இன்று ஒரு செய்தி-69
31/10/16/திங்கள்
========================
நான்கு விஷயங்களின் வெளிரங்கமும் அந்தரங்கமும்!
========================
قال عثمان رضي الله عنه : "أربعة ظاهرهنّ فضيلة وباطنهنّ فريضة: مخالطة الصالحين فضيلة والاقتداء بهم فريضة، وتلاوة القرآن فضيلة والعمل به فريضة، وزيارة القبور فضيلة والاستعداد لها فريضة، وعيادة المريض فضيلة واتخاذ الوصية منه فريضة"-منبهات
உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான்கு விஷயங்கள் - அவற்றின் வெளிரங்கம் சிறப்பிற்குறியது. அவற்றின் அந்தரங்கம் கடமையானது.
1) நல்லோர்களுடன் கலந்துறவாடுதல் சிறப்பு; அவர்களைப் பின்பற்றுதல் கடமை.
2) குர்ஆனை ஓதுவது சிறப்பு ; அதன்படி அமல் புரிவது கடமை.
3) கப்ருகளை ஜியாரத்துச் செய்வது சிறப்பு; அதற்காக தயாராகுதல் கடமை.
4) நோயாளியை விசாரிப்பது சிறப்பு; அவர்களிடமிருந்து அறிவுரை பெறுதல் கடமை.