14- மறுக்கப்படாத மூன்று துஆக்கள்!
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْه، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم " ثَلاَثَةٌ لاَ تُرَدُّ دَعْوَتُهُمُ : الصَّائِمُ حَتَّى يُفْطِرَ , وَالإِمَامُ الْعَادِلُ , وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا اللَّهُ فَوْقَ الْغَمَامِ وَيَفْتَحُ لَهَا أَبْوَابَ السَّمَاءِ وَيَقُولُ الرَّبُّ وَعِزَّتِي لأَنْصُرَنَّكَ وَلَوْ بَعْدَ حِينٍ " رواه الترمذي-3598
ஹள்ரத் அபூ ஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்தாவது:
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
மூன்று மனிதர்களுடைய துஆக்கள் மறுக்கப்படுவதில்லை.
1) நோன்பாளியின் துஆ; அவர் நோன்பு திறக்கும்வரை.
2) நீதி செலுத்தும் அரசனின் துஆ.
3) அநீதி இழைக்கப்பட்டவனின் துஆ.
அல்லாஹ் அதனை மேகங்களுக்கு மேல் உயர்த்தி, அதற்காக வானத்தின் கதவுகளைத் திறந்து வைக்கிறான். மேலும், என்னுடைய கண்ணியத்தின் மீது ஆணையாக நிச்சயமாக உனக்கு நான் உதவி செய்வேன். (ஏதேனும் ஒரு நலன் கருதி) அது தாமதமாக ஆனாலும் சரியே என்று அல்லாஹ் கூறுகிறான்.
நூல் : திர்மிதி - 3598
No comments:
Post a Comment