Tuesday, 13 December 2016

இன்று ஒரு செய்தி-112

இன்று ஒரு செய்தி-112
13/12/16/செவ்வாய்
=====================
உலகத்தின் உண்மை நிலை!
=====================

١٢٨- عَنْ خَالِدِ بْنِ عُمَيْرِنِ الْعَدَوِيِّؓ قَالَ: خَطَبَنَا عُتْبَةُ بْنُ غَزْوَانَؓ ، فَحَمِدَ اللّٰهَ وَأَثْنَي عَلَيْهِ، ثُمَّ قَالَ: أَمَّا بَعْدُ، "فَإِنَّ الدُّنْيَا قَدْ آذَنَتْ بِصُرْمٍ، وَوَلَّتْ حَذَّاءَ، وَلَمْ يَبْقَ مِنْهَا إِلاَّ صُبَابَةٌ كَصُبَابَةِ اْلإِنَاءِ يَتَصَابُّهَا صَاحِبُهَا، وَإِنَّكُمْ مُنْتَقِلُونَ مِنْهَا إِلَي دَارٍ لاَزَوَالَ لَهَا، فَانْتَقِلُوا بِخَيْرٍ مَا بِحَضْرَتِكُمْ." رواه مسلم.
      ஹஜ்ரத் காலிதிப்னு உமைர் அதவிய்யி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுவதாவது:

       “ஒரு முறை எங்களிடையே ஹஜ்ரத் உத்பதுப்னு ஙஸ்வான் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் (பஸராவின் கவர்னராக இருந்த போது) பிரசங்கம் நிகழ்த்தினார்கள்.  அல்லாஹ்வைப் புகழ்ந்து துதித்த பின் சொன்னார்கள்:

         “நிச்சயமாக! உலகம் தான் அழிந்து போவதை அறிவித்துவிட்டது, முதுகைக் காட்டியவண்ணம் விரைந்து செல்கிறது.

      பாத்திரத்தில் எஞ்சியிருக்கும் பானத்தைப் போல, உலக வாழ்க்கையில் கொஞ்சம் தான் எஞ்சியுள்ளது, அந்த எஞ்சிய பானத்தையும் மனிதன் உறிஞ்சிவிடுகிறான்.

       நீங்கள் உலகை விட்டும் நிரந்தரமான அழிவில்லாத வீட்டின் பக்கம் செல்ல இருக்கிறீர்கள்.

       எனவே, உங்களிடம் உள்ளவற்றில் மிக மேலானவற்றை (நல்அமல்களை) எடுத்துக் கொண்டு அவ்வீட்டிற்குச் செல்லுங்கள்!

                              (நூல்: முஸ்லிம்)

No comments:

Post a Comment