Monday, 31 October 2016

இன்று ஒரு செய்தி-69

இன்று ஒரு செய்தி-69
31/10/16/திங்கள்
========================
நான்கு விஷயங்களின் வெளிரங்கமும் அந்தரங்கமும்!
========================

     قال عثمان رضي الله عنه : "أربعة ظاهرهنّ فضيلة وباطنهنّ فريضة: مخالطة الصالحين فضيلة والاقتداء بهم فريضة، وتلاوة القرآن فضيلة والعمل به فريضة، وزيارة القبور فضيلة والاستعداد لها فريضة، وعيادة المريض فضيلة واتخاذ الوصية منه فريضة"-منبهات
        உஸ்மான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

     நான்கு விஷயங்கள் - அவற்றின் வெளிரங்கம் சிறப்பிற்குறியது. அவற்றின் அந்தரங்கம் கடமையானது.

      1) நல்லோர்களுடன் கலந்துறவாடுதல் சிறப்பு; அவர்களைப் பின்பற்றுதல் கடமை.

      2) குர்ஆனை ஓதுவது சிறப்பு ; அதன்படி அமல் புரிவது கடமை.

     3) கப்ருகளை ஜியாரத்துச் செய்வது சிறப்பு; அதற்காக தயாராகுதல் கடமை.

      4) நோயாளியை விசாரிப்பது சிறப்பு; அவர்களிடமிருந்து அறிவுரை பெறுதல் கடமை.

Sunday, 30 October 2016

இன்று ஒரு செய்தி-68

இன்று ஒரு செய்தி-68
30/10/16/ஞாயிறு
=========================
இறைக் கருணையும், கோபமும் !
=========================

٨٨- عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّ النَّبِيَّؐ قَالَ: لَمَّا خَلَقَ اللّٰهُ الْخَلْقَ كَتَبَ فِي كِتَابِهِ فَهُوَ عِنْدَهُ فَوْقَ الْعَرْشِ: إِنَّ رَحْمَتِي تَغْلِبُ غَضَبِي. رواه مسلم باب في سعة رحمة الله تعالي....، رقم:٦٩٦٩
    ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
 
    “அல்லாஹுதஆலா படைப்பினங்களைப் படைத்தபொழுது தன்னிடமுள்ள பதிவேட்டில்

      “என் கருணை (ரஹ்மத்) என் கோபத்தை மிகைத்துவிட்டது’ என்று எழுதி வைத்துவிட்டான்.

      இந்த ஏடு அர்ஷுக்கு மேலே அவனிடத்தில் இருக்கிறது’’ என்று ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறியனார்கள்.

                                    (முஸ்லிம்)

Saturday, 29 October 2016

இன்று ஒரு செய்தி-67

இன்று ஒரு செய்தி-67
29/10/16/சனி
================
பாவத்தின் பாதிப்பு !
================

    عَنْ أَبِي هُرَيْرَةَؓ أَنَّهُ سَمِعَ رَجُلاً يَقُوْلُ: إِنَّ الظَّالِمَ لاَ يَضُرُّ إِلاَّ نَفْسَهُ، فَقَالَ أَبُوْهُرَيْرَةَ  : بَلَي وَاللّٰهِ حَتَّي الْحُبَارَي لَتَمُوْتُ فيِ وَكْرِهَا هَزْلاً لِظُلْمِ الظَّالِمِ.
رواه البيهقي في شعب الايمان:٦/٥٤
    “ அநியாயக்காரன் (பாவம் செய்பவன்) தனக்குத்தானே தீங்கிழைத்துக் கொள்கிறான்’’ என்று ஒரு மனிதர் கூறுவதைக் கேட்ட ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள், “அல்லாஹ் வின் மீது ஆணையாக! அவன் தனக்குத் தானே தீங்கிழைத்துக் கொள்வது மட்டுமல்ல! அவனுடைய அநியாயத்தால், பறவையும் தன்னுடைய கூட்டிலேயே காய்ந்து வரண்டு இறந்துவிடுகிறது’ என்று கூறினார்கள்.

Thursday, 27 October 2016

இன்று ஒரு செய்தி-65

இன்று ஒரு செய்தி-65
27/10/16/ வியாழன்
======================
பேரீத்தமரம் போல் வாழ்க!
======================

سمع عبد الله بن عمر يقول قال رسول الله صلى الله عليه وسلم إن من الشجر شجرة لا يسقط ورقها وإنها مثل المسلم فحدثوني ما هي فوقع الناس في شجر البوادي قال عبد الله ووقع في نفسي أنها النخلة فاستحييت ثم قالوا حدثنا ما هي يا رسول الله قال فقال هي النخلة
    இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

    மரங்களில் ஒரு மரம் உண்டு. அதன் இலை உதிராது, அந்த மரம் ஒரு முஸ்லிமின் வாழ்வுக்கு ஒப்பானது.அது எந்த மரம்? என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள்.

     மக்களின் கவனம் காடுகளில் உள்ள மரங்களின் பக்கம் சென்றது.அது பேரித்தமரம் தான் என்று எனக்கு தெரியும். ஆனாலும் மரியாதைக்காக வெட்கப்பட்டு அதை நான் சொல்லவில்லை.

     அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ''அது எந்த மரம் நீங்களே சொல்லுங்கள்" என நபித்தோழர்கள் கூறியபோது-அது தான் "பேரித்தமரம்" என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.

Wednesday, 26 October 2016

இன்று ஒரு செய்தி-63

இன்று ஒரு செய்தி-63
25/10/16/ செவ்வாய்
==========================
அற்புதமான ஐந்து உபதேசங்கள்!
==========================

عن الشعبي قال لما حضر عبد الله بن مسعود الموت دعا أبنَه قال يا عبد الرحمن بن عبد الله بن مسعود إني أوصيك بخمس خصال فاحْفظهُنَّ عنِّي أظهر اليأس للناس فان ذلك غنى فاضل ودَعْ مَطْلبَ الحاجات إلى الناس فان ذلك فقرٌ حاضرٌ ودَعْ ما تعتذر منه من الأمور ولا تعمل به وإن استطعت أن لا يأتي عليك يوم إلا وأنت خير منك بالأمس فافعل فإذا صليت صلاة فصل صلاة مودع كأنك لاتصلي بعدها (تاريخ دمشق)
     ஹள்ரத் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் தம் மகன் அப்துர்ரஹ்மானிடம் இறுதி உபதேசமாக கூறியதாவது:

    அப்துர் ரஹ்மானே! நான் உனக்கு ஐந்து வஸிய்யத்துகளை செய்கிறேன்.அவைகளை நீ உன்வாழ்க்கையில் கடைபிடி.

     1, பேராசை இல்லாத பற்றற்ற நிலையில் மக்களிடம் நீ இரு.. அது தான் மேலான செல்வம்.

      2, மக்களிடம் தேவையாகுவதை விட்டு விடு.. ஏனெனில் அது தான் கண் கூடான வறுமையாகும்.

      3,எந்தக் காரியத்தைச் செய்ய  உன் மனம் தயங்குமோ, அது சரியா தவறா என்ற சந்தேகம் வருமோ அதை விட்டு விடு.. அதைச் செய்யாதே.

      4, உன்னுடைய நேற்றைய தினத்தை விட இன்றைய நாள் சிறப்புடையதாக இல்லாமல் எந்த நாட்களும் கழிந்து விடக்கூடாது.

      5, நீ தொழுகின்ற ஒவ்வொரு தொழுகையையும் உன் கடைசி தொழுகையாக எண்ணிக் கொள்.

இன்று ஒரு செய்தி-64

இன்று ஒரு செய்தி-64
26/10/16/ புதன்
=============================
கிடைத்ததைப் பொருந்திக் கொண்டால் கிடைக்காததையும் பெறலாம்!
=============================.

وقال النبي صلى الله عليه وسلم: إن الله ليبتلي العبد بما أعطاه فمن رضي بما قسم له وسع عليه ، ومن لم يرض لم يبارك له »
     நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் அடியானை, அவனுக்கு எதை கொடுத்தானோ அதை கொண்டு சோதிப்பான்.

      அல்லாஹ் வழங்கியதை அடியான் பொருந்திக் கொண்டால் அல்லாஹ் அவனுக்கு அதில் பரக்கத் செய்வான் அதை விசாலமாக்குவான்.

       அல்லாஹ் கொடுத்ததை பொருந்திக் கொள்ளாவிட்டால் அல்லாஹ் அவனுக்கு பரக்கத்தும் செய்ய மாட்டான் விசாலமாக்கவும் மாட்டான்.

நூல்.பைஹகி

Monday, 24 October 2016

இன்று ஒரு செய்தி-62

இன்று ஒரு செய்தி-62
24/10/16/ திங்கள்
========================
துர்மரணத்தை தடுக்கும் தர்மம்
========================

قال أبو عمر كان حارثة بن النعمان قد ذ هب بصره فاتخذ خيطاً من مصلاه إلى باب حجرته ووضع عنده مكتلاً فيه تمر فكان إذا جاءه المسكين يسأل أخذ من ذلك المكتل ثم بطرف الخيط حتى يناوله وكان أهله يقولون له نحن يكفيك فقال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " مناولة المسكين تقي ميته السوء " .
     இப்னு அப்துல் பர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: “ஹாரிஸா இப்னு நுஃமான் (ரலி) அவர்களின் இறுதிகாலத்தில் கண்பார்வை இன்றி வாழ்ந்தார்கள்.

     தான் தொழுகிற இடத்திலிருந்து வீட்டின் வாசல் வரை கயிறு கட்டியிருப்பார்கள். அருகே ஒரு பாத்திரத்தில் பேரீத்தம் பழங்களை வைத்திருப்பார்கள்.

     வீட்டு வாசலில் எவராவது வந்து யாசகம் கேட்டால், கையில் பேரீத்தம் பழங்களை எடுத்துக் கொண்டு வாசல் வரை வந்து அந்த யாசகரின் கையில் கொடுத்து விட்டு மீண்டும் தாங்கள் அமரும் இடத்திற்கு வந்து விடுவார்கள்.

      ஒருவர் அல்ல இருவர் அல்ல. எத்தனை பேர் யாசகம் கேட்டு வந்தாலும், கயிற்றைப் பிடித்து வருவதும் போவதுமாக இருப்பார்கள் ஹாரிஸா (ரலி) அவர்கள்.

      ஹாரிஸா (ரலி) அவர்கள் படுகிற அவஸ்தைகளையும், சிரமங்களையும் பார்த்து விட்டு அவர்களின் குடும்பத்தினர் “ஓர் யாசகருக்கு இவ்வளவு சிரமப்பட்டு ஏன் இவ்வாறு தர்மம் செய்கின்றீர்கள்? எங்களிடம் தந்தால் நாங்கள் கொண்டு கொடுப்போமே?” என்று கூறினார்கள்.

     அதற்கு, ஹாரிஸா (ரலி) அவர்கள் “ஏழை எளியோரை தேடிச் சென்று, அவர்களின் கரங்களில் கொண்டு தர்மப் பொருட்களைக் கொடுப்பதென்பது துர்மரணத்தைத் தடுக்கும்” என நபி {ஸல்} அவர்கள் கூற நான் கேட்டிருக்கின்றேன்.

      ஆதலால், தான் இவ்வளவு சிரமத்திற்கு மத்தியிலும் நான் இவ்வாறு நடந்து கொள்கின்றேன்” என்றார்கள்.

( நூல்: அல் இஸ்தீஆப் ஃபீ மஃரிஃபத்தில் அஸ்ஹாப் லி இப்னி அப்தில் பர் )

Sunday, 23 October 2016

இன்று ஒரு செய்தி-61

இன்று ஒரு செய்தி-61
23/10/16/ஞாயிறு
=============================
இறை வணக்கத்தின் மூலமே வளமான வாழ்க்கை
=============================

أخرج الترمذي وابن ماجه وابن حبان بسند صحيح عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ((إن الله يقول: يا ابن آدم تفرَّغ لعبادتي أملأ صدرك غنى، وأَسُد فقرك، وإن لا تفعل ملأت يديك شغلاً، ولم أَسُد فقرك)).
     அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:

     “ஓ ஆதமின் மகனே! என்னை வணங்குவதற்காக உன்னை நீ ஒதுக்கிக் கொள்! உன் உள்ளத்தை செல்வத்தை தருவதன் மூலமாக நான் நிரப்புவேன். உன் ஏழ்மையை விரட்டி விடுவேன்.

      நீ அப்படிச் செய்யவில்லை என்றால், உன்னை நான் எப்போதும் ஏதாவது வேலையை செய்து கொண்டிருக்கும் படி செய்து விடுவேன். உன் ஏழ்மையை உன்னை விட்டும் நீக்கமாட்டேன்” என்று அல்லாஹ் கூறுவதாக, நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

                             ( நூல்: இப்னுமாஜா, இப்னு ஹிப்பான், திர்மிதீ )

Friday, 21 October 2016

இன்று ஒரு செய்தி-60

இன்று ஒரு செய்தி-60
  22/10/16/சனி
=============================
உலகில் சிரமமும், மறுமையில் மகத்தான கூலியும்.
=============================
عَنْ جَابِرٍ ، قَالَ : قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم:يَوَدُّ أَهْلُ الْعَافِيَةِ ، يَوْمَ الْقِيَامَةِ ، حِينَ يُعْطَى أَهْلُ الْبَلاَءِ الثَّوَابَ ، لَوْ أَنَّ جُلُودَهُمْ كَانَتْ قُرِضَتْ فِي الدُّنْيَا بالْمَقَارِيضِ.أخرجه التِّرْمِذِي (2402).
     ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: “உலக வாழ்வின் போது உடல் ஆரோக்கியத்தோடும், மன நிறைவோடும், நிம்மதியோடும் வாழ்ந்த நல்லடியார்கள், நாளை மறுமை நாளில், உலக வாழ்வின் போது பெரும் சோதனைகளால் ஆட்படுத்தப்பட்ட நல்லடியார்களுக்கு அல்லாஹ் வழங்குகிற மகத்தான கூலியைப் பார்த்து ஆச்சர்யப்பட்டு “ உலகில் வாழும் காலத்தில் நம்முடைய உடல்களெல்லாம் கத்தரியால் வெட்டப்பட்டிருக்கக் கூடாதா? என ஆசை கொள்வார்கள்” என நபி {ஸல்} அவர்கள் கூறினார்கள்.

              ( நூல்: திர்மிதீ, ஹதீஸ் எண்: 2402 )

இன்று ஒரு செய்தி-59

இன்று ஒரு செய்தி-59
  21/10/16/வெள்ளி
=============================
பதுக்கலும்! வெண்குஷ்டமும்!!
=============================

عن أبي يحيى ، مولى عمر وكان قد أدرك عمر بن الخطاب رضي الله عنه قال : ألقي على باب المسجد طعاما كثيرا ، فدخل عمر ، فرأى الطعام . قال : ما هذا ؟ قالوا : طعام جلب إلينا . قال : بارك الله فيه ، وفيمن جلبه إلينا . قالوا : يا أمير المؤمنين ، قد احتكر . قال : ومن احتكره ؟ قال : فروخ مولى عثمان ، وفروخ مولاك . فأرسل عمر فدعاهما . فقال : ما حملكما على احتكار طعام المسلمين . قالا : يا أمير المؤمنين ، نشتري بأموالنا ونبيع . قال : سمعت رسول الله صلى الله عليه وسلم يقول : « من احتكر على المسلمين طعامهم ضربه الله عز وجل بجذام (1) أو بإفلاس » ، فقال فروخ عند ذلك : أعاهد الله عز وجل أن لا أعود في شراء الطعام ولا بيعه بعد قولك أبدا . فحول تجارته إلى بني مضر . وأما مولى عمر فقال : نشتري بأموالنا ونبيع . قال أبو الهيثم : زعم أبو يحيى الذي حدثني هذا الحديث أنه رأى مولى عمر هذا بعد حين مجذوما مسدوحا
     அபூ யஹ்யா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

     உமர் (ரலி) அவர்களின் அடிமை பள்ளியின் வாசல் பகுதியில் நிறைய உணவுகளை போட்டு வைத்திருந்தார். அதை கண்ட உமர் (ரலி) அவர்கள் இது என்ன என்று கேட்ட போது "இது நமக்காக கொண்டு வரப்பட்ட உணவு" என்று மக்கள் கூறினார்கள்.

    உடனே உமர் (ரலி) அவர்கள் "அந்த உணவிலும் அதை கொண்டுவந்தவர்களுக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக" என்றார்கள்.

     அங்கிருந்தமக்கள் ''அவர்கள் அதை பதுக்கி வைத்துள்ளனர்" என்றார்கள்.

      அவர்கள் யார்? என்று உமர் (ரலி) அவர்கள் கேட்ட போது "உஸ்மான் (ரலி) அவர்களின் அடிமையும், உங்களின் அடிமையும்" என்றனர்.

     உமர் (ரலி) அவர்கள் அவ்விருவரையும் அழைத்து ஏன் இவ்வாறு செய்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் "நாங்கள் பொருட்களை வாங்கி விற்பனை செய்கிறோம்" என்று கூறினார்கள்.

      உமர் ரலி அவர்கள் அவ்விருவரிடமும்
நபி (ஸல்) அவர்கள் "யாரொருவர் முஸ்லிம்களுக்கு தேவையான உணவு பொருளை மக்களுக்கு அத்தியாவசியத் தேவையிருந்தும் அதை விற்காமல்  பதுக்கி வைக்கிறாரோ அவர் மீது அல்லாஹ்  ஏழ்மையையும்.குஷ்டத்தையும் சாட்டிவிடுவான்" என்று கூறியதை நான் செவியுற்றேன் என்றார்கள்.

      இதைக்கேட்டதும் உஸ்மான் (ரலி) அவர்களின் அடிமை அல்லாஹ்வின் மீது ஆணையாக இனிமேல் இவ்வாறு செய்யமாட்டேன் என்று கூறி ஒதுங்கிகொண்டார்.ஆனால் உமர் (ரலி) அவர்களின் அடிமையோ இதில் என்ன தவறு இது வியாபாரம்தான் என்று கூறி தொடர்ந்து செய்தார்.

       இதை அறிவிக்கும் அபூயஹ்யா (ரஹ்) கூறுகிறார். நான் உமர் (ரலி) அவர்களின் அடிமையை வெண்குஷ்டம் உள்ளவராக கண்டேன்.

நூல். இஸ்லாஹுல் மால்.

Thursday, 20 October 2016

இன்று ஒரு செய்தி-58

இன்று ஒரு செய்தி-58
20/10/16/வியாழன்
=============================
உயர்வான எண்ணமே உயர்வைத் தரும்
=============================

يقول ابن المبارك رحمه الله - رُبَّ عمل صغير تُعظِّمه النيّة، ورُبَّ عمل كبير تُصغِّره النيّة،
    அப்துல்லாஹ் இப்னு முபாரக் (ரஹ்) அவர்கள் கூறுவார்கள்:

     “ஓர் அடியான் உயர்வாக எண்ணி எத்தனையோ சின்னஞ்சிறிய அமல்களைச் செய்கிறான். அவைகள் அவனுக்கு ரப்பிடமிருந்து மகத்தான கூலியைப் பெற்றுத் தந்து விடுகின்றது.

      ஓர் அடியான் எத்தனையோ பெரிய அமல்களைச் செய்கிறான். அவனுடைய துச்சமான எண்ணத்தின் காரணமாக அவைகள் அவனுக்கு ரப்பிடமிருந்து மிகக் குறைவான கூலியையே பெற்றுத்தருகிறது”

Wednesday, 19 October 2016

இன்று ஒரு செய்தி-57

இன்று ஒரு செய்தி-57
19/10/16/புதன்
=============================
மகிழ்ச்சியை உண்டாக்க மூன்று வழிகள்
=============================

والفاروق عمر -رضي الله عنه-: "ثلاث تثبت لك الود في صدر أخيك: أن تبدأه بالسلام، وأن توسع له في المجلس، وأن تدعوه بأحب الأسماء إليه
   உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்:

      உன் சகோதரனின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உண்டாக்க மூன்றுவழிகள் உண்டு:

1.நீ அவனுக்கு முந்தி ஸலாம் கூறுவது.

2.சபையில் அவனுக்கு விசாலமாக இடம் தருவது.

3.அவனை அழகிய பெயர்களால் அழைப்பது.

இன்று ஒரு செப்தி-57

இன்று ஒரு செய்தி-57
19/10/16/புதன்
=============================
மகிழ்ச்சியை உண்டாக்க மூன்று வழிகள்
=============================

والفاروق عمر -رضي الله عنه-: "ثلاث تثبت لك الود في صدر أخيك: أن تبدأه بالسلام، وأن توسع له في المجلس، وأن تدعوه بأحب الأسماء إليه
   உமர் ரலி அவர்கள் கூறுகிறார்கள்:

      உன் சகோதரனின் உள்ளத்தில் மகிழ்ச்சியை உண்டாக்க மூன்றுவழிகள் உண்டு:

1.நீ அவனுக்கு முந்தி ஸலாம் கூறுவது.

2.சபையில் அவனுக்கு விசாலமாக இடம் தருவது.

3.அவனை அழகிய பெயர்களால் அழைப்பது.

Tuesday, 18 October 2016

இன்று ஒரு செய்தி-55

இன்று ஒரு செய்தி-55
17/10/16/திங்கள்
========================
மறுமை வாழ்க்கையே நமது இலக்கு
========================

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ كَانَتِ الدُّنْيَا هَمَّهُ، فَرَّقَ اللهُ عَلَيْهِ اَمْرَهُ، وَجَعَلَ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ، وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا اِلاَّ مَا كُتِبَ لَهُ، وَمَنْ كَانَتِ اْلآخِرَةُ نِيَّتَهُ، جَمَعَ اللهُ لَهُ اَمْرَهُ، وَجَعَلَ غِنَاهُ فِيْ قَلْبِهِ، وَاَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ.رواه ابن ماجه، باب الهم بالدنيا، رقم:٤١٠٥
       தன் உலக தேவைகள் நிறைவடைய வேண்டும் என்ற நோக்குடன் எவர் செயல்படுவாரோ அவருடைய காரியங்களை அல்லாஹுதஆலா சிதறச் செய்துவிடுகிறான்.

     ஒவ்வொரு வேலையிலும் அவருக்குச் சிரமத்தை உண்டாக்கிவிடுகிறான். வறுமை (யின் பயத்தை) அவனுடைய கண்களுக்கு முன்னால் கொண்டுவந்துவிடுகிறான். அவனுடைய விதியில் எழுதப்பட்டது தான் அவனுக்குக் கிடைக்கும்.

      மாறாக,மறுமை வாழ்க்கை சீர்பெற வேண்டும் என்ற நிய்யத் எவருடைய உள்ளத்தில் இருக்குமோ, அவருடைய வேலைகளை அல்லாஹுதஆலா இலேசாக்கிவிடுகின்றான். அவருடைய உள்ளத்தை சீமானாக்கிவிடுகிறான், உலகம் இழிவடைந்து அவரிடம் வந்து சேர்கிறது'' என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஸைதுப்னு ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
                             (நூல்:இப்னுமாஜா)

இன்று ஒரு செய்தி-56

இன்று ஒரு செய்தி-56
18/10/16/செவ்வாய்
==========================
மன்னிப்பவரே மாண்புடையவர்
==========================

   عَنْ اَبِيْ هُرَيْرَةَ ؓ قَالَ: قَالَ رَسُوْلُ اللهِ ﷺ: قَالَ مُوْسَي بْنُ عِمْرَانَؑ: يَارَبِّ! مَنْ اَعَزُّ عِبَادِكَ عِنْدَكَ؟ قاَلَ: مَنْ اِذَا قَدَرَ غَفَرَ. رواه البيهقي في شعب الايمان:٦ /٣١٩
     ஹஜ்ரத்  மூஸா இப்னு இம்ரான் (அலை) அவர்கள் அல்லாஹுதஆலாவிடம்,

       எனது இரட்சகனே, உன் அடியார்களில் உன்னிடத்தில் மிகவும் கண்ணியத்துக்குரியவர் யார்?' எனக் கேட்டார்கள்.

       "பழி வாங்க சக்தியிருந்தும் மன்னித்துவிட்டவர் தான்'' என்று அல்லாஹுதஆலா கூறினான் என ரஸூலுல்லாஹி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

                 (பைஹகீ)

Sunday, 16 October 2016

இன்று ஒரு செய்தி-54

இன்று ஒரு செய்தி-54
16/10/16/ஞாயிறு
====================
அழுகை எத்தனை வகை....!
====================

قال ابن القيم -رحمه الله- البكاء أنواع:
الأول: بكاء الرحمة والرقة.
الثاني: بكاء الخوف والخشية .
الثالث:بكاء المحبة والشوق.
الرابع:بكاء الفرح والسرور.
الخامس:بكاء الجزع من ورود المؤلم وعدم إحتماله.
السادس:بكاء الحزن
والفرق بين بكاء الحزن وبين بكاء الخوف :أن بكاء الحزن يكون على ما مضى وبكاء الخوف يكون لما يتوقع في المستقبل والفرق بين بكاء الفرح وبكاء الحزن:
أن دمعة السرور باردة والقلب فرحان ودمعة الحزن حارة والقلب حزين.
السابع:بكاء الخوف والضعف.
الثامن:بكاء النفاق وهو أن تدمع العين والقلب قاس فيظهر صاحبه الخشوع وهو من أقسى الناس قلبا.
التاسع:البكاء المستعار والمستأجر عليه كبكاء النائحة بالأجرة.
العاشر:بكاء الموافقة وهو أن يرى الرجل الناس يبكون لأمر ورد عليهم فيبكي معهم ولا يدري لأي شيء يبكون ولكن يراهم يبكون فيبكي.
     அல்லாமா இப்னுல் கைய்யிமுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

     “அழுகை என்பது பலவகையாக இருக்கின்றது.

     1. உள்ளத்தில் இரக்கமும், சாந்தமும் உருவாகிற போது வருகிற அழுகை.

     2. நம்மை விட்டு எதுவும் சென்று விடக்கூடாது என்கிற பயமும்,கவலையும் கலந்த உணர்வு ஏற்படுகிற போது வருகிற அழுகை.

     3. நேசமும், காதலும் கலந்த அழுகை.

     4. மகிழ்ச்சியும், சந்தோஷமும் மிகைக்கும் போது வரும் அழுகை.

     5. நோவினையும், வலியும் ஏற்படுகிற போது வருகிற அழுகை.

     6. தப்பிப் போனதை நினைக்கிற போது வருகிற அழுகை.

     7. பலகீனமும், இயலாமையும் ஏற்படுகிற போது வருகிற அழுகை.

     8. உள்ளத்தில் ஒன்றை வைத்து நயவஞ்சகமாக அழுவது.

     9. ஒப்புக்கு அழுவது.

    10. ஓரிடத்தில் எல்லோரும் அழுகின்றார்கள் என்பதற்காக அழுவது.

இன்று ஒரு செய்தி-54

இன்று ஒரு செய்தி-54
16/10/16/ஞாயிறு
====================
அழுகை எத்தனை வகை....!
====================

قال ابن القيم -رحمه الله- البكاء أنواع:
الأول: بكاء الرحمة والرقة.
الثاني: بكاء الخوف والخشية .
الثالث:بكاء المحبة والشوق.
الرابع:بكاء الفرح والسرور.
الخامس:بكاء الجزع من ورود المؤلم وعدم إحتماله.
السادس:بكاء الحزن
والفرق بين بكاء الحزن وبين بكاء الخوف :أن بكاء الحزن يكون على ما مضى وبكاء الخوف يكون لما يتوقع في المستقبل والفرق بين بكاء الفرح وبكاء الحزن:
أن دمعة السرور باردة والقلب فرحان ودمعة الحزن حارة والقلب حزين.
السابع:بكاء الخوف والضعف.
الثامن:بكاء النفاق وهو أن تدمع العين والقلب قاس فيظهر صاحبه الخشوع وهو من أقسى الناس قلبا.
التاسع:البكاء المستعار والمستأجر عليه كبكاء النائحة بالأجرة.
العاشر:بكاء الموافقة وهو أن يرى الرجل الناس يبكون لأمر ورد عليهم فيبكي معهم ولا يدري لأي شيء يبكون ولكن يراهم يبكون فيبكي.
     அல்லாமா இப்னுல் கைய்யிமுல் ஜவ்ஸீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

     “அழுகை என்பது பலவகையாக இருக்கின்றது.

     1. உள்ளத்தில் இரக்கமும், சாந்தமும் உருவாகிற போது வருகிற அழுகை.

     2. நம்மை விட்டு எதுவும் சென்று விடக்கூடாது என்கிற பயமும்,கவலையும் கலந்த உணர்வு ஏற்படுகிற போது வருகிற அழுகை.

     3. நேசமும், காதலும் கலந்த அழுகை.

     4. மகிழ்ச்சியும், சந்தோஷமும் மிகைக்கும் போது வரும் அழுகை.

     5. நோவினையும், வலியும் ஏற்படுகிற போது வருகிற அழுகை.

     6. தப்பிப் போனதை நினைக்கிற போது வருகிற அழுகை.

     7. பலகீனமும், இயலாமையும் ஏற்படுகிற போது வருகிற அழுகை.

     8. உள்ளத்தில் ஒன்றை வைத்து நயவஞ்சகமாக அழுவது.

     9. ஒப்புக்கு அழுவது.

    10. ஓரிடத்தில் எல்லோரும் அழுகின்றார்கள் என்பதற்காக அழுவது.

Saturday, 15 October 2016

இன்று ஒரு செய்தி-53

இன்று ஒரு செய்தி-53
15/10/16/சனி
====================
பயன் தரும் பிள்ளைகள்!
====================

حديث قدسي) حَدَّثَنَا حَدَّثَنَا ابْنُ أَبِي الْعَوَّامِ ، قثنا يَزِيدُ بْنُ هَارُونَ ، قَالَ : ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَن ْأَبِي هُرَيْرَةَ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : "إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَرْفَعُ الدَّرَجَةَ لِلْعَبْدِ فِي الْجَنَّةِ ، فَيَقُولُ : يَا رَبِّ أَنَّى لِي هَذِهِ ؟ فَيَقُولُ : بِاسْتِغْفَارِ وَلَدِكَ لَكَ "
     நபி{ஸல்} அவர்கள்கூறினார்கள்:

    “ஓர் அடியார் சுவனத்தில் நுழைவார்; அங்கு அவருக்கு  அந்தஸ்துகள் உயர்த்தப்படும்.  அதைக்கண்டு வியப்புற்று ”இறைவா! இந்த அந்தஸ்துக்குரிய எந்த அமல்களும் நான் செய்யவில்லையே?” எனமுறையிடுவார்.

     அப்போது, அல்லாஹ்“உனக்காக, உன் சந்ததிகள் - பிள்ளைகள் செய்த துஆவின் பரக்கத்தாலும், அவர்கள் உன் பாவத்திற்காகக்கேட்ட இஸ்திக்ஃபாருக்காகவும் உமக்கு வழங்கப்பட்டுள்ளது” என்று கூறுவான்.