன்மை இறக்குவதே இவர்களின் நோக்கமாகும்.

முஸ்லிம்கள் பெருகுவது தேசத்திற்கான ஆபத்தா?

       முஸ்லிம்கள் மக்கட் தொகையினை கட்டுப்படுத்த வேண்டும் என தொடர்ந்து சங்பரிவார தலைவர்கள் தங்களின் மேடை பேச்சுக்களில் கூறி வருகின்றனர். இன்னும் ஒரு சிலரோ கட்டாய குடும்பக் கட்டுப்பாடை செய்ய வேண்டும் என்றெல்லாம் கொக்கரிக்கின்றனர். இதனால் மூன்றாம் பிள்ளை பெறுவதையே சமூகத்தில் இழிவு என வாதிட்டு வருகின்றனர்.

      கடந்த பத்து ஆண்டுகளில் மட்டும் நடந்த முஸ்லிம்களின் பிரசவங்களில் 80% ஏதேனும் காரணம் கூறி அறுவை சிகிச்சை  பிரசவமாகவே நடந்தேரியுள்ளனர்.
  
     "ஆஜ் தக்" எனும் தொலைக்காட்சி வெளியிட்ட செய்திகளில்  "முஸ்லிம் பெண்களுக்கு மலட்டு தன்மையினையும் ஆண்களுக்கு ஆன்மை இழக்கும் தன்மையினையும் ஏற்படுத்தும் ஊசிகள் ஒரு சில இடங்களில் போடப்படுவதாக சந்தேகம் நிகழ்கிறது" என கூறியது
இவைகளுக்கெல்லாம் வலு சேர்க்கும் வகையில் முஸ்லிம்களின் மக்கட் தொகை பற்றி பகிரங்க விஷமக் கருத்தை பரப்பப்பட்டது இதோ

    "Hindus giving birth to only 1 or 2 children & are worried about educating them.But Muslims worried about how to take over the nation by increasing their population,education & development has no significance to them. Its my personal opinion."says Rajasthan BJP MLA BL Singhal pic.twitter.com/Jstjr5R5zN

— ANI (@ANI) January 1, 2018

    BJP MLA Banwari Lal Singhal, from Alwar, has triggered a massive row by alleging that Muslim were deliberately giving birth to more children in order to out number Hindus by 2030. Report by Arvind Singh in conversation with @roypranesh #BigotBanwari pic.twitter.com/2V8xOkVygZ
— TIMES NOW (@TimesNow) January 1, 2018

     இராஜஸ்தானின் பாஜக சட்டமன்ற உறுப்பினரான பன்வாரி லால் சிங்கல்
  "இந்துக்கள் ஒன்று அல்லது இரண்டு குழந்தைகளைக் கொண்டிருப்பதுடன், அவர்களைப் பற்றியும் அவர்களின் கல்வியினை பற்றியும் கவனம் செலுத்தி வருகின்றனர்.ஆனால் முஸ்லீம்களோ தங்கள் மக்களை அதிகரித்து எப்படி தேசத்தை கைப்பற்ற வேண்டும் என்பதை கவலைப்படுகிறார்கள். கல்வி மற்றும் முன்னேற்றத்தினை பற்றிய கவலை இவர்களுக்கு இல்லை" என்று கூறுகிறார்

     In a similar statement to Singhal’s, union minister Singh said: “The growing population of the country, especially Muslims, is a threat to the social fabric, social harmony, and development of the country”.

     The growing population of the country, especially Muslims, is a threat to the social fabric, social harmony, and development of the country: Union Minister Giriraj Singh pic.twitter.com/iM8nDRwoif

— News18 (@CNNnews18) January 2, 2018

    பாரதீய ஜனதா கட்சியின் (பி.ஜீ.பி)  மத்திய, மாநில சிறுபான்மையினர் மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சர் கிரிராஜ் சிங் கூறுகையில் "நாட்டின் பெருகிவரும் மக்கள், குறிப்பாக முஸ்லிம்கள், நாட்டின் சமூக சடங்கு, சமூக ஒற்றுமை, மற்றும் வளர்ச்சிக்கு ஒரு அச்சுறுத்தல் ஆகும்." என்றார்.

   ஆனால் விஷயமோ நேர்மாற்றமாக உள்ளது சரியான கணிப்பீட்டின்படி முஸ்லிம்களின் எண்ணிக்கை வீழ்ச்சியினை நோக்கியே செல்கின்றனர்
  
    மதரீதியான சமீபத்திய  புள்ளிவிவரங்கள் 2005-06ல் (NFHS -3) தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பில் இருந்து கிடைத்த  தகவலின் படி முஸ்லீம் வளம் விகிதங்கள் சமமான வேகத்தில் வீழ்ச்சியடைந்துள்ளன. அதாவது முஸ்லிம் குழந்தைகள் ஒவ்வொரு வருடமும் பிறப்பதில் சரிவு ஏற்பட்டுள்ளனர் 2050 வரை இந்து குழந்தைகள் பிறப்பதின் விகிதாச்சாரம் அச்சமயத்தில் மொத்த முஸ்லிம்களின் மக்கட் தொகைக்கு ஈடாக இருக்கும்.

   எனவே முஸ்லிம்களின் எண்ணிக்கை அளவை விட குறைந்து வரும் இந்த தருவாயில் முஸ்லிம்களின் குழந்தை பிறப்பை குறித்து தவறான நச்சுக் கருத்துக்களை தொடர்ந்து தூவும் சங்பரிவாரங்களின் சதிகள் முறியடிக்கப்பட வேண்டும்.
 
பறிக்கப்பட்டு வரும் முஸ்லிம் சமூகத்தின் வாக்குரிமைகள்:-

     வாக்காளர் பெயர் நீக்கம் என்பது நம் வாக்காளர் அட்டையில் உள்ள தகவல்கள் நம் அட்டையில் மாத்திரம் இருக்கும் ஆனால் அது தொடர்பான எந்த தகவலும் அரசாங்க கெஜட்டிலோ தேர்தல் ஆணைய வாக்காளர் பட்டியலிலோ இருக்காது அவற்றில் நீக்கப்பட்டிருக்கும்.

      திட்டமிடப்பட்டு சங்பரிவார கூட்டத்தை சார்ந்த சில இணையதள வல்லுநர்களின் மூலமும் தேர்தல் ஆணையத்தின் சில காவித்துவ சிந்தனைவாதிகளின் முயற்சிகள் மூலமும் இவை அரங்கேறுகின்றன.

      சச்சார் கமிட்டியின் செயலாளர் அபூசாலிஹ் ஷரீப் அவர்களின் தலைமையில் ஓர் தொண்டு நிறுவனம் CRDDP 2012 மே 9ல் இருந்து தில்லியில் நடைபெறுகிறது.  இவர் தான்  இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான முஸ்லிம்களின் வாக்குரிமைகள் பரிக்கப்பட்டுள்ளதை அதாவது வாக்காளர் பதிவேட்டிலிருந்து தகவல்கள் நீக்கப்பட்டுள்ளதை முதன்முதலில் கண்டுப்பிடித்தார். இவர்களின் தொண்டு நிறுவனம் சார்பாக நாடு முழுவதும் விழிப்புணர்வு கூட்டங்கள் நடைபெறுகின்றன.

     "இவர்களின் தொண்டு நிறுவனம் மேற்கொண்ட பெரும் முயற்சியில் இந்தியா முழுவதும் 4.5 கோடி முஸ்லிம்களின் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கலாம் என்ற செய்தியினை கூறுகிறார்கள்"

     "குறிப்பாக கர்நாடகத்தில்  13.4 இலட்சம் தமிழகத்தில் 12 லட்சம் முஸ்லிம் வாக்காளர்களின் பெயர்களும் அதன் தகவல்களும் நீக்கப்பட்டு உள்ளதை கண்டுப்பிடித்துள்ளனர்"

   இது தொடர்பான பல்வேறு செய்திகளுக்கு கீழ்காணும் இணையதளங்களில் காணலாம்
  
http://missingmuslimvoters.com/Login/AboutUs

http://missingmuslimvoters.com

     முஸ்லிம்கள் பெருவாரியாக வாழும் சென்னை துறைமுகம் பகுதியில் மாத்திரம் 30% நீக்கப்பட்டுள்ளது திடுக்கிடும் செய்தியாகும்.

    இவ்வாறு நீக்கப்பட்டிருப்பதை குறித்து அபூ ஸாலிஹ்ஷரீப் அவர்கள் கூறுகையில் "முஸ்லிம்களின் பெயர் நீக்கம் ஒரு திட்டத்தின் கீழ் தான் செயல்பட்டு வருகின்றது" source: FRONTLINE JULY 2018 எனக் கூறினார்
          
    பொதுவாக இந்திய முஸ்லிம் சமூகம் அரசு சார்ந்த தங்களின் எந்த பதிவுகளாக இருந்தாலும் அவற்றை பற்றிய கவனக் குறைவாகவே உள்ளனர்.
இன்று வரை நம்மில் இருக்கும் எத்தனையோ முஸ்லிம்களுக்கு சரியாக "பிறப்பு சான்றிதழ்" BIRTH CERTIFICATE  "கல்வி மாற்று சான்றிதழ்" T C TRANSFER CERTIFICATE கூட இல்லை.

     இன்னும் பலரோ தங்களின் அலட்சிய போக்கால் "ஆதார் கார்டு" "வாக்காளர் கார்டு" கூட எடுக்காமல் உள்ளனர்.

     மேற்கூறிய இந்த பதிவுகளில் ஏதேனும் எழுத்துப் பிழை இருப்பின் அதை கூட திருத்துவதற்கு முன் வருவதில்லை.

     இதில் என்ன கொடுமையென்றால் பெரும்பாலான முஸ்லிம்கள் தங்களின் குடும்பத்தார்களில் நடக்கும் மரணத்திற்கு முறையாக CORPORATION OFFICE ல் DEATH CERTICATE மரண சான்றிதழ்  கூட வாங்குவதில்லை. முஸ்லிம் சமூகத்தின் ஒவ்வொரு அலட்சிய போக்கும் சங்பரிவாரங்களின் ஆயுதங்களாக மாறுகின்றனர்

     மியான்மரில் ராக்கைன் பகுதி முஸ்லிம்கள் மீது இராணுவம் தொடுத்த தாக்குதலிற்கு கூறிய சப்பை காரணம்  "இவர்கள் மியான்மர் நாட்டு குடிமக்கள் இல்லை அகதிகளாக ஊடுறுவியவர்கள்" என்பதாகும்.

     அதற்கொப்பவே சமீபத்தில் இந்திய அரசாங்கம் NCR தேசிய மக்கள் ஏடு என்பதை தயாரித்து  அசாம் முஸ்லிம்கள் நாற்பது இலட்சம் பேர் விஷயத்தில் செய்துள்ளது. 40 லட்சம் பேர்களுக்கு வாக்காளர் அட்டை மறுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து அந்த மக்களின் போராட்டங்களினாலும் முக்கியமான எதிர்கட்சி தலைவர்களின் கடும் விமர்சணத்திலும் அவர்களுக்கு "D" என்று பொறிக்கப்பட்ட ஓர் குடியுரிமையினை கொடுத்துள்ளது. அதாவது "DOUBTFUL CITIZEN" இவர்கள் இந்திய குடிமக்கள் என்பதிலேயே சந்தேகம் உள்ளது என்பது அதன் பொருளாகும்.

     இந்த 40 லட்சத்தில் பெரும்பாலோர் முறையே ஆதார் கார்டு, பாஸ்போர்டு, டிரைவிங் லைசன்ஸ், வங்கிக் கணக்கு வைத்திருக்கும் மக்கள் ஆவார்கள்.
மேலும் இதில் 30 வருடங்கள் இந்திய தேசத்தினை காக்க இராணுவத்தில் பணியாற்றிய இராணுவ அதிகாரியின் பெயரும் முன்னால் குடியரசு தலைவர் அஹ்மத் அலியவர்களின் குடும்பத்தார்களின் பெயர்களும் அடங்கும்.

     இன்று அசாம் முஸ்லிம்கள் நாடற்ற நாடோடிகளாகி விட்டனர். அவர்களை சுட்டு தள்ளவேண்டும் என பகிரங்கமாக தெலுங்கானாவின் பிஜேபி MLA கூறியதை மீடியாவும் பூதாகரமாக்கியது அவ்வாறு நடப்பதற்கும் சாத்தியக் கூறுகளும் உள்ளன.

     மேடை தோறும் சங்பரிவார தலைவர்கள் இந்தியா முழுவதும் வங்காள அகதிகளும், ரோஹிங்கியா அகதிகளும் ஊடுறுவி விட்டனர். இதனால் தேசத்திற்கு பாதுகாப்பில்லை அவர்களை கட்டாயமாக வெளியேற்றியே ஆகவேண்டும் என்று கொக்கரிக்கின்றனர்.

     காஷ்மீரின் முன்னாள் முதல்வர் மஹ்பூபா முப்தியின் மீது ரோஹிங்கிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுத்ததை பெரும் குற்றச்சாட்டாக எழுப்பினர். அதனை கண்டிக்கவே சிறுமி ஆஷிபாவின் கொலையை செய்தோம் என்றும் கூறினர்.

     இன்றும் சைனாவின் பலபகுதிகளில் முஸ்லிம்களுக்கு வாக்குரிமைகளில்லை.

     நாளை இந்த நிலை நமக்கும் வரலாம் அதாவது இந்த NCR எனும் அட்டையினை இந்தியா முழுக்க கொண்டு வரவும் முயற்சிகள் நடக்கின்றன. அப்படியானால் நிலைமை என்னவாகும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே நம்மால் இயன்றவரை முயற்சிகளை மேற்கொள்வதுடன் அல்லாஹ்விடத்திலும் உதவிகளை கோர வேண்டும்.

    ஆதார் கார்டின் அலட்சியப் போக்கால் தனிமனித தகவல்களெல்லாம் திருடப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வந்த வண்ணமே உள்ளன. சமீபத்தில் தொலை தொடர்பு ஒழுங்கு துறை ஆணைய தலைவர் ஆதார் எண்ணை வைத்து அவரது முழு இரகசிய தகவல்களும் திருடப்பட்டது. இதை வைத்து பார்க்கையில் வாக்காளர் அட்டையினை தான் முக்கியமாக ஆக்கப் போவதாக தகவல்கள் வெளிவருகின்றன. அவற்றிற்கு  ஆதாரம் சேர்க்கும் வகையில் கீழ்க்காணும் சொற்கள் அமைந்துள்ளன

   "ஆதார் அட்டை குடியுரிமை அட்டையாக ஆக இருந்தது அதிலுள்ள குறைகள் தெளிவாக தெரிந்ததால் அது கைவிடப்பட்டு வாக்காளர் அட்டையும் வாக்காளர் பட்டியலில் பெயரும் குடியுரிமை அடிப்படை அத்தாட்சியாகலாம்"
   (SUMMARY OF PANEL DISCUSSION ON INDIA VOT MISSION 2019 - NO VOTER LEFT BEHIND)
  
      ஆகவே முஸ்லிம் சமூகம் விழிப்புணர்வுடன் செயல்பட்டு தங்களின் வாக்குரிமைகளையும் வாழ்வாதாரங்களையும் பாதுகாக்க வேண்டும்.

விழிப்புணர்வு பெறுவது எப்பொழுது:-

             மக்காவில் இருந்து மதீனாவிற்கு வந்த பின்பும் முஸ்லிம்களை  அச்சுறுத்திய எதிரிகளின் ஒவ்வொரு சூழ்ச்சிகளையும் நபியவர்கள் தொடர்ந்து கண்கானித்து முறியடித்ததை நாம் அறிவோம்.
வெற்றிவாக்கு முன்னரே அறிவிக்கப்பட்ட பத்ர் போரில் கூட பெருமானார் அல்லாஹ் உதவுவான் என அமர்ந்து விடவில்லை. தங்களால் முடிந்த முன்னேற்பாடுகளை கச்சிதமாக செய்தார்கள். உஹத் போராகட்டும் அகழ் போராகட்டும் நபியவர்கள் இந்த சமூகத்தை காக்க முயற்சித்த முயற்சிகளுடன் இறை ஆதரவும் இருந்ததால் வெற்றி கிட்டியது.

    அந்த பாணியை தற்போதைய முஸ்லிம் தலைவர்கள் கையாள வேண்டும். தங்களுக்குள் இருக்கும் வேற்றுமைகளையும் கொள்கை மோதல்களையும் சற்று ஒதுக்கிவிட்டு இந்த ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் பேராபத்திற்கு என்ன செய்யலாம் என்பதை சிந்திக்க வேண்டும்.

     மக்கத்து காபிர்கள், மாநபியினையும் முஸ்லிம்களையும் மொத்தமாக கொலை செய்ய திட்டம் தீட்டியதை பற்றியும் அல்லாஹ் பாதுகாத்ததையும் பற்றியும்

وَاِذْ يَمْكُرُ بِكَ الَّذِيْنَ كَفَرُوْا لِيُثْبِتُوْكَ اَوْ يَقْتُلُوْكَ اَوْ يُخْرِجُوْكَ‌ وَيَمْكُرُوْنَ وَيَمْكُرُ اللّٰهُ‌ وَاللّٰهُ خَيْرُ الْمٰكِرِيْنَ‏
"(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ, அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) வெளியேற்றிவிடவோ நிராகரிப்போர் சூழ்ச்சிசெய்ததை நினைவு கூறுவீராக; அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; அல்லாஹ்வும் (அவர்களுக்கு எதிராகச்) சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். சூழ்ச்சி செய்வோரில் எல்லாம் அல்லாஹ் மிகவும் மேன்மையுடையவன்"
(அல்குர்ஆன் : 8:30) என்று கூறுகிறான். எனவே நாம் சரியானால் நமக்கும் இறை உதவி வரும்
       
وَدُّوْا لَوْ تَكْفُرُوْنَ كَمَا كَفَرُوْا فَتَكُوْنُوْنَ سَوَآءً‌
"(முஃமின்களே!) அவர்கள் நிராகரிப்பதைப் போல் நீங்களும் நிராகரிப்போராகி நீங்களும் (இவ்வகையில்) அவர்களுக்கு சமமாகி விடுவதையே அவர்கள் விரும்புகிறார்கள்"
(அல்குர்ஆன் : 4:89) என்று அல்லாஹ் கூறுவதை போல் இந்த சங்பரிவாரங்கள் ஒன்று நம்மை நம் மார்க்கத்தை விட்டு "தாய் மதம்" "கஹ்ர் வாப்பஸி" என்று இவர்கள் கூறும் இந்து மதத்திற்கு மாறக் கூறுவர்.அல்லது இந்திய நாட்டை விட்டும் வெளியேற்ற முயல்வர். ஆகவே அதனை தடுக்கும் வழிமுறைகளில் நாம் இறங்க வேண்டும்.

    "தன் ஒட்டகம் காணாமல் போவதை பற்றி மாநபியிடம் முறையிட்ட ஓர் சஹாபியிற்கு முதலில் ஒட்டகத்தை கட்டிப் போடு மேலும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வை بل اعقلها وتوكل  திர்மிதி ஷரீபின்" ஹதீஸிற்கு ஒப்ப நாம் முதலில் களத்தில் இறங்க வேண்டும்.

மேலும் அல்லாஹ்விடம் நம் பாவங்களுக்காக மன்றாட வேண்டும்

ظَهَرَ الْفَسَادُ فِى الْبَرِّ وَالْبَحْرِ بِمَا كَسَبَتْ اَيْدِى النَّاسِ لِيُذِيْقَهُمْ بَعْضَ الَّذِىْ عَمِلُوْا لَعَلَّهُمْ يَرْجِعُوْنَ‏
"மனிதர்களில் கைகள் தேடிக்கொண்ட (தீச் செயல்களின்) காரணத்தால் கடலிலும் தரையிலும் (நாசமும்) குழப்பமும் தோன்றின; (தீமைகளிலிருந்து) அவர்கள் திரும்பிவிடும் பொருட்டு அவர்கள் செய்தார்களே (தீவினைகள்) அவற்றில் சிலவற்றை (இவ்வுலகிலும்) அவர்கள் சுவைக்கும்படி அவன் செய்கிறான்"
(அல்குர்ஆன் : 30:41) என்ற இறை வாக்கிற்கினங்க நம் மூலமாக நம் அழிவு ஏற்படாமல் இருக்க இறைவனிடம் உதவி தேட வேண்டும்.

     நாயகத்தின் அத்தனை மஜ்லிஸ்களிலும் ஓதப்பட்ட துஆவாக
    
"وَانْصُرْنَا عَلَى مَنْ عَادَانَا ، وَلاَ تَجْعَلْ مُصِيبَتَنَا فِي دِينِنَا ، وَلاَ تَجْعَلِ الدُّنْيَا أَكْبَرَ هَمِّنَا ، وَلاَ مَبْلَغَ عِلْمِنَا ، وَلاَ تُسَلِّطْ عَلَيْنَا مَنْ لاَ يَرْحَمُنَا" عن ابن عمر رضي الله عنهما رواه الترمذي (رقم/3502)
எங்களின் எதிரிகளுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்! எங்களின் மார்க்கத்தில் சோதனையை கொடுத்து விடாதே! உலகத்தை எங்களின் கவலையிலேயே பெரிய கவலையாக ஆக்கி விடாதே! எங்களின் மீதுஇரக்கமே காட்டாத எதிரிகளை (எங்களின் பாவங்களினால்) சாட்டாதே! என்ற துஆக்களை அதிகம் அதிகம் ஓதி வர வேண்டும்.
      இறை உதவியிற்கு முன் இவர்களின் சூழ்ச்சிகளெல்லாம் தவிடு பொடியாகிவிடும். ஏனெனில் அவன் தான் சிறந்த சூழ்ச்சியாளன் என திருமறையில் பல்வேறு இடங்களில் பறை சாற்றுகின்றான்.
      ஆக சிறந்த முஃமினாக நம்மை மாற்றிக் கொள்ளும் தருவாய் இது

وَلَا تَهِنُوْا وَ لَا تَحْزَنُوْا وَاَنْتُمُ الْاَعْلَوْنَ اِنْ كُنْتُمْ مُّؤْمِنِيْنَ‏* 
"எனவே நீங்கள் தைரியத்தை இழக்காதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள்; நீங்கள் முஃமின்களாக இருந்தால் நீங்கள் தாம் உன்னதமானவர்களாக இருப்பீர்கள்"
(அல்குர்ஆன் : 3:139) என்ற அல்லாஹ்வின் வசனத்திற்கேற்ப நாம் நம்மை சிறந்த முஃமினாக ஆக்கிக் கொண்டால் எல்லா சூழலிலும் இறை உதவி நமக்கு இறங்கிக் கொண்டேயிருக்கும்.
     
     தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி செப்டம்பர் 1 முதல் அக் 31 வரை நடக்கவுள்ளது. ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அதன் அதிகாரிகள் குறைந்தது மூன்று முறையாவது செல்ல வேண்டும் என தேர்தல் கமிஷன் ஆணையிட்டுள்ளது.

     ஆகவே ஒவ்வொரு மஹல்லாவின் இமாமும் நிர்வாகிகளும் ஒன்று சேர்ந்து அந்த மஹல்லாவின் ஒற்றை ஒற்றை முஸ்லிமின் புள்ளிவிவரங்களையும் ஆய்வு செய்ய வேண்டும். என்ன குறைகள் உள்ளனவோ அவற்றை நிவர்த்தி செய்ய நேராகவோ மறைமுகமாகவோ முன்வர வேண்டும்.இது தொடர்பான துறையிலேயே உள்ள முஸ்லிம் வழக்கறிஞர்கள் சமூக தலைவர்களின் ஆலோசனைகளை பெற வேண்டும். தேர்தல் குறித்த கருத்துக்களையும் முஸ்லிம்களின் நிலைமைகளையும் ஒவ்வொரு முஸ்லிம்களின் வீட்டிற்கும் எடுத்து செல்ல வேண்டும். தேர்தல் வாக்காளர் மையங்களையும் அந்தந்த பகுதிகளின் இ-சேவை மையங்களையும் அணுகி நம் வாக்காளர் அட்டையினை சரி செய்ய வேண்டும்.பதினெட்டு வயது நிரம்பிய நம் வீட்டு ஆண்,பெண்களுக்கு வாக்காளர் அட்டை எடுக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.நாம் எப்படி முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதை விளக்க வேண்டும்.

  "வரும் 2019 நாடாளுமன்ற தேர்தல் அம்பெத்கார், மஹாத்மா காந்திய சிந்தனைக்கும் கோட்சே, கோல்வால்கரிய சிந்தனைக்கும் நடக்கும் யுத்தம்"-தேஜஸ்வி யாதவ் -ஆர் ஜே டி மூத்த தலைவதலைவர் (தி இந்து 06-08-18) கூறியதை போல
வரும் 2019 நாடாளுமன்ற தேர்தல் முஸ்லிம்களுக்கு ஓர் பத்ர் யுத்தமாகவே இருக்கும். அதற்கான முன்னேற்பாடுகளையும் நாம் செய்ய வேண்டும் அல்லாஹ்விடம் பிரார்த்தனையும் புரிய வேண்டும்.

     வல்லோனாம் அல்லாஹ் இந்திய முஸ்லிம்களின் சொந்த மண்ணில் நிம்மதியாக காலம் காலமாக இருக்கவும் தங்களின் மார்க்கத்தை பின்பற்றவும் வழிவகை செய்வானாக!

    ஆக்கம்:மௌலவி ஹாஃபிழ் M.முஹம்மது ஃபாழில் நாஃபியி,
உஸ்தாத்- ஜாமிஆ அல்ஹுதா அரபிக் கல்லூரி,அடையாறு,சென்னை.

No comments:

Post a Comment