இன்று ஒரு செய்தி- 83
14/11/16/திங்கள்
=======================
மேன்மையைத் தரும் நன்மை!
=======================
وروى أحمد (8195) عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ : كَانَ رَجُلَانِ أَسْلَمَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتُشْهِدَ أَحَدُهُمَا وَأُخِّرَ الْآخَرُ سَنَةً . قَالَ طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ : فَأُرِيتُ الْجَنَّةَ ، فَرَأَيْتُ فِيهَا الْمُؤَخَّرَ مِنْهُمَا أُدْخِلَ قَبْلَ الشَّهِيدِ ، فَعَجِبْتُ لِذَلِكَ ، فَأَصْبَحْتُ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : ( أَلَيْسَ قَدْ صَامَ بَعْدَهُ رَمَضَانَ ! وَصَلَّى سِتَّةَ آلافِ رَكْعَةٍ أَوْ كَذَا وَكَذَا رَكْعَةً ! صَلاةَ السَّنَةِ ) . صححه الألباني في السلسلة الصحيحة (2591) . وقال العجلوني في "كشف الخفاء" : إسناده حسن.
அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
"இருவர் ஒரே நேரத்தில் முஸ்லிமானார்கள். ஒருவர் மார்க்கப் போரில் ஷஹீதாகி விட்டார். அடுத்தவர் ஒரு வருடத்திற்குப் பின் மரணமடைந்தார்.
தல்ஹதுப்னு உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
"ஷஹீதுக்குப் பிறகு ஒரு வருடம் கழித்து மரணமடைந்தவர் முதலில் சுவனத்தில் நுழைவதாக நான் கனவு கண்டேன். எனக்கு இந்த விஷயத்தில் ஆச்சரியம் ஏற்பட்டது.
காலையில் இது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் சொல்லப்பட்டது.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அந்த ஷஹீதுக்குப் பிறகு ஒரு வருட ரமளான் நோன்பை அவர் நோற்கவில்லையா?
ஒரு வருடத்தில் ஆறாயிரம் ரகஅத்துக(ள் கடமையான தொழுகை)களை அவர் தொழவில்லையா? இன்னும் இது போன்ற எத்தனையெத்தனையோ ரக்அத்துகள் இந்த ஒரு வருடத்தில் இவர் தொழவில்லையா? என்று கேட்டார்கள்.
(நூல் : அஹ்மத்)