சுவனத்தின் இரு ஓரங்களில் எழுதப்பட்டுள்ள மூன்று வரிகள்!
٥٩- عَنْ أَنَسٍؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : دَخَلْتُ الْجَنَّةَ فَرَأَيْتُ فِي عَارِضَتَيِ الْجَنَّةِ مَكْتُوباً ثَلاَثَةَ أَسْطُرٍ بِالذَّهَبِ: اَلسَّطْرُ اْلاَوَّلُ لاٰ إِلٰهَ إِلاَّ اللّٰهُ مُحَمَّدٌ رَسُولُ اللّٰهِؐ، وَالسَّطْرُ الثَّانِي مَا قَدَّمْنَا وَجَدْنَا وَمَاأَكَلْنَا رَبِحْنَا وَمَاخَلَّفْنَا خَسِرْنَا، وَالسَّطْرُ الثَّالِثُ أُمَّةٌ مُذْنِبَةٌ وَرَبٌّ غَفُورٌ. رواه الرافعي وابن النجاروهو حديث صحيح، الجامع الصغير:١ /٦٤٥
ஹள்ரத் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
நான் சொர்க்கத்தில் நுழைந்தேன். அதன் இரு ஓரங்களிலும் மூன்று வரிகள் தங்கத்தால் எழுதப்பட்டிருப்பதைக் கண்டேன்.
முதல் வரியில், “லா இலாஹ இல்லல்லாஹ்; முஹம்மதுர் ரஸூலுல்லாஹி’ என்றும்,
இரண்டாம் வரியில், “நாம் (நற்செயல்கள் செய்து) முற்படுத்தி அனுப்பி வைத்தவைகளின் நன்மைகளை அடைந்து கொண்டோம். நாம் உலகில் உண்டு (உடுத்தி) அனுபவித்தவைகளின் பலன்களை (உலகில்) அடைந்து கொண்டோம். நாம் விட்டு வந்தவைகள் நமக்கு நஷ்டமாகிவிட்டது’ என்றும்,
மூன்றாம் வரியில், “சமுதாயத்தினர் பாவம் செய்யக் கூடியவர்கள் ரப்பு மன்னிக்கக் கூடியவன்’ என்றும். எழுதப்பட்டிருந்தது.
நூல்: ராஃபிஈ, இப்னு நஜ்ஜார்
No comments:
Post a Comment