Wednesday, 2 November 2016

இன்று ஒரு செய்தி-71

இன்று ஒரு செய்தி-71
02/11/16/புதன்
===========================
வெளித்தோற்றத்தில் நண்பர்! அந்தரங்கத்தில் விரோதி!!
===========================

عَنْ مُعَاذٍؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: يَكُوْنُ فِيْ آخِرِ الزَّمَانِ اَقْوَامٌ اِخْوَانُ الْعَلاَنِيَةِ اَعْدَاءُ السَّرِيْرَةِ، فَقِيْلَ: يَا رَسُوْلَ اللهِﷺ فَكَيْفَ يَكُوْنُ ذلِكَ؟ قَالَ: ذلِكَ بِرَغْبَةِ بَعْضِهِمْ اِلي بَعْضٍ وَرَهْبَةِ بَعْضِهِمْ اِلي بَعْضٍ. رواه احمد:٥/٢٣٥
      ஹஜ்ரத் முஆத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

     இறுதிக் காலத்தில் சிலர், வெளித்தோற்றத்தில் நண்பர்களாகவும், அந்தரங்கத்தில் விரோதிகளாகவும் இருப்பார்கள்'' என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

     யாரஸூலல்லாஹ்! இது எதன் காரணமாக ஏற்படும்?'' எனக் கேட்கப்பட்டது.

      தன்னுடைய சுய நலத்துக்காக வெளிரங்கத்தில் ஒருவர் மற்றவருடன் நட்புக்கொள்வார். அந்தரங்க விரோதத்தினால் அவ்விருவரும் ஒருவர் மற்றவரைப் பார்த்து பயப்படுவார்'' என நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.

                              (முஸ்னத் அஹ்மத்)

No comments:

Post a Comment