கியாமத் நாளில் மனிதர்கள் மூன்று விதமாக எழுப்பப்படுவார்கள்.
١٤٧- عَنْ أَبِي هُرَيْرَةَؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ : يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ ثَلاَثَةَ أَصْنَافٍ: صِنْفاً مُشَاةً، وَصِنْفاً رُكْبَاناً، وَصِنْفًـا عَلَي وُجُوهِهِمْ قِيلَ: يَا رَسُولَ اللّٰهِؐ فَكَيْفَ يَمْشُونَ عَلَي وُجُوهِهِمْ؟ فَقَالَ: إِنَّ الَّذِي أَمْشَاهُمْ عَلَي أَقْدَامِهِمْ قَادِرٌ عَلَي أَنْ يُمْشِيَهُمْ عَلَي وُجُوهِهِمْ أَمَا إِنَّهُمْ يَتَّقُونَ بِوُجُوهِهِمْ كُلَّ حَدَبٍ وَّشَوْكَةٍ. رواه الترمذي وقال هذاحديث حسن باب ومن سورة بني اسرائيل، رقم:٣١٤٢
ஹள்ரத் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
கியாமத் நாள் அன்று மக்கள் மூன்று விதமாக எழுப்பப்படுவார்கள்.
நடந்த வண்ணமாகவும்; வாகனத்தில் அமர்ந்தவர்களாகவும்; முகங்குப்புற நடந்தவர்களாகவும் எழுப்படுவார்கள்.
அப்போது, “யா ரஸூலல்லாஹ், முகங்குப்புற எப்படி நடப்பார்கள்?’’ என்று கேட்கப்பட்டது.
“கால்களால் நடக்க வைத்தவன், நிச்சயமாக அவர்களை முகங்குப்புற நடக்க வைக்கவும் சக்தி பெற்றவன்.
கவனமாகக் கேளுங்கள்! இம்மக்கள் தங்கள் முகங்களாலேயே பூமியிலுள்ள முட்களை விட்டும், மேடு பள்ளங்களை விட்டும் தம்மை தற்காத்துக் கொள்வார்கள்.
நூல்: திர்மிதீ
No comments:
Post a Comment