Tuesday, 18 October 2016

இன்று ஒரு செய்தி-55

இன்று ஒரு செய்தி-55
17/10/16/திங்கள்
========================
மறுமை வாழ்க்கையே நமது இலக்கு
========================

عَنْ زَيْدِ بْنِ ثَابِتٍ ؓ قَالَ: سَمِعْتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُوْلُ: مَنْ كَانَتِ الدُّنْيَا هَمَّهُ، فَرَّقَ اللهُ عَلَيْهِ اَمْرَهُ، وَجَعَلَ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ، وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا اِلاَّ مَا كُتِبَ لَهُ، وَمَنْ كَانَتِ اْلآخِرَةُ نِيَّتَهُ، جَمَعَ اللهُ لَهُ اَمْرَهُ، وَجَعَلَ غِنَاهُ فِيْ قَلْبِهِ، وَاَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ.رواه ابن ماجه، باب الهم بالدنيا، رقم:٤١٠٥
       தன் உலக தேவைகள் நிறைவடைய வேண்டும் என்ற நோக்குடன் எவர் செயல்படுவாரோ அவருடைய காரியங்களை அல்லாஹுதஆலா சிதறச் செய்துவிடுகிறான்.

     ஒவ்வொரு வேலையிலும் அவருக்குச் சிரமத்தை உண்டாக்கிவிடுகிறான். வறுமை (யின் பயத்தை) அவனுடைய கண்களுக்கு முன்னால் கொண்டுவந்துவிடுகிறான். அவனுடைய விதியில் எழுதப்பட்டது தான் அவனுக்குக் கிடைக்கும்.

      மாறாக,மறுமை வாழ்க்கை சீர்பெற வேண்டும் என்ற நிய்யத் எவருடைய உள்ளத்தில் இருக்குமோ, அவருடைய வேலைகளை அல்லாஹுதஆலா இலேசாக்கிவிடுகின்றான். அவருடைய உள்ளத்தை சீமானாக்கிவிடுகிறான், உலகம் இழிவடைந்து அவரிடம் வந்து சேர்கிறது'' என நபி (ஸல்) அவர்கள் கூறத் தாம் கேட்டதாக ஹஜ்ரத் ஸைதுப்னு ஸாபித் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
                             (நூல்:இப்னுமாஜா)

No comments:

Post a Comment