Tuesday, 6 December 2016

இன்று ஒரு செய்தி-105

இன்று ஒரு செய்தி-105
06/12/16/செவ்வாய்
==============================
மேன்மைமிக்க மாநபி (ஸல்) அவர்கள்!
==============================

عن عكرمة قال‏:‏ سمعت ابن عباس رضي اللّه عنهما يقول‏:‏ إن اللّه تعالى فضل محمداً صلى اللّه عليه وسلم على أهل السماء وعلى الأنبياء، قالوا‏:‏ يا ابن عباس فيم فضله على الأنبياء‏؟‏ قال رضي اللّه عنه إن اللّه تعالى قال‏:‏ ‏{‏وما أرسلنا من رسول إلا بلسان قومه ليبين لهم‏}‏ وقال للنبي صلى اللّه عليه وسلم ‏{‏وما أرسلناك إلا كافة للناس‏}‏ فأرسله اللّه تعالى إلى الجن والإنس،(تفسير ابن كثير سورة سبا ٢٨)
     இக்ரிமா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:

     "நிச்சயமாக அல்லாஹு தஆலா, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை வானோரை விடவும் மற்ற நபிமார்களை விடவும் மேன்மைப்படுத்தியுள்ளான்" என்று இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் கூறியதை நான் செவியுற்றேன்.

      அப்போது மக்கள்." இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்களே! முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மற்ற நபிமார்களை விட எந்த விஷயத்தில் அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளான்?" என்று வினவினர்.

     அதற்கு இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் பின் வருமாறு பதிலளித்தார்கள்:

     அல்லாஹு தஆலா (மற்ற இறைத்தூதர்களைப் பற்றி குறிப்பிடுகையில்) "எந்த இறைத்தூதர் ஆனாலும், அவர் தம் சமூகத்தாருக்கு (உண்மைகளை)த் தெளிவு படுத்த வேண்டும் என்பதற்காக, அவர்களது மொழி பேசுபவராகவே அவரை நாம் அனுப்பினோம்" (14;4) என்று கூறுகின்றான்.

     ஆனால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது.  (நபியே!) உம்மை நாம் மனிதர்கள் அனைவருக்கும் அனுப்பியுள்ளோம் (34; 28) என்று கூறுகிறான்.

     எனவே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹு தஆலா மனித மற்றும் ஜின் இனத்தார் அனைவருக்கும் பொதுவான தூதராக அனுப்பியுள்ளான்.

தஃப்ஸீர் இப்னு கஸீர் 34;28 வசன விரிவுரை.

No comments:

Post a Comment