Wednesday, 21 December 2016

இன்று ஒரு செய்தி-120

இன்று ஒரு செய்தி-120
21/12/16/புதன்

பாவங்களால் விளையும் துன்பங்கள்!

وقال قتادة في الآية‏:‏ ‏{‏فمن نفسك‏}‏ عقوبة لك يا ابن آدم بذنبك، قال‏:‏ وذكر لنا أن النبي صلى اللّه عليه وسلم قال‏:‏ ‏(‏لا يصيب رجلاً خدش عود ولا عثرة قدم، ولا اختلاج عرق إلا بذنب وما يعفو اللّه أكثر‏)‏،(تفسير ابن كثير سورة النساء-٧٩)
       கத்தாதா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:

     மனிதா! உன் பாவத்திற்கு தண்டனையாகவே உனக்குத் துன்பம் ஏற்படுகின்றது.

     மேலும் பின்வருமாறு எங்களுக்குக் கூறப்பட்டது. அதாவது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

     ஒரு மனிதருக்குச் சிறு குச்சியால் ஏற்படும் கீறலும், கால் இடறலும், (சிரமத்தால்) வியர்வை கொட்டுவதும் கூட அவரது பாவத்தால் விளைவதாகும்.  அல்லாஹ் மன்னிக்கும் பாவங்களோ அதிகம்.

                    (நூல்: ஷுஅபுல் ஈமான்)

Monday, 19 December 2016

இன்று ஒரு செய்தி-119

இன்று ஒரு செய்தி-119
20/12/16/செவ்வாய்
==================
மாநபி (ஸல்) அவர்களின் மகத்தான குணம்!
==================

كما قال عبد اللّه بن عمرو‏:‏ إني أرى صفة رسول اللّه صلى اللّه عليه وسلم في الكتب المتقدمة ‏(‏أنه ليس بفظ، ولا غليظ، ولا صخّاب في الأسواق، ولا يجزي بالسيئة السيئة، ولكن يعفو ويصفح‏)‏.(تفسير ابن كثير سورة ال عمران-١٥٩)
      அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னுல்ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

     ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணநலன்களை முந்தைய வேதங்களில் நான் பார்த்திருக்கிறேன்.

அதில் காணப்படுவதாவது:

       அவர் கடுகடுப்பானவர் அல்லர்; கல் நெஞ்சுக்காரரும் அல்லர்; கடைத்தெருவில் கூச்சலிடுபவரும் அல்லர்; ஒரு தீமைக்கு இன்னொரு தீமையால் அவர் தீர்வு காண மாட்டார்; மாறாக (அதை) மன்னிப்பார்; விட்டுக் கொடுப்பார்.

                                        (நூல்: புகாரி)

Sunday, 18 December 2016

இன்று ஒரு செய்தி-118

இன்று ஒரு செய்தி-118
19/12/16/திங்கள்
==================
பயனில்லாத புலம்பல்!
==================

وقال ابن جرير عن أبي موسى رضي الله عنه قال‏:‏ ثلاثة يدعون اللّه فلا يستجيب لهم، رجل له امرأة سيئة الخلق فلم يطلقها، ورجل أعطى ماله سفيهاً، وقد قال اللّه‏:‏ ‏{‏ولا تؤتوا السفهاء أموالكم‏}‏، ورجل كان له على رجل دين فلم يشهد عليه‏.‏(تفسير ابن كثير سورة النساء-٥)
    அபூ முஸா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

       முன்று பேரின் புலம்பலை அல்லாஹ் ஏற்கமாட்டான்:

     1) (அறவே ஒத்துப் போகாத) கெட்ட குணமுள்ள மனைவியை விவாகரத்து செய்யாதவன்.

     2) விவரமறியாதவனிடம் பொருளை ஒப்படைத்தவன். ஏனெனில்,"உங்கள் செல்வங்களை விவரமறியாதவர்களிடம் கொடுக்காதீர்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான்.

     3) ஒருவருக்குக் கடன் கொடுத்து விட்டு அதற்குச் சாட்சியை ஏற்படுத்தாதவன்.

                         (நூல்: ஹாகிம், பைஹகீ)

இன்று ஒரு செய்தி-117

இன்று ஒரு செய்தி-117
18/12/16/ஞாயிறு
=========================
பொருளாதாரத்திற்கு பொறுப்புதாரி!
=========================

قال ابن عباس رضي الله عنهما لا تعمد إلى مالك وما خوّلك اللّه وجعله لك معيشة، فتعطيه امرأتك أو بنتك، ثم تنظر إلى ما في أيديهم، ولكن أمسك مالك وأصلحه، وكن أنت الذي تنفق عليهم من كسوتهم ومؤنتهم ورزقهم‏.‏(تفسير ابن كثير سورة النساء-٥)
    இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறியதாவது:

     அல்லாஹ் உங்களது பொறுப்பில் ஒப்படைத்துள்ள செல்வங்களை, அவன் உங்களுக்கு வழங்கியுள்ள வாழ்வாதாரங்களை உங்கள் மனைவியிடமோ மகளிடமோ கொடுத்து விட்டு, அவர்களின் கைகளை எதிர்பார்த்துக் காத்திராதீர்.

     உங்கள் செல்வத்தை நீங்களே வைத்திருந்து அதைப் பராமரியுங்கள். உங்கள் மனைவி மற்றும் மக்களுக்கு வேண்டிய உணவு, உடை மற்றும் இதரச் செலவுகளை நீங்களே வழங்குங்கள்.

                    (நூல்: தஃப்ஸீர் தபரீ)

Saturday, 17 December 2016

இன்று ஒரு செய்தி-116

இன்று ஒரு செய்தி-116
17/12/16/சனி
=========================
இமாம் புஹாரி (ரஹ்)அவர்களின் கல்வி தேட்டம்!
=========================

قال الحافظ ابن كثير عن الإمام البخاري أمير المؤمنين في الحديث : ( وقد كان البخاري يستيقظ في الليلة الواحدة من نومه ، فيوقد السراج ويكتب الفائدة تمر بخاطره ، ثم يطفئ ســـراجه ، ثم يقوم مرة أخرى وأخرى ، حتى كان يتعدد منه ذلك قريباً من عشرين مرة
     இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:

      இமாம் புஹாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இரவில் எழுந்து விளக்கேற்றிவைத்து எழுத ஆரம்பித்து விடுவார்கள்.பின்பு விளக்கை அணைத்து விட்டு தூங்கிவிடுவார்கள். பின்பு மீண்டும் எழுந்து எழுத ஆரம்பிப்பார்கள்.இப்படி ஒரு இரவில் இருபது தடவைக்கு மேல் தூங்கத்திலிருந்து விழிப்பார்கள்.

Friday, 16 December 2016

இன்று ஒரு செய்தி-115

இன்று ஒரு செய்தி-115
16/12/16/வெள்ளி
==================
எட்டு வகை காற்றுகள்!
==================

قال ابن أبي حاتم عن عبيد اللّه بن عمرو رضي الله عنه قال‏:‏ الرياح ثمانية‏:‏ أربعة منها رحمة، وأربعة منها عذاب، فأما الرحمة‏:‏ فالناشرات، والمبشرات، والمرسلات، والذرايات، وأما العذاب‏:‏ فالعقيم، والصرصر - وهما في البر - والعاصف والقاصف وهما في البحر،(تفسير ابن كثير سورة الروم-٥١)
      அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

      காற்றுகள் மொத்தம் எட்டு வகைப்படும். அவற்றில் நான்கு வகைகள் அருள்களாகும். நான்கு வகைகள் தண்டனைகளாகும்.

அருள்களான நான்கு வகை காற்றுகள்:

    1) நாஷிராத் - (மேகங்களைப்) பரப்புகின்றவை.
2) முபஷ்ஷிராத் - நற்செய்தி கூறுபவை.
3) முர்ஸலாத் - தொடர்ச்சியாக அனுப்பப்படுபவை.
4) தாரியாத் - புழுதி கிளப்பக் கூடியவை.

தண்டனைகளான நான்கு வகை காற்றுகள்:

     1) அகீம் - மலட்டுக்காற்று.
2) ஸர்ஸர் - சூறைக்காற்று.
இவ்விரண்டும் நிலப்பரப்பில் விசுபவை ஆகும்.

     3) ஆஸிஃப் - புயற்காற்று.
4) காஸிஃப்-ஆழிப்புயற்காற்று. இவ்விரண்டும் கடலில் வீசுபவை ஆகும்.

Thursday, 15 December 2016

இன்று ஒரு செய்தி-114

இன்று ஒரு செய்தி-114
15/12/16/வியாழன்
=======================
அனைத்து நலவுகளும் வழங்கப்பட்டவர்!
=======================

٧٨-عَنِ ابْنِ عَبَّاسٍؓ أَنَّ النَّبِيَّ ﷺ قَالَ: أَرْبَعٌ مَنْ أُعْطِيَهُنَّ فَقَدْ أُعْطِيَ خَيْرَ الدُّنْيَا وَاْلآخِرَةِ: قَلْباً شَاكِرًا وَلِسَاناً ذَاكِرًا وَبَدَناً عَلَي الْبَلاَءِ صَابِرًا وَزَوْجَةً لاَ تَبْغِيهِ خَوْناً فِي نَفْسِهَا وَلاَ مَالِهِ. رواه الطبراني في الكبير والاوسط ورجال الاوسط رجال الصحيح مجمع الزوائد:٤/٥٠٢
        ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் அறிவிக்கிறார்கள்.

     1)நன்றி செலுத்தும் உள்ளம். 2) அல்லாஹ்வை திக்ரு செய்யும் நாவு.3) துன்பங்களைச் சகிக்கும் உடல். 4) தன் கற்பிலும் கணவனின் செல்வத்திலும் மோசடி செய்யாத பத்தினியான மனைவி.

       ஆகிய இந்த நான்கு பாக்கியங்களும் எவருக்குக் கொடுக்கப்பட்டதோ, அவர் இம்மை, மறுமையின் நன்மைகள் யாவற்றையும் பெற்றுக் கொண்டார்'', என ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

      (நூல்:தப்ரானி, மஜ்மஉஸ்ஸவாயித்)

Wednesday, 14 December 2016

இன்று ஒரு செய்தி-113

இன்று ஒரு செய்தி-113
14/12/16/புதன்
=======================
நன்மைக்கு வழிகாட்டினால்...
=======================

٣٩- عَنْ أَبِي مَسْعُودِ نِ الْبَدْرِيِّؓ قَالَ: قَالَ رَسُولُ اللهِ ﷺ: مَنْ دَلَّ عَلَي خَيْرٍ فَلَهُ مِثْلُ أَجْرِ فَاعِلِهِ.(وهو جزء من الحديث)رواه ابو داؤد، باب في الدال علي الخير، رقم:٥١٢٩
      ஹஜ்ரத் அபூமஸ்வூத் பத்ரீ  ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் அறிவிக்கிறார்கள்:

      "எவர் நன்மையின் பால் வழிகாட்டுவாரோ, அவருக்கு அந்த நன்மையைச் செய்தவருக்குச் சமமான நன்மை கிடைக்கும்'' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

                            (நூல்:அபூதாவூத்)

Tuesday, 13 December 2016

இன்று ஒரு செய்தி-112

இன்று ஒரு செய்தி-112
13/12/16/செவ்வாய்
=====================
உலகத்தின் உண்மை நிலை!
=====================

١٢٨- عَنْ خَالِدِ بْنِ عُمَيْرِنِ الْعَدَوِيِّؓ قَالَ: خَطَبَنَا عُتْبَةُ بْنُ غَزْوَانَؓ ، فَحَمِدَ اللّٰهَ وَأَثْنَي عَلَيْهِ، ثُمَّ قَالَ: أَمَّا بَعْدُ، "فَإِنَّ الدُّنْيَا قَدْ آذَنَتْ بِصُرْمٍ، وَوَلَّتْ حَذَّاءَ، وَلَمْ يَبْقَ مِنْهَا إِلاَّ صُبَابَةٌ كَصُبَابَةِ اْلإِنَاءِ يَتَصَابُّهَا صَاحِبُهَا، وَإِنَّكُمْ مُنْتَقِلُونَ مِنْهَا إِلَي دَارٍ لاَزَوَالَ لَهَا، فَانْتَقِلُوا بِخَيْرٍ مَا بِحَضْرَتِكُمْ." رواه مسلم.
      ஹஜ்ரத் காலிதிப்னு உமைர் அதவிய்யி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது:

       “ஒரு முறை எங்களிடையே ஹஜ்ரத் உத்பதுப்னு ஙஸ்வான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (பஸராவின் கவர்னராக இருந்த போது) பிரசங்கம் நிகழ்த்தினார்கள்.  அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்த பின் சொன்னார்கள்:

         “நிச்சயமாக! உலகம் தான் அழிந்து போவதை அறிவித்துவிட்டது, முதுகைக் காட்டியவண்ணம் விரைந்து செல்கிறது.

      பாத்திரத்தில் எஞ்சியிருக்கும் பானத்தைப் போல, உலக வாழ்க்கையில் கொஞ்சம் தான் எஞ்சியுள்ளது, அந்த எஞ்சிய பானத்தையும் மனிதன் உறிஞ்சிவிடுகிறான்.

       நீங்கள் உலகை விட்டும் நிரந்தரமான அழிவில்லாத வீட்டின் பக்கம் செல்ல இருக்கிறீர்கள்.

       எனவே, உங்களிடம் உள்ளவற்றில் மிக மேலானவற்றை (நல்அமல்களை) எடுத்துக் கொண்டு அவ்வீட்டிற்குச் செல்லுங்கள்!

                              (நூல்: முஸ்லிம்)

Monday, 12 December 2016

இன்று ஒரு செய்தி-111

இன்று ஒரு செய்தி-111
12/12/16/திங்கள்
==================
வானம் சுருட்டப்படும்!
==================

‏وعن ابن عباس رضي الله عنها قال‏:‏ يطوي اللّه السماوات السبع بما فيها من الخليقة والأرضين السبع بما فيها من الخليقة يطوي ذلك كله بيمينه يكون ذلك كله في يده بمنزلة خردلة ‏"‏ أخرجه ابن أبي حاتم"(تفسير ابن كثير سورة الانبياء-١٠٤)
     இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறியதாவது:

     அல்லாஹ் ஏழு வானங்களையும் அவற்றிலுள்ள படைப்பினங்களையும், ஏழு பூமிகளையும் அவற்றிலுள்ள படைப்பினங்கள் அனைத்தையும் சுருட்டிவிடுவான்.

      அவையனைத்தையும் தனது வலக்கரத்தில் சுருட்டிக்கொள்வான். அவையனைத்தும் அவனது கரத்தில் ஒரு கடுகைப் போன்று காட்சியளிக்கும்.

    (நூல்: தஃப்ஸீர் இப்னு அபீ ஹாத்திம்)

Sunday, 11 December 2016

இன்று ஒரு செய்தி-110

இன்று ஒரு செய்தி-110
11/12/16/ஞாயிறு
==========================
பாதுகாக்கப்பட்ட பரிசுத்த வேதம்!
==========================

وهذه قصة عجيبة: قال يحيى بن أكثم : دخل يهودي على الخليفةالمأمون فتكلم فأحسن الكلام فدعاه المأمون إلى الإسلام، فأبى اليهودي، فلما كان بعد سنة جاءنا مسلماً، فتكلم في الفقه فأحسن الكلام، فقال لهالمأمون : ما كان سبب إسلامك؟ قال: انصرفت من حضرتك -أنا لما خرجت من عندك- قبل سنة وأحببت أن أمتحن هذه الأديان، فعمدت إلى التوراة فكتبت ثلاث نسخ فزدت فيها ونقصت وأدخلتها الكنيسة فاشتريت مني -راجت واشتروها آل يهود، اشتروها بسرعة- وعمدت إلى الإنجيل فكتبت ثلاث نسخ، فزدت فيها ونقصت وأدخلتها الكنيسة فاشتريت مني -راجت ونفقت مع أنها محرفة، هو بنفسه حرفها- وعمدت إلى القرآن فعملت ثلاث نسخ فزدت فيها ونقصت وأدخلتها على الوراقين فتصفحوها فلما أن وجدوا فيها الزيادة والنقصان رموا بها ولم يشتروها، فعلمت أن هذا الكتاب محفوظ، فكان هذا سبب إسلامي،
      யஹ்யா இப்னு அக்ஸம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:

      கலீபா மஃமூன் ரஷீத் அவர்களின் அரசவைக்கு ஒரு யூதர் வந்தார். அவர் அழகான முறையில் பேசினார். அந்த யூதரை கலீபா அவர்கள் இஸ்ஸாத்தின் பக்கம் அழைத்தார். அந்த யூதர் மறுத்து விடடார்.

      ஒரு வருடத்திற்குப் பின் அந்த யூதர் முஸ்லிமானவராகவும், நன்கு பிக்ஹூ சட்டங்களை பேசுபவராகவும் அரசவைக்கு வந்தார்.

      கலீபா அவர்கள் நீங்கள் இஸ்லாமை ஏற்க காரணம் என்னவென்று கேட்டார்.

     அதற்கு "நான் ஒரு வருடத்திற்கு முன் உங்கள் சபைக்கு வந்து சென்றபின் இந்த மார்க்கங்களை சோதித்து பார்க்க விரும்பினேன்.

      தவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதங்களில் மூன்று பிரதிகளை எழுதி, அதில் கூடுதல் குறைவுகளைச் செய்து சிலை வணக்கத்தையும் நுழைத்து விற்பனை செய்தேன்.  யூதர்களும் கிருஸ்தவர்களும் அதை வாங்கினார்கள். வேகமாக விற்பனையானது.

         அதே போல் திருக்குர்ஆனில் மாற்றம் செய்து விற்பனை செய்ய நாடிய பொழுது,  அதில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை கண்டு ஒருவரும் அதை வாங்க முன் வரவில்லை. தூக்கி எரிந்து விட்டார்கள்.

      அதன் மூலம் இந்தவேதம் பாதுகாக்கப்பட்டது என்பதை நான் விளங்கிக் கொண்டேன். இதுதான் நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கு காரணம் என்று அந்த யூதர் கூறினார்.

Saturday, 10 December 2016

இன்று ஒரு செய்தி-109

இன்று ஒரு செய்தி-109
10/12/16/சனி
=======================
இறையச்சத்தால் அழுத கண்!
=======================

  عن أبي هريرة ، رضي اللَّه عنه ، قال : قالَ رسُولُ اللَّهِ ﷺ : « لاَيَلِجُ النَّارَ رَجْلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّه حَتَّى يَعُودَ اللَّبَنُ في الضَّرْع, وَلا يَجْتَمعُ غُبَارٌ في سَبِيلِ اللَّه ودُخانُ جَهَنَّمَ » رواه الترمذي  (301) وقال : حديثٌ حسنٌ صحيحٌ .
            அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

      அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

     “கறந்த பால் எப்படி மடுவுக்குள் திரும்பிச்செல்ல முடியாதோ, அது போன்று தான் அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத கண்ணையும், அழுதவரையும் நரகம் தீண்டாது. அல்லாஹ்வின் பாதையில் கிளம்பும் புழுதியும், நரகத்தின் புகையும் ஒன்று சேராது.”

                                     (நூல்: திர்மிதீ)

இன்று ஒரு செய்தி-109

இன்று ஒரு செய்தி-109
10/12/16/சனி
=======================
இறையச்சத்தால் அழுத கண்!
=======================

  عن أبي هريرة ، رضي اللَّه عنه ، قال : قالَ رسُولُ اللَّهِ ﷺ : « لاَيَلِجُ النَّارَ رَجْلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّه حَتَّى يَعُودَ اللَّبَنُ في الضَّرْع, وَلا يَجْتَمعُ غُبَارٌ في سَبِيلِ اللَّه ودُخانُ جَهَنَّمَ » رواه الترمذي  (301) وقال : حديثٌ حسنٌ صحيحٌ .
            அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:

      அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

     “கறந்த பால் எப்படி மடுவுக்குள் திரும்பிச்செல்ல முடியாதோ, அது போன்று தான் அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத கண்ணையும், அழுதவரையும் நரகம் தீண்டாது. அல்லாஹ்வின் பாதையில் கிளம்பும் புழுதியும், நரகத்தின் புகையும் ஒன்று சேராது.”

                                     (நூல்: திர்மிதீ)

Friday, 9 December 2016

இன்று ஒரு செய்தி-108

இன்று ஒரு செய்தி-108
09/12/16/வெள்ளி
=================
தரம் உயர்த்தும் தக்வா!
=================

٣٩- عَنْ اَبِيْ ذَرٍّ ؓ اَنَّ النَّبِيَّ ﷺ قَالَ لَهُ: اُنْظُرْ فَاِنَّكَ لَسْتَ بِخَيْرٍ مِنْ اَحْمَرَ وَلاَ اَسْوَدَ اِلاَّ اَنْ تَفْضُلَهُ بِتَقْوَي. رواه احمد:٥ /١٥٨
      ஹஜ்ரத் அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்

       அபூதரே! அறிந்து கொள்ளும்! நீர் ஒரு சிவப்பு மனிதரைவிடவோ அல்லது கறுப்பு நிறத்தவரைவிடவோ சிறந்தவரல்ல.

        "ஆயினும் நீங்கள் தக்வாவின் (இறையச்சத்தின்) காரணமாக அவரைவிட மேன்மை உடையவராக ஆகலாம்'' என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

               (நூல்:முஸ்னத் அஹ்மத்)

இன்று ஒரு செய்தி-107

இன்று ஒரு செய்தி-107
08/12/16/வியாழன்
=============
நாவின் விபரீதம்!
=============

١٣-عَنْ اَسْلَمَؒ اَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِؓ اِطَّلَعَ عَلي اَبِيْ بَكْرٍ وَهُوَ يَمُدُّ لِسَانَهُ قَالَ: مَا تَصْنَعُ يَا خَلِيْفَةَ رَسُوْلِ اللهِ؟ قَالَ:اِنَّ هذَا الَّذِيْ اَوْرَدَ نِيَ الْمَوَارِدَ،اِنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لَيْسَ شَيْءٌ مِنَ الْجَسَدِ اِلاَّ يَشْكُوْ ذَرَبَ اللِّسَانِ عَلي حِدَّتِهِ. رواه البيهقي:٤/٢٤٤
     ஹஜ்ரத் அஸ்லம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:

      ஹஜ்ரத் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது நாவை இழுத்துக் கொண்டிருப்பதை ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பார்த்து, அல்லாஹ்வின் ரஸூலுடைய கலீஃபாவே, தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று வினவினார்கள்.

      இந்த நாவுதான் என்னை நாசமாக்கும் இடங்களுக்கு என்னைக் கூட்டிச் சென்றது'' என்று சொல்லி விட்டு, தீய வார்த்தையாலும், நாவின் கூர்மையாலும் ஏற்படும் நாவின் கெடுதியைப் பற்றி முறையிடாத எந்தப் பாகமும் உடலில் இல்லை'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.

                              ( நூல்:பைஹகீ)

Tuesday, 6 December 2016

இன்று ஒரு செய்தி-106

இன்று ஒரு செய்தி-106
07/12/16/புதன்
==============================
இறை உபதேசத்தைப் புறக்கணித்தால்....?
==============================

قال قتادة ‏رحمه الله:‏ إياكم والإعراض عن ذكر اللّه، فإن من أعرض عن ذكره فقد اغتر أكبر الغرة وأعوز أشد العوز،(تفسير ابن كثير سورة السجدة -٢٢)
      கத்தாதா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:

     அல்லாஹ்வின் நல்லுபதேசங்களைப் புறக்கணிப்பது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன்.

    யார் அவனது நல்லுரையைப் புறக்கணிக்கிறாரோ நிச்சயமாக அவர் மிகப் பெரும் ஏமாற்றத்தையே சந்திப்பார்; கடுமையான நெருக்கடியையே அனுபவிப்பார்.

              (நூல்: தஃப்ஸீர் இப்னு கஸீர்)

இன்று ஒரு செய்தி-105

இன்று ஒரு செய்தி-105
06/12/16/செவ்வாய்
==============================
மேன்மைமிக்க மாநபி (ஸல்) அவர்கள்!
==============================

عن عكرمة قال‏:‏ سمعت ابن عباس رضي اللّه عنهما يقول‏:‏ إن اللّه تعالى فضل محمداً صلى اللّه عليه وسلم على أهل السماء وعلى الأنبياء، قالوا‏:‏ يا ابن عباس فيم فضله على الأنبياء‏؟‏ قال رضي اللّه عنه إن اللّه تعالى قال‏:‏ ‏{‏وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم‏}‏ وقال للنبي صلى اللّه عليه وسلم ‏{‏وما أرسلناك إلا كافة للناس‏}‏ فأرسله اللّه تعالى إلى الجن والإنس،(تفسير ابن كثير سورة سبا ٢٨)
     இக்ரிமா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:

     "நிச்சயமாக அல்லாஹு தஆலா, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வானோரை விடவும் மற்ற நபிமார்களை விடவும் மேன்மைப்படுத்தியுள்ளான்" என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன்.

      அப்போது மக்கள்." இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களே! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மற்ற நபிமார்களை விட எந்த விஷயத்தில் அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான்?" என்று வினவினர்.

     அதற்கு இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் பின் வருமாறு பதிலளித்தார்கள்:

     அல்லாஹு தஆலா (மற்ற இறைத்தூதர்களைப் பற்றி குறிப்பிடுகையில்) "எந்த இறைத்தூதர் ஆனாலும், அவர் தம் சமூகத்தாருக்கு (உண்மைகளை)த் தெளிவு படுத்த வேண்டும் என்பதற்காக, அவர்களது மொழி பேசுபவராகவே அவரை நாம் அனுப்பினோம்" (14;4) என்று கூறுகின்றான்.

     ஆனால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது.  (நபியே!) உம்மை நாம் மனிதர்கள் அனைவருக்கும் அனுப்பியுள்ளோம் (34; 28) என்று கூறுகிறான்.

     எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹு தஆலா மனித மற்றும் ஜின் இனத்தார் அனைவருக்கும் பொதுவான தூதராக அனுப்பியுள்ளான்.

தஃப்ஸீர் இப்னு கஸீர் 34;28 வசன விரிவுரை.

Monday, 5 December 2016

இன்று ஒரு செய்தி-104

இன்று ஒரு செய்தி-104
05/12/16/திங்கள்
======================
மனிதர்களில் மிகத் தீயவன்!
======================

٥٩- عَنْ اَبِيْ هُرَيْرَةَؓ عَنِ النَّبِيِّ ﷺ قَالَ: مِنْ اَسْوَءِ النَّاسِ مَنْزِلَةً مَنْ اَذْهَبَ آخِرَتَهُ بِدُنْيَا غَيْرِهِ.
رواه البيهقي: ٣ /٣٥٨
     ஹஜ்ரத் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

     பிறருடைய உலக ஆதாயத்துக்காகத் தனது மறுமையை நஷ்டமடையச் செய்பவனே மனிதர்களில் மிகத் தீயவன். (மற்றவர்களுக்கு உலக லாபங்கள் கிடைப்பதற்காக, அல்லாஹுதஆலாவை வெறுப்படையச் செய்யும் காரியத்தைச் செய்து, தன்னுடைய மறு உலக நன்மையை இழந்தவன்) என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

                                          (நூல்:பைஹகீ)

Sunday, 4 December 2016

இன்று ஒரு செய்தி-103

இன்று ஒரு செய்தி-103
04/12/16/ஞாயிறு
===============
மஸ்ஜிதின் மாண்பு!
===============

قَالَ عَلِيٌّ كَرَّمَ اللَّهُ وَجْهَهُ: لَوْ خُيِّرْتُ بَيْنَ الْمَسْجِدِ وَالْجَنَّةِ لَاخْتَرْتُ الْمَسْجِدَ، مرقاة المفاتيح شرح مشكاة المصابيح
     அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது:

     "உனக்கு மஸ்ஜித் வேண்டுமா? சொர்க்கம் வேண்டுமா?" என்று என்னிடம் விருப்பம் கேட்கப்பட்டால், நான் மஸ்ஜிதைத் தேர்ந்தெடுத்துக் கொள்வேன்.

Saturday, 3 December 2016

இன்று ஒரு செய்தி-102

இன்று ஒரு செய்தி-102
03/12/16/சனி
=======================
நன்மை தீமையின் பலன்கள்!
=======================

     وقال ابن عباس رضي الله عنهما - : إن للحسنة نورا في القلب ، وزينا في الوجه ، وقوة في البدن ، وسعة في الرزق ، ومحبة في قلوب الخلق . وإن للسيئة ظلمة في القلب ، وشينا في الوجه ، ووهنا في البدن ، ونقصا في الرزق ، وبغضة في قلوب الخلق.[ روضة المحبين - ابن قيم الجوزية ]
      ஹள்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறியதாவது:

      நற்செயல்கள் செய்வதினால் இதயத்தில் ஒளியும், முகத்தில் அழகும்,உடலில் வலிமையும். உணவில் தாராளமும், மக்கள் மனங்களில் அன்பும் உண்டாகும்.

      தீமைகள் செய்வதினால் இதயத்தில் இருளும், முகத்தில் விகாரமும், உடலில் பலவீனமும், உணவில் குறைவும், மக்களின் மனங்களில் வெறுப்பும் ஏற்படும்.