Wednesday, 30 November 2016

இன்று ஒரு செய்தி-99

இன்று ஒரு செய்தி-99
30/11/16/புதன்
================================
உயிரை வாங்கும் மலக்குக்கு முன் உலகம்!
================================

قال مجاهد رحمه الله‏:‏ حويت له الأرض فجعلت مثل الطست يتناول منها متى يشاء،  (الكتاب: تفسير ابن كثير سورة السجدة الاية- ١١)
    முஜாஹித் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:

    உயிரைக் கைப்பற்றும் வானவருக்கு ஒட்டுமொத்த பூமியும் ஒன்றுதிரட்டப்பட்டு ஓர் உணவுத் தட்டு போன்று ஆக்கப்பட்டுள்ளது. அவர் நினைக்கும் போது அதிலிருந்து (உயிர்களை) எடுத்துக் கொள்வார்.

      (நூல்: தஃப்ஸீர் தபரீ  - தஃப்ஸீர் இப்னு கஸீர் 32;11 வசன விரிவுரை)

Tuesday, 29 November 2016

இன்று ஒரு செய்தி-98

இன்று ஒரு செய்தி-98
29/11/16/செவ்வாய்
==========================
செல்வம் ஒரு சுகமான சோதனை!
==========================

١٣٦- عَنْ أُمِّ الدَّرْدَاءِؓ قَالَتْ: قُلْتُ لأِبِي الدَّرْدَاءِؓ: أَلاَ تَبْتَغِي لأِضْيَافِكَ مَا يَبْتَغِي الرِّجَالُ لأِضْيَافِهِمْ فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولُ اللّٰهِؐ يَقُولُ: إِنَّ أَمَامَكُمْ عَقَبَةً كَؤُودًا لاَ يُجَاوِزُهَا الْمُثْقِلُونَ فَأُحِبُّ أَنْ أَتَخَفَّفَ لِتِلْكَ الْعَقَبَةِ. رواه البيهقي في شعب الايمان:٧ /٣ ٠٩
     ஹஜ்ரத் உம்மு தர்தா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்:

        “நான் (என் கணவர்) ஹஜ்ரத் அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம், “தங்களது விருந்தினரை உபசரிக்க மற்றவர்களைப் போல் நீங்களும் ஏன் சம்பாதிப்பதில்லை?’ என்று கேட்டேன்.

       “உங்களுக்கு முன்னால் கடினமான பள்ளத்தாக்கு ஒன்று உண்டு, அதிகச் சுமை உள்ளவர்களால் அதை எளிதில் கடக்க இயலாது’, என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன்.

     "எனவே அப்பள்ளத்தாக்கைக் கடப்பதற்காக என் சுமையைக் குறைத்துக் கொள்ள விரும்புகிறேன்’’ என்று அபூதர்தா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

                            (நூல்:பைஹகீ)

Monday, 28 November 2016

இன்று ஒரு செய்தி-97

இன்று ஒரு செய்தி-97
28/11/16/திங்கள்
==========================
அல் குர்ஆனை சிந்திப்போம்! செயலில் கொண்டு வருவோம்!!
==========================

قال الحسن البصري‏:‏ واللّه ما تدبره بحفظ حروفه، وإضاعة حدوده، حتى إن أحدهم ليقول‏:‏ قرأت القرآن كله ما يرى له القرآن في خلق ولا عمل ‏"‏رواه ابن أبي حاتم عن الحسن البصري‏"‏‏.‏ (الكتاب:  تفسير ابن كثير سورة ص الاية -٢٩)
     ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:

     அல்லாஹ்வின் மீது ஆணையாக! குர்ஆனின் எழுத்துக்களை மனனம் செய்து விட்டு, அதன் விதிகளைப் பாழாக்குவது குர்ஆனைச் சிந்திப்பதாகாது.

      ஒருவர், "நான் குர்ஆனை முழுமையாக வாசித்துவிட்டேன்" என்பார். ஆனால் அவரது செயலிலும் நடத்தையிலும் குர்ஆனைக் காணமுடிவதில்லை.

    (நூல்: தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம்)

Sunday, 27 November 2016

இன்று ஒரு செய்தி-96

இன்று ஒரு செய்தி-96
27/11/16/ஞாயிறு
==========================
வீட்டின் வாசலில் மலக்குல் மவ்த்!
==========================

قال كعب الأحبار رحمه الله‏:‏ واللّه ما من بيت فيه أحد من أهل الدنيا إلا وملك الموت يقوم على بابه كل يوم سبع مرات ينظر هل فيه أحد أمر أن يتوفاه ‏"‏أخرجه ابن أبي حاتم‏"‏، (الكتاب:  تفسير ابن كثير سورة السجدة الآية -١١)
     கஅபுல் அஹ்பார் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்:

     உலக மக்களில் ஒருவர் இருக்கும் எந்த இல்லத்தின் வாயிலிலும் உயிரைக் கைப்பற்றும் வானவர் (மலக்குல் மவ்த்) ஒவ்வொரு நாளும் ஏழு முறை வந்து நிற்காமல் இருப்பதில்லை.

      உயிரைக் கைப்பற்றுமாறு தமக்கு கட்டளையிடப்பட்ட எவரும் வீட்டின் உள்ளே இருக்கிறாரா? என நோட்டமிட்டுக்கொண்டே அவர் இருக்கிறார்.

        (நூல்: தப்ஸீர் இப்னு அபீ ஹாத்தம்)

Saturday, 26 November 2016

இன்று ஒரு செய்தி-95

இன்று ஒரு செய்தி-95
26/11/16/சனி
=========================
நபி (ஸல்) அவர்களின் தொப்பி
=========================

     عن ابن عباس رضي الله تعالى عنهما قال: كان لرسول الله صلى الله عليه وسلم ثلاث قلانس، قلنسوة بيضاء مصرية، وقلنسوة برد حبرة، وقلنسوة ذات آذان يلبسها في السفر، فربما وضعها بين يديه إذا صلى. احياء العلوم الدين ص٣٧٥ج٢
      இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அவர்கள் கூறியதாவது:

     நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் மூன்று விதமான தொப்பிகள் இருந்தன.

      1)மிஸ்ரு நாட்டின் வெள்ளை நிறத் தொப்பி.

      2)வரிவரியான வேலைப்பாடு செய்யப்பட்ட பச்சை நிறத் தொப்பி.

     3)நீளமான தொப்பி.இதை பயணத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அணிந்து கொள்வார்கள். சில சமயம் இதை தடுப்பாகவும் பயன்படுத்துவார்கள்.

Friday, 25 November 2016

இன்று ஒரு செய்தி-94

இன்று ஒரு செய்தி-94
25/11/16/வெள்ளி
=====================
நரைமுடியும்! நன்மையும்!!
======================

١٥٣- عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ اَنَّ رَسُوْلَ الله ﷺ قَالَ: لاَ تَنْتِفُوا الشَّيْبَ فَاِنَّهُ نُوْرٌ يَوْمَ الْقِيَامَةِ، وَمَنْ شَابَّ شَيْبَةً فِي اْلاِسْلاَمِ كُتِبَ لَهُ بِهَا حَسَنَةٌ، وَحُطَّ عَنْهُ بِهَا خَطِيْئَةٌ، وَرُفِعَ لَهُ بِهَا دَرَجَةٌ. رواه ابن حبان (واسناده حسن):٧ /٢٥٣
      ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

     நரைமுடிகளைப் பிடுங்காதீர்கள், ஏனென்றால், கியாமத் நாளன்று இது பிரகாசத்திற்குக் காரணமாகும்.

      எவர் இஸ்லாத்தில் இருக்கின்ற நிலையில் வயோதிகமடைகிறாரோ, (அதாவது,ஒரு முஸ்லிமுடைய ஒரு முடி நரைத்துவிட்டால்), அதன் காரணமாக அவருக்கு ஒரு நன்மை எழுதப்படுகிறது. ஒரு பாவம் மன்னிக்கப்படுகிறது. ஒரு பதவி உயர்த்தப்படுகிறது'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

Thursday, 24 November 2016

இன்று ஒரு செய்தி-93

இன்று ஒரு செய்தி-93
24/11/16/வியாழன்
============================
பாவத்தினால் பிரச்சனகள் ஏற்படும்!
============================

‏ ‏{‏ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس‏}‏ أي بان النقص في الزروع والثمار بسبب المعاصي،  وقال أبو العالياة رحمه الله:‏ من عصى اللّه في الأرض فقد أفسد في الأرض، لأن صلاح الأرض والسماء بالطاعة، تفسير ابن كثير.
      மனிதக் கரங்கள் தேடிக் கொண்ட (தீய)தன் விளைவாகத் (தான்) தரையிலும் கடலிலும் சீரழிவு தோன்றிவிட்டது (30;41).

      இந்த வசனத்தின் பொருளாவது: பயிர்கள், கனி வகைகள் ஆகியவற்றின் விளைச்சளில் ஏற்படுகின்ற சேதமானது, மனிதர்கள் புரியும் பாவங்களின் காரணமாகவே நிகழ்கிறது.

    அபுல் ஆலியா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:

     பூமியில் பாவம் புரிபவர், பூமியில் சீரழிவை ஏற்படுத்தி விட்டார்.

     ஏனெனில், அல்லாஹ்வுக்கு மனிதர்கள் அடிபணிந்து நடந்தால்தான் வானமும் பூமியும் சீராக இயங்கும்.

Wednesday, 23 November 2016

இன்று ஒரு செய்தி-92

இன்று ஒரு செய்தி-92
23/11/16/புதன்
=======================
நபி தாவூத் (அலை) அவர்களின் தர்மம்!
=======================

وقال ابن شوذب‏ رحمه الله:‏ كان داود عليه السلام يرفع في كل يوم درعاً فيبيعها بستة آلاف درهم، ألفين له ولأهله وأربعة آلاف درهم يطعم بها بني إسرائيل خبز الحواري ‏"‏أخرجه ابن أبي حاتم‏"‏، تفسير ابن كثير.
     அப்துல்லாஹ் இப்னு ஷவ்தப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:

     ஹள்ரத் தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நாளொன்றுக்கு ஒரு (போர்க்) கவசச் சட்டை தயாரிப்பது வழக்கம்.

     பின்னர் அதை ஆறாயிரம் வெள்ளிக் காசுகளுக்கு விற்பனை செய்வார்கள்.

     அதில் இரண்டாயிரம் வெள்ளிக் காசுகளைத் தமக்காகவும் தம் குடும்பத்தாருக்காகவும் எடுத்துக் கொள்வார்கள்.

     நான்காயிரம் வெள்ளிக் காசுகளை, இஸ்ரவேலர்களுக்கு வெள்ளை மாவு ரொட்டி உணவாக அளிப்பதற்காகச் செலவு செய்வார்கள்.

Tuesday, 22 November 2016

இன்று ஒரு செய்தி-91

இன்று ஒரு செய்தி-91
22/11/16/செவ்வாய்
=======================
நடுநிலையோடு நடந்து கொள்வோம்!
=======================
      
عَوْفُ بْنُ الْحَسَنِ رَحِمَهَ اللهُ  قَالَ : بَلَغَنِي أَنَّ لُقْمَانَ رَضِيَ اللهُ عَنْهُ , قَالَ لابْنِهِ " يَا بُنَيَّ ، لا تَكُنْ حُلْوًا فَتُبْلَعَ وَلا مُرًّا فَتُلْفَظَ "
    அவ்ஃப் பின் ஹஸன்  ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள்  கூறியதாவது:எனக்கு (பின்வருமாறு) தகவல் கிடைத்துள்ளது:

      லுக்மான்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தம் மகனிடம் கூறினார்கள்:

     என்னருமை மகனே! நீ இனிப்பாக  இருக்காதே! விழுங்கப்பட்டுவிடுவாய்.

     கசப்பாக இருக்காதே!உமிழப்பட்டுவிடுவாய். (எனவே நடுநிலையோடு நடந்துகொள்)

Sunday, 20 November 2016

இன்று ஒரு செய்தி-90

இன்று ஒரு செய்தி-90
21/11/16/திங்கள்.
===========================
தொழுகையில் இந்தமூன்று அம்சங்களும் வேண்டும்!
============================

قال أبو العاليةرحمه الله‏:‏ إن الصلاة فيها ثلاث خصال، فكل صلاة لا يكون فيها شيء من هذه الخلال فليست بصلاة‏:‏ الإخلاص، والخشية، وذكر اللّه، فالإخلاص يأمره بالمعروف، والخشية تنهاه عن المنكر، وذكر اللّه القرآن يأمره وينهاه، تفسير ابن كثير.
      ஹள்ரத் அபுல் ஆலியா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:

      தொழுகையில் மூன்று பண்புகள் இருக்க வேண்டும். எந்தத் தொழுகையில் இந்த மூன்று பண்புகளில் எதுவும் இல்லையோ அது தொழுகையே இல்லை.

     1) உளத்தூய்மை 2) இறையச்சம் 3) அல்லாஹ்வை நினைவு கூரல்.

      உளத்தூய்மை - நன்மை செய்யுமாறு தொழுகையாளியை ஏவும்.

     இறையச்சம் -தீமையிலிருந்து அவரைத் தடுக்கும்.

      அல்லாஹ் நினைவுகூரல் (அதாவது குர்ஆனை ஓதுதல்) - நன்மை செய்யுமாறு ஏவி, தீமையிலிருந்து அவரைத் தடுக்கும்.

இன்று ஒரு செய்தி- 89

இன்று ஒரு செய்தி- 89
20/11/16/ஞாயிறு
===================
வாழ்த்துக்குறியவர்கள்!
===================

وعن عيسى عليه السلام أنه قال‏:‏ طوبى لمن كان قيله تذكرا، وصمته تفكراً، ونظره عبراً‏.‏ تفسير ابن كثير
     ஹள்ரத் ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறியதாவது:

     எவரது பேச்சு சிந்திக்கத் தூண்டுவதாகவும், அவரது மௌனம் சிந்தனையாகவும், பார்வை படிப்பினை பெறுவதாகவும் அமைந்துள்ளதோ அவருக்கு நல்வாழ்த்துக்கள் உண்டாகட்டும்!

Saturday, 19 November 2016

இன்று ஒரு செய்தி- 88

இன்று ஒரு செய்தி- 88
19/11/16/சனி
====================
வாழ்க்கையில் முன்னேற ....
====================

‏قال سفيان الثوري موصياً علي السلمي
عليـك بقـلة الكـلام يلين قلبـك
وعليك بطول الصمت تملك الورع
ولا تكونن حريصا على الدنيا.   الحلية ٨/٨٢  
    ஹள்ரத் ஸுஃப்யானுஸ் ஸவ்ரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஸலமீ அவர்களுக்கு வஸியத்தாக கூறினார்கள்...

       குறைவான பேச்சை உன் மீது அவசியமாக்கிக் கொள்.. உன் உள்ளம் மிருதுவாகும்!

      நீண்ட மௌனத்தை உன் மீது அவசியமாக்கிக் கொள்..
பேணுதலை உரிமையாக்கிக்கொள்வாய்!

      உலகத்தின் மீது பேராசை கொண்டவனாக நீ ஆகிவிடாதே!

              நூல் : ஹில்யா 8/ 82

இன்று ஒரு செய்தி- 87

இன்று ஒரு செய்தி- 87
18/11/16/வெள்ளி
====================
சுவனத்தின் தலைவாசல்!
====================

٢٥٣- عَنْ اَبِي الدَّرْدَاءِ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: اَلْوَالِدُ اَوْسَطُ اَبْوَابِ الْجَنَّةِ، فَاِنْ شِئْتَ فَاَضِعْ ذلِكَ الْبَابَ اَوِ احْفَظْهُ. رواه الترمذي وقال: هذا حديث صحيح باب ماجاء من الفضل في رضا الوالدين رقم:١٩٠٠
      ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

       தந்தை சுவர்க்க வாசல்களில் சிறந்த வாசல், (அவருக்கு மாறு செய்து அல்லது அவரது மனதை புண்படுத்தி) அவ்வாசலை அழித்துவிடு!

   அல்லது அவருக்குக் கீழ்படிந்து நடந்து (அவரைத் திருப்திப்படுத்தி) அவ்வாசலைப் பாதுகாத்துக் கொள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

                                     (நூல்:திர்மிதீ)

Thursday, 17 November 2016

இன்று ஒரு செய்தி- 86

இன்று ஒரு செய்தி- 86
17/11/16/வியாழன்
=========================
குறை கூறும் பொல்லாக் குணம்!
=========================

قال الحسن البصري رحمه الله: احذر ممن نقل إليك حديث غيرك ، فإنه سينقل إلى غيرك حديثك.
     ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:

     பிறரைப் பற்றிய செய்தியை (குறையை) உன்னிடம் கொண்டு வருபவன் விஷயத்தில் எச்சரிக்கையாக இரு.

      ஏனெனில் (பிறரைப் பற்றிய குறையை உன்னிடம் சொல்லும்) அவன் உன்னைப் பற்றிய செய்தியை (குறையை) பிறரிடம் கொண்டு செல்வான்.

Wednesday, 16 November 2016

இன்று ஒரு செய்தி- 85

இன்று ஒரு செய்தி- 85
16/11/16/புதன்
=========================
குர்ஆனின் மூன்றிலொரு பகுதி!
=========================

٦٤- عَنْ اَبِي الدَّرْدَاءِؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: اَيَعْجِزُ اَحَدُكُمْ اَنْ يَقْرَأَ فِيْ لَيْلَةٍ ثُلُثَ الْقُرْآنِ؟ قَالُوْا: وَكَيْفَ يَقْرَأُ ثُلُثَ الْقُرْآنِ؟ قَالَ: (قُلْ هُوَ اللهُ اَحَدٌ۞) يَعْدِلُ ثُلُثَ الْقُرْآنِ. رواه مسلم، باب فضل قراءة قل هو الله احد، رقم:١٨٨٦
     ஹஜ்ரத் அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

     உங்களில் எவருக்கும் ஓரிரவில் குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை ஓத இயலாது?'' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.

       ஒரு இரவில் குர்ஆனின் மூன்றிலொரு பகுதியை எவரால் ஓத முடியும்?' என ஸஹாபாக்கள் கேட்டார்கள்.

     "குல்ஹுவல்லாஹு அஹத்'' சூரா ஓதுவது குர்ஆனின் மூன்றிலொரு பகுதி ஒதியதற்கு சமம்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

                              (நூல்:முஸ்லிம்)

Tuesday, 15 November 2016

இன்று ஒரு செய்தி- 83

இன்று ஒரு செய்தி- 83
14/11/16/திங்கள்
=======================
மேன்மையைத் தரும் நன்மை!
=======================

وروى أحمد (8195) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : كَانَ رَجُلَانِ أَسْلَمَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتُشْهِدَ أَحَدُهُمَا وَأُخِّرَ الْآخَرُ سَنَةً . قَالَ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ : فَأُرِيتُ الْجَنَّةَ ، فَرَأَيْتُ فِيهَا الْمُؤَخَّرَ مِنْهُمَا أُدْخِلَ قَبْلَ الشَّهِيدِ ، فَعَجِبْتُ لِذَلِكَ ، فَأَصْبَحْتُ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( أَلَيْسَ قَدْ صَامَ بَعْدَهُ رَمَضَانَ ! وَصَلَّى سِتَّةَ آلافِ رَكْعَةٍ أَوْ كَذَا وَكَذَا رَكْعَةً ! صَلاةَ السَّنَةِ ) . صححه الألباني في السلسلة الصحيحة (2591) . وقال العجلوني في "كشف الخفاء" : إسناده حسن.
       அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

      "இருவர் ஒரே நேரத்தில் முஸ்லிமானார்கள். ஒருவர் மார்க்கப் போரில் ஷஹீதாகி விட்டார். அடுத்தவர் ஒரு வருடத்திற்குப் பின் மரணமடைந்தார்.

      தல்ஹதுப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

      "ஷஹீதுக்குப் பிறகு ஒரு வருடம் கழித்து மரணமடைந்தவர் முதலில் சுவனத்தில் நுழைவதாக நான் கனவு கண்டேன். எனக்கு இந்த விஷயத்தில் ஆச்சரியம் ஏற்பட்டது.

      காலையில் இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டது.

    அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அந்த ஷஹீதுக்குப் பிறகு ஒரு வருட ரமளான் நோன்பை அவர் நோற்கவில்லையா?

      ஒரு வருடத்தில் ஆறாயிரம் ரகஅத்துக(ள் கடமையான தொழுகை)களை அவர் தொழவில்லையா? இன்னும் இது போன்ற எத்தனையெத்தனையோ ரக்அத்துகள் இந்த ஒரு வருடத்தில் இவர் தொழவில்லையா? என்று கேட்டார்கள்.

                                    (நூல் : அஹ்மத்)

இன்று ஒரு செய்தி- 84

இன்று ஒரு செய்தி- 84
15/11/16/செவ்வாய்
========================
வாக்கைக் காப்பதில் வல்லவர்!
========================

روى أبو داود في سننه، عن عبد اللّه بن أبي الحمساء قال‏:‏ بايعت رسول اللّه صلى اللّه عليه وسلم قبل أن يبعث فبقيت له عليَّ بقية، فوعدته أن آتيه بها في مكانه ذلك، قال فنسيت يومي والغد، فأتيته في اليوم الثالث وهو في مكانه ذلك، فقال لي‏:‏ ‏(‏يا فتى لقد شققت عليّ أنا ههنا منذ ثلاث أنتظرك‏)‏،تفسير ابن كثير.
     அப்துல்லாஹ் பின் அபில் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது:

     அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன் நான் அவர்களுடன் ஒரு வியாபார ஒப்பந்தம் செய்திருந்தேன்.

      அதில் அவர்களுக்கு நான் கொடுக்க வேண்டிய ஒரு தொகை எஞ்சியிருந்தது. அதைக் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்து கொடுப்பதாக நான் நபியவர்களிடம் வாக்களித்திருந்தேன்.

      ஆனால், நான் அதை (அன்றைய நாளும் அதற்கு மறுநாளும்) மறந்து விட்டேன். நான் மூன்றாவது நாள் அங்கு சென்றேன். நபியவர்கள் அதே இடத்தில் இருந்தார்கள்.

       நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ''இளைஞரே! எனக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட்டீரே! நான் இங்கு மூன்று நாட்களாக உம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என்று கூறினார்கள்.

Sunday, 13 November 2016

இன்று ஒரு செய்தி- 82

இன்று ஒரு செய்தி- 82
13/11/16/ஞாயிறு
==============================
முத்தான மூன்றும்! மகத்தான மூன்றும்!!
==============================

٢٦٧- عَنْ اَبِيْ اُمَامَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: صَنَائِعُ الْمَعْرُوْفِ تَقِيْ مَصَارِعَ السُّوْءِ، وَصَدَقَةُ السِّرِّ تُطْفِيءُ غَضَبَ الرَّبِّ، وَصِلَةُ الرَّحِمِ تَزِيْدُ فِي الْعُمُرِ. رواه الطبراني في الكبير واسناده حسن، مجمع الزوائد: ٣ /٢٩٣.
     ஹள்ரத் அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

     நற்காரியங்கள் செய்வது தீய மரணத்தைத் தடுக்கிறது.

     இரகசியமாக தர்மம் செய்வது அல்லாஹுதஆலாவின் கோபத்தைத் தணிக்கிறது.

     உறவு முறையினைப் பேணுவது (சொந்த பந்தங்களுடன் அழகிய முறையில் நடந்து கொள்வது) ஆயுளை அதிகரிக்கிறது'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(தபரானீ, மஜ்மஉஸ்ஸவாயித்)

Saturday, 12 November 2016

இன்று ஒரு செய்தி- 81

இன்று ஒரு செய்தி- 81
12/11/16/சனி
===================
தாய் நலன் பேணுவோம்!
===================

(حديث مرفوع) حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُسْتَمِرِّ الْعُرُوقِيُّ ، قَالَ : نا عَمْرُو بْنُ سُفْيَانَ ، قَالَ : نا الْحَسَنُ بْنُ أَبِي جَعْفَرٍ ، عَنْ لَيْثٍ يَعْنِي : ابْنَ أَبِي سُلَيْمٍ ، عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ ، عَنْ سُلَيْمَانَ بْنِ بُرَيْدَةَ ، عَنْ أَبِيهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، أَنَّ رَجُلا كَانَ فِي الطَّوَافِ حَامِلا أُمَّهُ يَطُوفُ بِهَا ، فَسَأَلَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، هَلْ أَدَّيْتُ حَقَّهَا ؟ قَالَ : لا ، وَلا بِزَفْرَةٍ وَاحِدَةٍ . أَوْ كَمَا قَالَ . وَهَذَا الْحَدِيثُ لا نَعْلَمُهُ يُرْوَى عَنِ النَّبِيِّ ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، إِلا مِنْ هَذَا الْوَجْهِ .
     ஹள்ரத் புரைதா ரலியல்லாஹு அவர்கள் கூறியதாவது:

      ஒரு மனிதர் தம் தாயைச் சுமந்தவாறு   தவாஃப் செய்து (கஃபாவை வலம் வந்து) கொண்டிருந்தார்.

     அவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் "நான் என் தாய்க்குறிய கடமையை நிறைவேற்றி விட்டேனா?" என்று கேட்டார்.

      அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், "நீ தாயின் வயிற்றில் இருந்த போது, அவர் வெளியிட்ட ஒரேயொரு பெருமூச்சுக்குக் கூட இது ஈடாகாது" என்று கூறினார்கள்.

Friday, 11 November 2016

இன்று ஒரு செய்தி- 80

இன்று ஒரு செய்தி- 80
11/11/16/வெள்ளி
==============================
மனோ இச்சை இபாதத்தைத் தடுக்கும்!
==============================

وقال أبو الأشهب العطاردي : أوحى الله - تعالى - إلى داود : يا داود ، حذر وأنذر أصحابك أكل الشهوات ; فإن القلوب المعلقة بشهوات الدنيا عقولها عني محجوبة ، وإن أهون ما أصنع بالعبد من عبيدي إذا آثر شهوة من شهواته علي أن أحرمه طاعتي .
     அபுல்அஷ்ஹப் அல்உத்தாரிதீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுவதாவது:

     நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் பின்வருமாறு அறிவிப்பு செய்தான்.

     தாவூதே! மனம் விரும்பியதையெல்லாம் உண்பதிலிருந்து உம்முடைய தோழர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக!

      ஏனெனில், உலக ஆசாபாசங்களுடன் பிணைக்கப்பட்ட இதயங்கள் என்னை அறிவதிலிருந்து தடுக்கப்பட்டுவிடும்.

      என் அடியார்களில் ஒருவர் தன் மன விரும்பங்களில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கும் போது, அவருக்கு நான் ஏற்படுத்தக்கூடிய குறைந்தபட்ச இழப்பு என்னவென்றால், எனக்கு கீழ்படிவதிலிருந்து நான் அவரை விலக்கி விடுவதுதான்.

                          தஃப்ஸீர் இப்னு கஸீர்

Thursday, 10 November 2016

இன்று ஒரு செய்தி-66

இன்று ஒரு செய்தி-66
28/10/16/வெள்ளி
================
பாவம் பொல்லாதது!
================
قال عمر رضي الله عنه-:
نحن أمة لا تنتصر بالعدة والعتاد، ولكن ننتصر بقلة ذنوبنا وكثرة ذنوب الأعداء، فلو تساوت الذنوب انتصروا علينا بالعدة والعتاد
      உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

       நாம் ஆள் பலத்தாலும், ஆயுத பலத்தாலும் வெற்றிக் கொள்ள முடியாத சமுதாயம். ஆனால் நம்முடைய பாவம் குறைவாகவும் எதிரிகளின் அதிகமாகவும் இருந்தால் வெற்றி பெற்று விடுவோம்.

     ஆனால் இருவரும் (நாமும் எதிரியும்) பாவத்தில் சமமாகிவிட்டால் ஆள் பலத்தாலும், ஆயுத பலத்தாலும் எதிரிகள் வெற்றி பெற்று விடுவார்கள்

இன்று ஒரு செய்தி-79

இன்று ஒரு செய்தி-79
10/11/16/வியாழன்.
==============================
வெள்ளிக்கிழமை ஃபஜ்ரு தொழுகை!
==============================

     حديث مرفوع - أَخْبَرَنَا أَبُو سَعْدٍ أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ الْمَالِينِيُّ ، ثنا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ عُبَيْدِ اللَّهِ بْنِ الشِّخِّيرِ ، ثنا عَبْدُ اللَّهِ بْنُ سُلَيْمَانَ بْنِ الأَشْعَثِ ، ثنا عَمْرُو بْنُ عَلِيٍّ ، ثنا خَالِدُ بْنُ الْحَارِثِ ، ثنا شُعْبَةُ ، ثنا يَعْلَى بْنُ عَطَاءٍ ، قَالَ : سَمِعْتُ الْوَلِيدَ بْنَ عَبْدِ الرَّحْمَنِ ، يُحَدِّثُ ، أَنَّ ابْنَ عُمَرَ ، قَالَ لِحُمْرانَ : مَا بَلَغَكَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، قَالَ : " إِنَّ أَفْضَلَ الصَّلَوَاتِ عِنْدَ اللَّهِ صَلاةُ الصُّبْحِ يَوْمَ الْجُمُعَةِ فِي جَمَاعَةٍ".
      நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்விடத்தில் மிகச் சிறந்த தொழுகை ஜும்ஆ தினத்தன்று சுப்ஹ் தொழுகையை ஜமாஅத்தோடு தொழுவது தான்”.