Monday, 29 July 2019

சிறிய அருட்கொடைக்கு முன்னால்...

அல்லாஹ்வின் ஒரு சிறிய அருட்கொடைக்கு முன்னால் நம் அமல்கள்

   ஹள்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:

   நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

   கியாமத் நாளன்று ஆதமுடைய மகனை விசாரிக்கும் போது, முன்று வகையான பதிவேடுகள் கொண்டு வரப்படும்.

   1) நற்செயல்கள் கொண்டதாக ஒரு பதிவேடு.

   2) தீயச் செயல்கள் கொண்டதாக ஒரு பதிவேடு.

   3) அல்லாஹ் அவனுக்கு வழங்கிய அருட்கொடைகளைத் தாங்கிய ஒரு பதிவேடு.

   அருட்கொடைகள் எழுதப்பட்ட அப்பதிவேட்டிலிருந்து அனைத்திலும் மிகக் குறைந்த (சிறிய) ஓர் அருட்கொடையை அல்லாஹ் அழைப்பான். "இங்குள்ள நற்செயல்களிலிருந்து உனக்கு பகரமானதை எடுத்துக் கொள்!" என்று கூறுவான்.

   அந்த ஒரு சின்னஞ்சிறு அருட்கொடை முன்னால் வந்து, அனைத்து நற்செயல்களையும் அள்ளி எடுத்துக் கொள்ளும். பிறகு பின்னால் நகர்ந்து நின்றுக் கொண்டு, "யா அல்லாஹ்! உன் கண்ணியத்தின் மீது ஆணையாக! எனக்கு பகரமாக போதுமான நற்செயல்கள் கிடைக்கவில்லை" என்று கூறும்.

   தீய செயல்களும், மற்ற அருட்கொடைகளும் தான் இப்போது எஞ்சியுள்ளன. நற்செயல்களிலோ ஒன்றும் மிஞ்சியிருக்காது.

   அந்த அடியான் மீது கிருபை செலுத்தியவனாக அல்லாஹ், "என்னுடைய அடியானே! நான் உன்னுடைய நற்செயல்களை இரண்டிரண்டாக, நான்கு நான்காக, இரட்டிப்பாக்கி விடுகிறேன். நீ செய்த தீய செயல்களை கணக்கிலேயே கொள்ளவில்லை. என்னுடைய அருட்கொடைகளையெல்லாம் உனக்கு அன்பளிப்பாக நான் கொடுக்கிறேன்" எனக் கூறுவான்.

              நூல்: அல் பஸ்ஸார்

நன்றி: நபிமொழிகளின் தோழமையில் பக்கம்-39,40.

Wednesday, 24 July 2019

04-மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த முத்தான மூன்று போதனைகள்!-4

கியாமத் நாளில் மனிதர்கள் மூன்று விதமாக எழுப்பப்படுவார்கள்.

١٤٧- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ ثَلاَثَةَ أَصْنَافٍ: صِنْفاً مُشَاةً، وَصِنْفاً رُكْبَاناً، وَصِنْفًـا عَلَي وُجُوهِهِمْ قِيلَ: يَا رَسُولَ اللّٰهِؐ فَكَيْفَ يَمْشُونَ عَلَي وُجُوهِهِمْ؟ فَقَالَ: إِنَّ الَّذِي أَمْشَاهُمْ عَلَي أَقْدَامِهِمْ قَادِرٌ عَلَي أَنْ يُمْشِيَهُمْ عَلَي وُجُوهِهِمْ أَمَا إِنَّهُمْ يَتَّقُونَ بِوُجُوهِهِمْ كُلَّ حَدَبٍ وَّشَوْكَةٍ. رواه الترمذي وقال هذاحديث حسن باب ومن سورة بني اسرائيل، رقم:٣١٤٢
    ஹள்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:

   ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

   கியாமத் நாள் அன்று மக்கள் மூன்று விதமாக எழுப்பப்படுவார்கள்.

    நடந்த வண்ணமாகவும்; வாகனத்தில் அமர்ந்தவர்களாகவும்; முகங்குப்புற நடந்தவர்களாகவும் எழுப்படுவார்கள்.

    அப்போது, “யா ரஸூலல்லாஹ், முகங்குப்புற எப்படி நடப்பார்கள்?’’ என்று கேட்கப்பட்டது.

  “கால்களால் நடக்க வைத்தவன், நிச்சயமாக அவர்களை முகங்குப்புற நடக்க வைக்கவும் சக்தி பெற்றவன்.

   கவனமாகக் கேளுங்கள்! இம்மக்கள் தங்கள் முகங்களாலேயே பூமியிலுள்ள முட்களை விட்டும், மேடு பள்ளங்களை விட்டும் தம்மை தற்காத்துக் கொள்வார்கள்.

                          நூல்: திர்மிதீ

Monday, 22 July 2019

03-மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த முத்தான மூன்று போதனைகள்!-3

சுவனத்தின் இரு ஓரங்களில் எழுதப்பட்டுள்ள மூன்று வரிகள்!

٥٩- عَنْ أَنَسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : دَخَلْتُ الْجَنَّةَ فَرَأَيْتُ فِي عَارِضَتَيِ الْجَنَّةِ مَكْتُوباً ثَلاَثَةَ أَسْطُرٍ بِالذَّهَبِ: اَلسَّطْرُ اْلاَوَّلُ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ مُحَمَّدٌ رَسُولُ اللّٰهِؐ، وَالسَّطْرُ الثَّانِي مَا قَدَّمْنَا وَجَدْنَا وَمَاأَكَلْنَا رَبِحْنَا وَمَاخَلَّفْنَا خَسِرْنَا، وَالسَّطْرُ الثَّالِثُ أُمَّةٌ مُذْنِبَةٌ وَرَبٌّ غَفُورٌ. رواه الرافعي وابن النجاروهو حديث صحيح، الجامع الصغير:١ /٦٤٥
   ஹள்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:

    ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

    நான் சொர்க்கத்தில் நுழைந்தேன். அதன் இரு ஓரங்களிலும் மூன்று வரிகள் தங்கத்தால் எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன்.

     முதல் வரியில், “லா இலாஹ இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரஸூலுல்லாஹி’ என்றும்,

    இரண்டாம் வரியில், “நாம் (நற்செயல்கள் செய்து) முற்படுத்தி அனுப்பி வைத்தவைகளின் நன்மைகளை அடைந்து கொண்டோம். நாம் உலகில் உண்டு (உடுத்தி) அனுபவித்தவைகளின் பலன்களை (உலகில்) அடைந்து கொண்டோம். நாம் விட்டு வந்தவைகள் நமக்கு நஷ்டமாகிவிட்டது’ என்றும்,

     மூன்றாம் வரியில், “சமுதாயத்தினர் பாவம் செய்யக் கூடியவர்கள் ரப்பு மன்னிக்கக் கூடியவன்’ என்றும். எழுதப்பட்டிருந்தது.

           நூல்: ராஃபிஈ, இப்னு நஜ்ஜார்

Sunday, 21 July 2019

02-மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த முத்தான மூன்று போதனைகள்!-2

இரட்டிப்பான நன்மையைப் பெறும் மூவர்!

٢٨- عَنْ أَبِي مُوسيؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ: ثَلاَثَةٌ لَهُمْ أَجْرَانِ: رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابِ آمَنَ بِنَبِيِّهِ وَآمَنَ بِمُحَمَّد ، وَالْعَبْدُ الْمَمْلُوكُ إِذَا أَدَّي حَقَّ اللّٰهِ تَعَالَي وَحَقَّ مَوَالِيهِ، وَرَجُلٌ كَانَتْ عِنْدَهُ أَمَةٌ فَأَدَّبَهَا فَأَحْسَنَ تَأْدِيبَهَا وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا ثُمَّ أَعْتَقَهَا فَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ. رواه البخاري، باب تعليم الرجل امته واهله، رقم:٩٧
   ஹள்ரத் அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:

   ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

   மூவருக்கு இரட்டிப்பான நன்மைகள் கிடைக்கும்.

    1)வேதம் அருளப்பட்ட கிருஸ்தவர் அல்லது யூதர். அவர், தம் முந்தைய நபியின் மீது விசுவாசம் கொண்டு பின்பு முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் ஈமான் கொண்டவர்.

    2) அல்லாஹ்வின் கடமைகளையும் நிறைவேற்றி, தன் எஜமானின் கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை.

    3) தன்னிடம் இருக்கும் அடிமைப் பெண்ணுக்கு நல்ல முறையில் நல்லொழுக்கம் கற்றுத்தந்து, நல்ல முறையில் இல்மையும் கற்றுத்தந்து, அவளை உரிமைவிட்டு தானே மணமுடித்துக் கொண்டவர்.

                               நூல்:புகாரி

01-மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த முத்தான மூன்று போதனைகள்!-1

ஈமானின் சுவையைப் பெற்றுத் தரும் மூன்று!

٢١- عَنْ أَنَسٍؓ عَنِ النَّبِيِّؐ قَالَ: ثَلثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلاَوَةَ اْلإِيمَانِ: أَنْ يَكُونَ اللّٰهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا، وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لاَيُحِبُّهُ إِلاَّ للّٰهِ، وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ. رواه البخاري، باب حلاوة الايمان، رقم:١٦ 21.“
   ஹள்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:

    நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

   மூன்று தன்மைகள் எவரிடம் இருக்குமோ அவர் ஈமானின் சுவையைப் பெற்றுக் கொள்வார்:

  1)அல்லாஹ்வின் மீதும் அவனது ரஸூலின் மீதும் உள்ள நேசம் மற்றவைகளின் நேசத்தைவிட மிகைத்திருப்பது.

   2)யாரை நேசித்தாலும் அல்லாஹ்வுக்காகவே நேசிப்பது.

   3) நெருப்பில் தான் எறியப்படுவதை வெறுப்பது போல் (ஈமான் கொண்ட பிறகு) குஃப்ரின் பக்கம் திரும்புவதை வெறுப்பது.

                                    நூல்: புகாரி