இன்று ஒரு செய்தி- 84
15/11/16/செவ்வாய்
========================
வாக்கைக் காப்பதில் வல்லவர்!
========================
روى أبو داود في سننه، عن عبد اللّه بن أبي الحمساء قال: بايعت رسول اللّه صلى اللّه عليه وسلم قبل أن يبعث فبقيت له عليَّ بقية، فوعدته أن آتيه بها في مكانه ذلك، قال فنسيت يومي والغد، فأتيته في اليوم الثالث وهو في مكانه ذلك، فقال لي: (يا فتى لقد شققت عليّ أنا ههنا منذ ثلاث أنتظرك)،تفسير ابن كثير.
அப்துல்லாஹ் பின் அபில் ஹம்ஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது:
அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு நபித்துவம் அருளப்படுவதற்கு முன் நான் அவர்களுடன் ஒரு வியாபார ஒப்பந்தம் செய்திருந்தேன்.
அதில் அவர்களுக்கு நான் கொடுக்க வேண்டிய ஒரு தொகை எஞ்சியிருந்தது. அதைக் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு வந்து கொடுப்பதாக நான் நபியவர்களிடம் வாக்களித்திருந்தேன்.
ஆனால், நான் அதை (அன்றைய நாளும் அதற்கு மறுநாளும்) மறந்து விட்டேன். நான் மூன்றாவது நாள் அங்கு சென்றேன். நபியவர்கள் அதே இடத்தில் இருந்தார்கள்.
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் ''இளைஞரே! எனக்கு சிரமத்தை ஏற்படுத்திவிட்டீரே! நான் இங்கு மூன்று நாட்களாக உம்மை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என்று கூறினார்கள்.
No comments:
Post a Comment