Sunday, 21 July 2019

02-மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த முத்தான மூன்று போதனைகள்!-2

இரட்டிப்பான நன்மையைப் பெறும் மூவர்!

٢٨- عَنْ أَبِي مُوسيؓ قَالَ: قَالَ رَسُولُ اللّٰهِؐ: ثَلاَثَةٌ لَهُمْ أَجْرَانِ: رَجُلٌ مِنْ أَهْلِ الْكِتَابِ آمَنَ بِنَبِيِّهِ وَآمَنَ بِمُحَمَّد ، وَالْعَبْدُ الْمَمْلُوكُ إِذَا أَدَّي حَقَّ اللّٰهِ تَعَالَي وَحَقَّ مَوَالِيهِ، وَرَجُلٌ كَانَتْ عِنْدَهُ أَمَةٌ فَأَدَّبَهَا فَأَحْسَنَ تَأْدِيبَهَا وَعَلَّمَهَا فَأَحْسَنَ تَعْلِيمَهَا ثُمَّ أَعْتَقَهَا فَتَزَوَّجَهَا فَلَهُ أَجْرَانِ. رواه البخاري، باب تعليم الرجل امته واهله، رقم:٩٧
   ஹள்ரத் அபூ மூஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:

   ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

   மூவருக்கு இரட்டிப்பான நன்மைகள் கிடைக்கும்.

    1)வேதம் அருளப்பட்ட கிருஸ்தவர் அல்லது யூதர். அவர், தம் முந்தைய நபியின் மீது விசுவாசம் கொண்டு பின்பு முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் ஈமான் கொண்டவர்.

    2) அல்லாஹ்வின் கடமைகளையும் நிறைவேற்றி, தன் எஜமானின் கடமைகளையும் நிறைவேற்றும் அடிமை.

    3) தன்னிடம் இருக்கும் அடிமைப் பெண்ணுக்கு நல்ல முறையில் நல்லொழுக்கம் கற்றுத்தந்து, நல்ல முறையில் இல்மையும் கற்றுத்தந்து, அவளை உரிமைவிட்டு தானே மணமுடித்துக் கொண்டவர்.

                               நூல்:புகாரி

No comments:

Post a Comment