இன்று ஒரு செய்தி-110
11/12/16/ஞாயிறு
==========================
பாதுகாக்கப்பட்ட பரிசுத்த வேதம்!
==========================
وهذه قصة عجيبة: قال يحيى بن أكثم : دخل يهودي على الخليفةالمأمون فتكلم فأحسن الكلام فدعاه المأمون إلى الإسلام، فأبى اليهودي، فلما كان بعد سنة جاءنا مسلماً، فتكلم في الفقه فأحسن الكلام، فقال لهالمأمون : ما كان سبب إسلامك؟ قال: انصرفت من حضرتك -أنا لما خرجت من عندك- قبل سنة وأحببت أن أمتحن هذه الأديان، فعمدت إلى التوراة فكتبت ثلاث نسخ فزدت فيها ونقصت وأدخلتها الكنيسة فاشتريت مني -راجت واشتروها آل يهود، اشتروها بسرعة- وعمدت إلى الإنجيل فكتبت ثلاث نسخ، فزدت فيها ونقصت وأدخلتها الكنيسة فاشتريت مني -راجت ونفقت مع أنها محرفة، هو بنفسه حرفها- وعمدت إلى القرآن فعملت ثلاث نسخ فزدت فيها ونقصت وأدخلتها على الوراقين فتصفحوها فلما أن وجدوا فيها الزيادة والنقصان رموا بها ولم يشتروها، فعلمت أن هذا الكتاب محفوظ، فكان هذا سبب إسلامي،
யஹ்யா இப்னு அக்ஸம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியதாவது:
கலீபா மஃமூன் ரஷீத் அவர்களின் அரசவைக்கு ஒரு யூதர் வந்தார். அவர் அழகான முறையில் பேசினார். அந்த யூதரை கலீபா அவர்கள் இஸ்ஸாத்தின் பக்கம் அழைத்தார். அந்த யூதர் மறுத்து விடடார்.
ஒரு வருடத்திற்குப் பின் அந்த யூதர் முஸ்லிமானவராகவும், நன்கு பிக்ஹூ சட்டங்களை பேசுபவராகவும் அரசவைக்கு வந்தார்.
கலீபா அவர்கள் நீங்கள் இஸ்லாமை ஏற்க காரணம் என்னவென்று கேட்டார்.
அதற்கு "நான் ஒரு வருடத்திற்கு முன் உங்கள் சபைக்கு வந்து சென்றபின் இந்த மார்க்கங்களை சோதித்து பார்க்க விரும்பினேன்.
தவ்ராத் மற்றும் இன்ஜீல் வேதங்களில் மூன்று பிரதிகளை எழுதி, அதில் கூடுதல் குறைவுகளைச் செய்து சிலை வணக்கத்தையும் நுழைத்து விற்பனை செய்தேன். யூதர்களும் கிருஸ்தவர்களும் அதை வாங்கினார்கள். வேகமாக விற்பனையானது.
அதே போல் திருக்குர்ஆனில் மாற்றம் செய்து விற்பனை செய்ய நாடிய பொழுது, அதில் மாற்றம் செய்யப்பட்டிருப்பதை கண்டு ஒருவரும் அதை வாங்க முன் வரவில்லை. தூக்கி எரிந்து விட்டார்கள்.
அதன் மூலம் இந்தவேதம் பாதுகாக்கப்பட்டது என்பதை நான் விளங்கிக் கொண்டேன். இதுதான் நான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கு காரணம் என்று அந்த யூதர் கூறினார்.
No comments:
Post a Comment