இன்று ஒரு செய்தி-107
08/12/16/வியாழன்
=============
நாவின் விபரீதம்!
=============
١٣-عَنْ اَسْلَمَؒ اَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِؓ اِطَّلَعَ عَلي اَبِيْ بَكْرٍ وَهُوَ يَمُدُّ لِسَانَهُ قَالَ: مَا تَصْنَعُ يَا خَلِيْفَةَ رَسُوْلِ اللهِ؟ قَالَ:اِنَّ هذَا الَّذِيْ اَوْرَدَ نِيَ الْمَوَارِدَ،اِنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ: لَيْسَ شَيْءٌ مِنَ الْجَسَدِ اِلاَّ يَشْكُوْ ذَرَبَ اللِّسَانِ عَلي حِدَّتِهِ. رواه البيهقي:٤/٢٤٤
ஹஜ்ரத் அஸ்லம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:
ஹஜ்ரத் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தனது நாவை இழுத்துக் கொண்டிருப்பதை ஹஜ்ரத் உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பார்த்து, அல்லாஹ்வின் ரஸூலுடைய கலீஃபாவே, தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?'' என்று வினவினார்கள்.
இந்த நாவுதான் என்னை நாசமாக்கும் இடங்களுக்கு என்னைக் கூட்டிச் சென்றது'' என்று சொல்லி விட்டு, தீய வார்த்தையாலும், நாவின் கூர்மையாலும் ஏற்படும் நாவின் கெடுதியைப் பற்றி முறையிடாத எந்தப் பாகமும் உடலில் இல்லை'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறினார்கள்.
( நூல்:பைஹகீ)
No comments:
Post a Comment