இன்று ஒரு செய்தி-49
11/10/16/செவ்வாய்
==============================
ஆஷுரா நோன்பும், ஆர்வமான பெண்களும்.
==============================
فعن الربيّع بنت معوذ قالت أرسل النبي صلى الله عليه وسلم غداة عاشوراء إلى قرى الأنصار: " من أصبح مفطراً فليتم بقية يومه، ومن أصبح صائماً فليصم" قالت: فكنا نصومه بعد ونصوم صبياننا ونجعل لهم اللعبة من العهن، فإذا بكى أحدهم على الطعام أعطيناه ذاك حتى يكون عند الإفطار. البخاري
ருபய்யிவு பின்து முஅவ்வித் என்ற ஸஹாபிப் பெண்மணி அறிவிக்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா தினத்தின் காலைப் பொழுதிலே அன்சாரிகளின் கிராமத்திற்கு ஆள் அனுப்பி
"யார் காலையில் நோன்பு நோற்காத நிலையில் எழுந்தாரோ அவர் மீதமுள்ள பகல் நேரம் முழுவதும் நோன்பு நோற்றவற்றைப் போல ஆகியிருக்கட்டும்"
"யார் காலையில் நோன்பு நோற்றிருந்த நிலையில் எழுந்தாரோ அவர் நோன்பிருக்கட்டும்" என்று அறிவிக்கச் செய்தார்கள்.
அதற்குப் பிறகு "நாங்கள் ஆஷூராவுடைய தினத்தில் நோன்பு நோற்போம். எங்களுடைய சிறு பிள்ளைகளையும் நோன்பிருக்கச் செய்வோம்".
மேலும் நாங்கள் உரோமத்தில் விளையாட்டுப் பொருட்களை செய்து வைத்துக் கொண்டு பசியால் அழும் குழந்தைகளுக்கு அதைத் தருவோம். இவ்வாறே நோன்பு திறக்கும் நேரம் வரை விளையாட்டு காட்டுவோம்.
நூல்- புகாரி
No comments:
Post a Comment