Thursday, 1 December 2016

இன்று ஒரு செய்தி-100

இன்று ஒரு செய்தி-100
01/12/16/வியாழன்
================================ பிறரை மன்னித்தால் மகத்தான சுவனம் உறுதி!
================================

وعن ابن عباس رضي اللّه عنهما قال، قال رسول اللّه صلى اللّه عليه وسلم ‏:‏ ‏(‏إذا كان يوم القيامة نادى منادٍ يقول‏:‏ أين العافون عن الناس، هلموا إلى ربكم، وخذوا أجوركم، وحق على كل امرىء مسلم إذا عفا أن يدخل الجنة‏)‏ ‏"‏أخرجه ابن مردويه‏"‏(الكتاب: تفسير ابن كثير سورة ال عمران-١٣٤)
       இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிப்பதாவது:

     மறுமை நாள் வந்து விட்டால் அப்போது ''மக்க(ளின் தவறு) களை மன்னித்தவர்கள் எங்கே?  (இதோ) உங்கள் இறைவனிடம் வாருங்கள்; உங்களுக்குறிய பிரதி பலன்களைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்று ஓர் அறிவிப்பாளர் அறிவிப்புச் செய்து கொண்டிருப்பார்.

     "எனவே (பிறரை) மன்னித்த ஒவ்வொரு முஸ்லிமும் சொர்க்கத்தில் நுழைவது உறுதி" என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

நூல்: தஃப்ஸீர் இப்னு மர்தவைஹி

தஃப்ஸீர் இப்னு கஸீர் 3;134வசன விரிவுரை.

No comments:

Post a Comment