அல்லாஹ்வின் ஒரு சிறிய அருட்கொடைக்கு முன்னால் நம் அமல்கள்
ஹள்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
கியாமத் நாளன்று ஆதமுடைய மகனை விசாரிக்கும் போது, முன்று வகையான பதிவேடுகள் கொண்டு வரப்படும்.
1) நற்செயல்கள் கொண்டதாக ஒரு பதிவேடு.
2) தீயச் செயல்கள் கொண்டதாக ஒரு பதிவேடு.
3) அல்லாஹ் அவனுக்கு வழங்கிய அருட்கொடைகளைத் தாங்கிய ஒரு பதிவேடு.
அருட்கொடைகள் எழுதப்பட்ட அப்பதிவேட்டிலிருந்து அனைத்திலும் மிகக் குறைந்த (சிறிய) ஓர் அருட்கொடையை அல்லாஹ் அழைப்பான். "இங்குள்ள நற்செயல்களிலிருந்து உனக்கு பகரமானதை எடுத்துக் கொள்!" என்று கூறுவான்.
அந்த ஒரு சின்னஞ்சிறு அருட்கொடை முன்னால் வந்து, அனைத்து நற்செயல்களையும் அள்ளி எடுத்துக் கொள்ளும். பிறகு பின்னால் நகர்ந்து நின்றுக் கொண்டு, "யா அல்லாஹ்! உன் கண்ணியத்தின் மீது ஆணையாக! எனக்கு பகரமாக போதுமான நற்செயல்கள் கிடைக்கவில்லை" என்று கூறும்.
தீய செயல்களும், மற்ற அருட்கொடைகளும் தான் இப்போது எஞ்சியுள்ளன. நற்செயல்களிலோ ஒன்றும் மிஞ்சியிருக்காது.
அந்த அடியான் மீது கிருபை செலுத்தியவனாக அல்லாஹ், "என்னுடைய அடியானே! நான் உன்னுடைய நற்செயல்களை இரண்டிரண்டாக, நான்கு நான்காக, இரட்டிப்பாக்கி விடுகிறேன். நீ செய்த தீய செயல்களை கணக்கிலேயே கொள்ளவில்லை. என்னுடைய அருட்கொடைகளையெல்லாம் உனக்கு அன்பளிப்பாக நான் கொடுக்கிறேன்" எனக் கூறுவான்.
நூல்: அல் பஸ்ஸார்
நன்றி: நபிமொழிகளின் தோழமையில் பக்கம்-39,40.