Thursday, 27 October 2016

இன்று ஒரு செய்தி-65

இன்று ஒரு செய்தி-65
27/10/16/ வியாழன்
======================
பேரீத்தமரம் போல் வாழ்க!
======================

سمع عبد الله بن عمر يقول قال رسول الله صلى الله عليه وسلم إن من الشجر شجرة لا يسقط ورقها وإنها مثل المسلم فحدثوني ما هي فوقع الناس في شجر البوادي قال عبد الله ووقع في نفسي أنها النخلة فاستحييت ثم قالوا حدثنا ما هي يا رسول الله قال فقال هي النخلة
    இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

    மரங்களில் ஒரு மரம் உண்டு. அதன் இலை உதிராது, அந்த மரம் ஒரு முஸ்லிமின் வாழ்வுக்கு ஒப்பானது.அது எந்த மரம்? என்று நபி ஸல் அவர்கள் கேட்டார்கள்.

     மக்களின் கவனம் காடுகளில் உள்ள மரங்களின் பக்கம் சென்றது.அது பேரித்தமரம் தான் என்று எனக்கு தெரியும். ஆனாலும் மரியாதைக்காக வெட்கப்பட்டு அதை நான் சொல்லவில்லை.

     அல்லாஹ்வின் தூதர் அவர்களே! ''அது எந்த மரம் நீங்களே சொல்லுங்கள்" என நபித்தோழர்கள் கூறியபோது-அது தான் "பேரித்தமரம்" என்று நபி (ஸல்) அவர்கள் பதில் சொன்னார்கள்.

No comments:

Post a Comment