இன்று ஒரு செய்தி-63
25/10/16/ செவ்வாய்
==========================
அற்புதமான ஐந்து உபதேசங்கள்!
==========================
عن الشعبي قال لما حضر عبد الله بن مسعود الموت دعا أبنَه قال يا عبد الرحمن بن عبد الله بن مسعود إني أوصيك بخمس خصال فاحْفظهُنَّ عنِّي أظهر اليأس للناس فان ذلك غنى فاضل ودَعْ مَطْلبَ الحاجات إلى الناس فان ذلك فقرٌ حاضرٌ ودَعْ ما تعتذر منه من الأمور ولا تعمل به وإن استطعت أن لا يأتي عليك يوم إلا وأنت خير منك بالأمس فافعل فإذا صليت صلاة فصل صلاة مودع كأنك لاتصلي بعدها (تاريخ دمشق)
ஹள்ரத் இப்னு மஸ்வூத்(ரலி) அவர்கள் தம் மகன் அப்துர்ரஹ்மானிடம் இறுதி உபதேசமாக கூறியதாவது:
அப்துர் ரஹ்மானே! நான் உனக்கு ஐந்து வஸிய்யத்துகளை செய்கிறேன்.அவைகளை நீ உன்வாழ்க்கையில் கடைபிடி.
1, பேராசை இல்லாத பற்றற்ற நிலையில் மக்களிடம் நீ இரு.. அது தான் மேலான செல்வம்.
2, மக்களிடம் தேவையாகுவதை விட்டு விடு.. ஏனெனில் அது தான் கண் கூடான வறுமையாகும்.
3,எந்தக் காரியத்தைச் செய்ய உன் மனம் தயங்குமோ, அது சரியா தவறா என்ற சந்தேகம் வருமோ அதை விட்டு விடு.. அதைச் செய்யாதே.
4, உன்னுடைய நேற்றைய தினத்தை விட இன்றைய நாள் சிறப்புடையதாக இல்லாமல் எந்த நாட்களும் கழிந்து விடக்கூடாது.
5, நீ தொழுகின்ற ஒவ்வொரு தொழுகையையும் உன் கடைசி தொழுகையாக எண்ணிக் கொள்.
No comments:
Post a Comment